India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆண்டிமடம் அடுத்த சிலம்பூரை சோ்ந்தவா் கோகுல்ராஜ். கூலித் தொழிலாளியான இவா் 17 வயது சிறுமியை கடந்த 8 மாதங்களுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்ததில் அவா் கா்ப்பிணியானாா். இந்நிலையில் அவரது பெற்றோா் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், கோகுல்ராஜை போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனா். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் (45), எலக்ட்ரீசியன். நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்ற ரவியை, 2 நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து தப்பினர். பின்னர் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முன்விரோத தகராறில் அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (30), கொளஞ்சி ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்தனர். விக்கிரமங்கலம் போலீசார் தமிழரசனை கைது செய்தனர்.
அரியலூா், ஆண்டிமடம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினா் 53 போ் நேற்று கைது செய்யப்பட்டனா். அக்.2-இல் நடைபெறும் மாநாட்டை முன்னிட்டு, ஓலையூா் கிராமத்தில் பதாகை வைக்கப்பட்டிருந்தது. அதனை போலீசார் அகற்றினா். இதுகுறித்து போலீசாரை கண்டித்து ஜெயங்கொண்டம் 4 சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்குச்சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்ட 53 பேரையும் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.
தவெக தலைவர் விஜய் தலைமையில் விழுப்புரம் மாவட்டத்தில் அக்.27ஆம் தேதி முதல் மாநாடு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரியலூர் மாவட்டத்தின் சார்பில் நாளை நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் பங்கேற்கவுள்ளார். அரியலூர் ஆயிரங்கால் மண்டபம் அருகில் எஸ்டி மேரிஸ் மஹாலில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஒப்பந்தம் மற்றும் தின கூலி ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரன் முறை படுத்திட வேண்டும். பொதுத் துறைகள் தனியார்மயமாக்கப்படுவதை உடனடியாக நிறுத்திட வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை காலமுறை ஊதிய திருத்தத்தை உறுதி செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைப்பெற்றது. மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை. ராஜேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் புதிய உறுப்பினர்களின் உரிமை சீட்டுகளை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கபட்டுள்ளதா என உறுதிபடுத்த வேண்டும் என பலவேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கபட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் அறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி 28.09.2024 மற்றும் மாரத்தான் ஓட்டம் 29.09.2024 அன்றும் அரியலூர் மாவட்டத்தில் நடைபெறுவதாக இருந்தது. இப்போட்டிகள் நிர்வாகக் காரணத்தால் ஒத்திவைப்பு என மாவட்ட நிர்வாகம் செய்தி வெளியிட்டனர்
அரியலூர் கீழப்பழுவூர் சாலையிலுள்ள (தற்காலிக பேருந்து நிலையம் அருகில்) என்ஜே மகாலில் கோத்தாரி சர்க்கரை ஆலை சார்பில் கரும்பு சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம் நாளை (செப்-27) நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கில் வேளாண் விஞ்ஞானிகள் கலந்து கொண்டு கரும்பு சாகுபடி தொழில்நுட்பம் குறித்து உரையாற்ற உள்ளனர். மேலும் இயற்கை உரங்கள், வேளாண் கருவிகளின் கண்காட்சியும் நடைபெற உள்ளது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பள்ளிக்கு வராத குழந்தைகளின் எண்ணிக்கை, தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டம் மற்றும் பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை ஆலோசிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. அப்போது மனு கொடுக்க வந்த 22 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜிடம் நேரடியாக தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தபட்டது.
Sorry, no posts matched your criteria.