India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் அக்டோபர்-20 (இன்று) மற்றும் அக்டோபர்-23 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.20-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஷார் செய்யவும்
அரியலூர் அடுத்த தூத்தூர் மற்றும் திருமானூர் போலீசார் இருவேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெயபால், மோகன்ராஜ், பாண்டியன், மணிகண்டன் ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் 20 சவரன் நகை (ம) இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இவர்கள் 4 பேரும் அரியலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சங்கீதா உத்தரவின் படி அரியலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வரும் 23ஆம் தேதி காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
அரியலூர் மாவட்டத்தில் பல இடங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் நடைபெறும் குழந்தை திருமணம் உள்ளிட்டவற்றை குழந்தை பாதுகாப்பு உதவி மையம் 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் சட்டவிரோதமாக நடைபெறும் குழந்தை திருமணத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் கருவுற்ற பெண்களின் பாலினத்தை கண்டறிந்து பெண் சிசு கரு கலைப்பு செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அறிவிப்பு.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை ஒட்டியுள்ள பெட்டிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. மேலும் இது தொடர்பான புகாரினை 9489646744 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
செந்துறை அருகே உள்ளது குழுமூர் கிராமம். இக்கிராமத்தில் உள்ள கடைகளில் பீடி, சிகரெட், புகையிலை, போதை பாக்கு போன்றவற்றை விற்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இந்த கிராம பொது மக்கள் மது, பீடி, சிகரெட் பயன்படுத்துவதில்லை. இதனால் அக்கிராம பெண்கள் பெரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் டெலிகிராம், வாட்ஸ்ஆப் மூலம் தொடர்பு கொண்டு, பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களின் உண்மைத்தன்மை அறியாமல் நம்பி ஏமாறாதீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கி பரிவர்த்தனைக்கான ஓடிபியை பகிர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
அரியலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 2024-2025ஆம் ஆண்டிற்கு இறவை சாகுபடியில் 20 ஏக்கர், மானாவரி சாகுபடியில் 100 ஏக்கர் மற்றும் புல் நறுக்கும் கருவிகள் 40 அலகுகள் வழங்கப்படவுள்ளன. இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில், கால்நடை உதவி மருத்துவரை அணுகி விளக்கங்களை பெற்று 28ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு அக்டோபர்- 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 25.10.2024 வெள்ளிகிழமை அன்று காலை 10.00 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர் முகாம், 19ம் தேதி காலை 10.00 மணிமுதல் மதியம் 01.00 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இந்த முகாமில பொதுமக்கள் நியாயவிலைக் கடைகள் தொடர்பான குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.