India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு செப்டம்பர்- 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27.09.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
உடையார்பாளையம் அடுத்த எம்.ஆர்.சி அருகே திருச்சி சிதம்பரம் நெடுஞ்சாலையில் இன்று பொட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் சாலையை கடக்கும் போது பின்புறம் வந்த குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே ராமலிங்கம் உயிரிழந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
உடையார்பாளையம் அடுத்த எம்.ஆர்.சி அருகே திருச்சி சிதம்பரம் நெடுஞ்சாலையில் இன்று பொட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் சாலையை கடக்கும் போது பின்புறம் வந்த குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே ராமலிங்கம் உயிரிழந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (ம) மேற்பார்வையாளர்களுக்கு கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு கடமைகள் (ம) பொறுப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது கூட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர்கள் நல வாரியத்தில் பதிவுசெய்துள்ள பெண் தொழிலாளர்களுக்கு சுயமாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் திட்டம் அறிமுகம். அமைப்புசாரா ஆட்டோ ஓட்டுனர் நல வாரியத்தில் உள்ள பெண் தொழிலாளர்கள் தங்களது அட்டை, ஆவணங்களுடன் அரியலூரில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் தொழிலாளர்களுக்கு சுயமாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1,00,000 மானியம் வழங்கப்படும் திட்டம் உள்ளது. எனவே, அமைப்புசாரா ஆட்டோ ஓட்டுநர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் தொழிலாளர்கள் அனைத்து ஆவணங்களுடன் அரியலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையரை நேரில் சந்தித்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வந்தநிலையில், அடுத்து வரும் 7 சனிக்கிழமைகளில் செப் – 21, 28, அக்டோபர் 5, 19, 26, நவம்பர் 9, 23 ஆகிய தேதிகளில் அரை நாள் மட்டும் வகுப்புகளை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களவை தேர்தல் காரணமாக விடுமுறை தினங்களில் மாற்றம் ஏற்பட்டது. அதன் காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அளவில் தமிழக அரசு துணை ஆட்சியர் நிலையில் பணி மாறுதல் செய்து ஆணை பிறப்பித்துள்ளது. இதில் அரியலூர் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன் பணி இடமாற்றம் செய்து மதுரை மாவட்ட ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக செலினி கலைச்செல்விக்கு பதிலாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அரியலூர் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் முத்து முன்னிலை வகித்தனர். இதில் கோரிக்கை அடங்கிய மொத்தம் 668 மனுக்களை தபால் மூலம் அனுப்பிவைத்தனர்.
உடையார்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் கடன்கள் குறித்து கேட்டறிந்தார். திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 07 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.69.70 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.