Ariyalur

News August 6, 2024

அரியலூர் அரசு பள்ளி மாணவர்களின் சாதனை 

image

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று வட்டார அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் மூன்று பிரிவில் நடைபெற்ற போட்டியில் செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகள் மாணவிகள் கலந்து கொண்டு மூன்று பிரிவுகளில் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் விளையாட்டுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவிகளை பாராட்டி சான்றுதல் பரிசுகள் வழங்கினார்கள்

News August 6, 2024

மாவட்ட ஆட்சியர் பட்டதாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1 இலட்சம் மானியத்துடன் தொழில் தொடங்க விரும்பும் இளங்கலை பட்டதாரிகள் ஆகஸ்ட் 14-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இளங்கலை பட்டப்படிப்பு படித்த இளம் தொழில் முனைவோருக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு 50 சதவீதம் அதிகபட்ச நிதி உதவியாக ஒரு இலட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News August 6, 2024

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய ஆர்எம்ஓ

image

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவர் கொளஞ்சிநாதன் ஆர்எம்ஓவாக பதவி ஏற்றதை தொடர்ந்து இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்டக் கிளை துணைத் தலைவர் எஸ்.எம்.சந்திரசேகர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் ஆசிரியர் சத்தியமூர்த்தி ஆகியோர் இன்று நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

News August 6, 2024

காா் நேருக்கு நோ் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

image

கரூரைச் சோ்ந்த கலைவாணன் அவரது மனைவி மற்றும் மகளுடன் தனது காரில் அரியலூரில் உள்ள உறவினா் வீட்டிற்கு வந்து விட்டு நேற்று ஊா் திரும்பினாா். அப்போது திருச்சி – சிதம்பரம் சாலையில், தென்பாதியைச் சோ்ந்த ரமேஷ் என்பவா் ஓட்டி வந்த காரும், அவரது காரும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில், பலத்த காயமடைந்த கலைவாணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் அவரது மனைவி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தாா்.

News August 5, 2024

அரியலூர்- காவல்துறையினருக்கு பேரிடர் கால பயிற்சி

image

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படை குழுவினரால் 3 நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு தொடங்கியது. இதில் மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் எவ்வாறு மீட்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்ட ஒழுங்கு காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படை காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

News August 5, 2024

அரியலூரில் விவசாயிகளுக்கு பயிர் கடன்

image

அரியலூர் மாவட்ட கூட்டுறவுத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கலந்துகொண்டு கீழப்பழுவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 11 பயனாளிகளுக்கு ரூ.6,50,570 மதிப்பில் பயிர் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News August 5, 2024

அரியலூரில் மாற்றுதிறனாளிகளிடம்  மனுக்கள் பெற்ற ஆட்சியர்

image

அரியலூர் ஆட்சியர் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றார். மேலும் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

News August 5, 2024

அரியலூரில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று அரியலூரில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரியலூர், செந்துறை, ஆண்டிமடம் பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 4, 2024

அரியலூரில் பனை விதைகள் சேகரிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் ஸ்வீட் டிரஸ்ட் பாய்ஸ் சார்பாக பனை விதைகளை சேகரித்து அரியலூர் மாவட்டம் மற்றும் அல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பனை விதையை இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும், மண் அரிப்பை தடுக்கும், சூறாவளி காற்றின் வேகத்தை தடுக்கும் பனைவெல்லம் கிடைக்க பணம் கற்கண்டு சாப்பிட குளிர்ச்சியான நுங்கு சாப்பிட பயன்படும்.

News August 4, 2024

அரியலூர் விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி இலவசம்

image

அரியலூர் மாவட்ட வேளாண் பெருமக்களுக்கு ஆகஸ்ட்-7 புதன்கிழமை அன்று திருச்சி வேளாண் அறிவியல் மையம் சிறுகமணியில் ஒருநாள் வேளாண் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் அரியலூர் மாவட்டத்தில் 100 விவசாயிகள் கிரேடு வேளாண் அறிவியல் மையம் சோழமாதேவி மூலம் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதில் உணவு மற்றும் போக்குவரத்து செலவு இலவசம் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:9791008092,9786379600.

error: Content is protected !!