Ariyalur

News April 13, 2025

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது – ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய 15 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள் 3 பெண்களுக்கு வழங்கப்படும். ரூ.1 லட்சமும், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கமும் வழங்கப்படும். இதற்கு, அதிகாரப்பூர்வ இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

News April 13, 2025

அரியலூரில் மாவட்டத்தின் வெப்பநிலை தகவல்

image

அரியலூர் மாவட்டத்தின் வெப்பநிலை அரியலூர் 42°c டிகிரி, செந்துறை 39°c டிகிரி, ஜெயங்கொண்டம் 41°c டிகிரி, உடையார்பாளையம் 39°c டிகிரி, ஆண்டிமடம் 39°c டிகிரி, ஆர் எஸ் மாத்தூர் 39°c டிகிரி என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  இந்நிலையில், வெயில் காலங்களில் அதிக தண்ணீர் குடிப்பது, நீர் ஆகாரம் குடிப்பது போன்றவை வெயில் காலங்களில் உடலுக்கு குளிர்ச்சி தரும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News April 13, 2025

தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 Retail Sales Associate பணியிடங்கள் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விருப்பம் உள்ளவர்கள் இந்த லிங்க்கை <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 13, 2025

அரியலூரில் தமிழ் கட்டாயம்

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களிலும் தமிழில் பெயர் பலகை கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் டி.ஆர்.பி. ரத்தினசாமி அறிவித்துள்ளார். மேலும் தமிழ் மற்ற மொழிகளை விட முதன்மை பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் இந்த பெயர் பலகைகள் வைக்க பட வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அபராதமும் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

News April 12, 2025

அரியலூர்: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

News April 12, 2025

இறகு பந்து விளையாட்டு பயிற்சியாளர் பணிக்கு அழைப்பு

image

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு வாரியம் அரியலூர் ஸ்டார் அகாடமி பயிற்சி மையத்திற்கு இறகு பந்து விளையாட்டில் பயிற்றுனர் பணியிடத்திற்கு பயிற்சி வழங்கிட விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான விண்ணப்பங்கள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பெற்றுக் கொள்ளலாம் என்றும், 20ஆம் தேதியே இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உங்க நண்பர்களுகும் SHARE பண்ணுங்க…

News April 12, 2025

அரியலூர் அங்கன்வாடி மையத்தில் காலி பணியிடங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில் 18 அங்கன்வாடி பணியாளர்கள், 24 அங்கன்வாடி உதவியாளர்கள், 4 குறு அங்கன்வாடி பணியாளர்கள் என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் வருகிற 23ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை உடனே வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 12, 2025

அரியலூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று மாலை திடீரென்று சூறைக் காற்றுடன் விடாமல் கனமழை கொட்டித்தீா்த்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டோடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பங்கள் மீது விழுந்தன. மேலும், விளம்பர பதாகைகள் சாலையில் தூக்கி வீசப்பட்டன.

News April 11, 2025

அரியலூர் இரவு நேர ரோந்து காவலர் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் மாவட்டம் முழுவதிலும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப்ரல்-11) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

News April 11, 2025

வாழ்வில் நிம்மதி தரும் கோதண்டராம சாமி கோயில்

image

அரியலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற தலங்களில் இந்த கோதண்டராமசாமி கோயிலும் ஒன்று. இந்த ஆலயத்தில் தசாவதார பெருமாளை தரிசிக்க கூடிய பாக்கியம் கிடைக்கும். இந்த ஆலயத்தில் ஸ்ரீ ராமர், சீதா, லட்சுமணன், அனுமன் ஒரே பீடத்தில் அமர்ந்திருப்பதை தரிசிக்கலாம். இங்கு வழிபட்டால் வாழ்வில் நிம்மதி ஏற்படும். திருமணம் கை கூடாதவர்கள் வழிபட்டால் மனதிற்கு பிடித்த வரன் அமையும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!