Ariyalur

News April 20, 2025

அரியலூர்: கடன் பிரச்னையை தீர்க்கும் பைரவர்

image

அரியலூர் மாவட்டம் தா. பழூர் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கால பைர்வர் சன்னதி அமைந்துள்ளது. பைரவர் சன்னதியில் கடன் பிரச்னை உள்ளவர்கள் மிளகு விளக்கு ஏற்றி வழிபட்டால் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை. அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. கடன் பிரச்னையில் அவதிப்படும் உங்கள் நண்பகள் மற்றும் உறவினர்களுக்கு SHAREபண்ணுங்

News April 20, 2025

அரியலூர்: 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Digital Marketing Manager பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 – 25,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்…

News April 20, 2025

காட்டுப்பன்றிகள் மோதல்: ஒருவர் படுகாயம்

image

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தைச் சேர்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் காசாளராக பணியாற்றி வருபவர் கண்ணன்(54). இவர் நேற்று காலை 10 மணியளவில் அலுவலகத்திற்கு தனது பைக்கில் சத்திரம் கிராமம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென 4 காட்டுப்பன்றிகள் ஓடி வந்து பைக் மீது மோதியது. இந்த விபத்தில் நிலைத்தடுமாறிய கண்ணன் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.

News April 19, 2025

மணிமேகலை விருது மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தகுதியான சுயஉதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகளுக்கும்,கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்கள், பகுதி கூட்டமைப்புகள் மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது என மணிமேகலை விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்

News April 19, 2025

அரியலூர்: கோடைச்சுற்றுலா குடும்பத்தோடு கிளம்புங்க!

image

அரியலூரில் இருந்து 15 கிலோ மீட்ட்ர் தொலைவில் வெளிநாடு நாட்டில் இருந்து அதிகளவு பறவைகள் வரும் இடம் உகரைவெட்டியில் பறவைகள் சரணாலயம் அதிகளவில் நில பறவைகள்,நீர் பறவைகள் செயல்கள் நாம் காணும் போது நம் கண்ணுக்கு அமைதியை ஏற்படுத்தும்,உள்ளுரில் கோடை சுற்றுலா செல்லும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 19, 2025

போக்குவரத்துக் கழகத்தில் வேலை விண்ணப்பிப்பது எப்படி?

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்.,21ஆம் தேதிக்குள் <>இங்கு க்ளிக் செய்து<<>>, ஆன்லைனில் விண்ணப்பிக்க என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். அதில் உங்கள் விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 19, 2025

குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது

image

அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூரைச் சேர்ந்த விக்னேஷ்ராஜ்(26) மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த மாதம் 18ஆம் தேதி  சிற்றுந்து ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடலாம் என்ற காரணத்தால், கீழப்பழூர் காவல் ஆய்வாளர் பரிந்துரையில், மாவட்ட ஆட்சியர் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News April 18, 2025

இரவு ரோந்து போலீசாரின் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை, திருமானூர், மீன்சுருட்டி, தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவசர உதவிக்கு மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள போலீசாரின் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News April 18, 2025

அரியலூர் – ரயில்வே வேலை வாய்ப்பு

image

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.

News April 18, 2025

அரியலூர்: இந்த எண்களை மிஸ் பண்ணாதிங்க

image

அரியலூர் பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைப்பேசி எண்கள்:
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04329 – 228337, 228151, 228336
▶️முதியோர் ஹெல்ப்லைன் – 14567
▶️மகளிர் பாதுகாப்பு – 181, 04329-220230
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️டெங்கு காய்ச்சல் உதவி வாட்ஸ்ஆப் எண் – 8098160003
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.

error: Content is protected !!