Ariyalur

News October 27, 2024

அரியலூர் மாவட்டத்திலிருந்து 252 வாகனங்கள் புறப்பாடு

image

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்காக அரியலூர் நகர் பகுதியில் இருந்து தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு இன்று மட்டும் 6 பஸ், 24 கார், 14 வேன்களில் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர். மேலும் மாவட்டத்தில் இருந்து கடந்த 3 நாட்களில் 252 வாகனங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News October 27, 2024

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 29ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 27, 2024

உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் பெறுவது கட்டாயம்

image

அரியலூர் மாவட்டத்தில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் தற்காலிக இனிப்பு பலகார கடைகள் நடத்துபவர்கள் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தரமான பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்திட வேண்டும் என கலெக்டர் அலுவலகம் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News October 26, 2024

அரியலூர்- தகவல் தருபவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்

image

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கிராமங்களில் சந்தேகத்துக்குரிய நபர்கள் இருப்பதாக கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் கள்ளச்சாராயம், சட்டவிரோத மது, கஞ்சா, குட்கா மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான குற்றம் குறித்து 9489646744 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News October 26, 2024

அரியலூர்- எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 29ம் தேதி மாலை 4.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

News October 26, 2024

அரியலூர்- பேருந்துகளில் எவ்வாறு முன் பதிவு செய்வது

image

தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பயணிகள் முன்பதிவு செய்து சிரமமின்றி பயணிக்கலாம் இதற்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்

எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மொபைல் ஆப் (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம் என கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்

News October 26, 2024

அரியலூர்- மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற அழைப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. அரியலூர் ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 29ம் தேதி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடக்கும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News October 26, 2024

போதைக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம்

image

அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் விளம்பர வாகனத்தின் மூலம் உடையார்பாளையம் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டது. போதை இல்லாத தமிழ்நாடு போதையை தவிர்ப்போம் மகிழ்ச்சி பாதையில் நடப்போம் என்ற கருத்தை மையமாகக் கொண்டு போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதை பொதுமக்கள் பார்த்து விழிப்புணர்வு அடைந்தனர்.

News October 26, 2024

அரியலூர் மாவட்ட மக்களின் கவனத்திற்கு

image

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்து வசதிகள் குறித்து கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி அறிவித்துள்ளார். இதில், அதில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் , தஞ்சாவூர், மற்றும் பட்டுக்கோட்டைக்கு நடைமேடை 9-லும், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நடைமேடை எண் -8-லும் பேருந்துகள் நிற்கும் என தெரிவித்துள்ளார்.

News October 26, 2024

இ-நாம் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை

image

அரியலூர் மாவட்ட விவசாயிகள், இ-நாம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வீட்டுக்கே வந்து விளை பொருட்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமியிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

error: Content is protected !!