Ariyalur

News September 7, 2024

ஆண்டிமடம் முந்திரி தோப்பில் ஆண் சடலம்

image

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கீழநெடுவாய் கிராமத்தில் இன்று இரவு அகரம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் முந்திரி தோப்பில் சந்தேகமான முறையில் இறந்து கிடந்தார் தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் நாகராஜன் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு வைக்கப்பட்டது இது குறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 7, 2024

ஆண்டிமடம் முந்திரி தோப்பில் ஆண் சடலம்

image

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கீழநெடுவாய் கிராமத்தில் இன்று இரவு அகரம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் முந்திரி தோப்பில் சந்தேகமான முறையில் இறந்து கிடந்தார் தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் நாகராஜன் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு வைக்கப்பட்டது இது குறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 7, 2024

அரியலூரில் 314 விநாயகர் சிலைகள்

image

விநாயகர் சதுர்த்தி இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 314 விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி வழங்கி உள்ள நிலையில் பக்தர்களால் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

News September 7, 2024

நான் முதல்வன் உயர்வுக்கு படி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

image

அரியலூரில் நான் முதல்வன் “உயர்வுக்குப் படி திட்டம்” தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. 12 ஆம் வகுப்பு தோல்வியடைந்த/தேர்விற்கு /பள்ளிக்குவராத/தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்காக நான் முதல்வன் உயர்வுக்குபடி என்ற திட்ட சிறப்புமுகாம் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

News September 7, 2024

அரியலூர் ஐ.டி.ஐ.,களில் சேர அவகாசம் நீட்டிப்பு

image

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி ஒரு அறிக்கை வெளி யிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:- 2024-ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி சேர்க்கை நடைபெறும் கால அவகாசம் வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும்.

News September 7, 2024

அரியலூர்- ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது இதில் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் நடைபெறுகிறது இதன் ஒட்டி செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது

News September 7, 2024

அரியலூர் ஆட்சியர் வாழ்த்து

image

அரியலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி ஆசிரியர்கள் விரிவுரையாளர்கள் முதுநிலை விரிவுரையாளர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற ஆசிரியர்களை வாழ்த்தினார்.

News September 6, 2024

அரியலூர் ஆட்சியர் தகவல்

image

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள். தேவையான உரங்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. டி.ஏ.பி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சூப்பர் பாஸ்பேட் உரத்தினை பயன்படுத்தும் போது இதில் உள்ள சல்பர் மற்றும் கால்சியம் ஆகியவை பயிர்களுக்கு தேவையான கூடுதல் சத்துக்கள் கிடைக்கும் என ஆட்சியர் தெரிவித்தார்.

News September 6, 2024

கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி புதிய கிளை அமைச்சர் திறந்து வைத்தார்

image

ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் கடைவீதியில் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தின் புதிய கிளையினை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். இதில் வங்கி தலைவர் கல்யாண சுந்தரம், துணைத் தலைவர் ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், வங்கி இயக்குனர் வேலப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News September 6, 2024

அரியலூர் ராணுவ கல்லூரியில் சேர வாய்ப்பு

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இராணுவ கல்லூரியில் 8ஆம் வகுப்பு பயில ஐீலை – 2025 மாதப் பருவத்தில் சேருவதற்கான தேர்வு வருகிற 01 டிசம்பர் 2024 அன்று நடைபெறவுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் என்ற இணையதளத்தில் www.rimc.gov.in பதிவிறக்கம் செய்து அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

error: Content is protected !!