India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைக் குறைக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் அரியலூர் மாவட்டம் முழுவதும் தினந்தோறும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (29.10.2024) ரோந்து பணி செல்லும் காவலர்களின் தொலைபேசி என்னை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் சீர்மரபினர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக 07.11.2024 அன்று முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை உறுப்பினர்கள் சேர்க்கை முகாம், அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் குறைதீர்ப்பு கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே மருங்கூர் கிராமத்தை சேர்ந்த பிரேமதாஸ் டிப்ளமோ படித்துள்ளார். இவர் ஆன்லைன் ரம்மி கடன் பிரச்சனையால் கடந்த 26 ஆம் தேதி சாவடி சேனாபள்ளம் என்ற இடத்தில் கலைக்கொல்லி மருந்தை சாப்பிட்டு கீழே கிடந்துள்ளார். இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அரியலூர், நொச்சிக்குளம் ஒப்பில்லாத அம்மன் கோவில் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்து இருப்பதாக அரியலூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் 94981 05056 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHAREIT
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெறும். அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுதிறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 188 மனுக்கள் பெறப்பட்டன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அரியலூர் மண்டலத்திற்கு ஓட்டுனர் உடன் நடத்துனர் பணி காலியிடம் நிரப்புதல் தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் 10.11.2024-க்குள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவிப்பு.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் வாசித்தார், அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். இதில் அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செந்துறை அண்ணாநகரை சேர்ந்தவர் மனோரஞ்சிதம். இவர் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகின்றார். இவர் செந்துறையில் இருந்து ஆர்.எஸ் மாத்தூர் சென்ற போது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ஜீப்பின் பின்னால் மோதி பலத்த காயமடைந்தார். அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் சிகிச்சை பெற்ற நிலையில் மனோரஞ்சிதம் இன்று உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பாக தகவல் தெரிவிப்போர், வழக்குப்பதிவு செய்தல் உள்ளிட்ட முறையீடுகளை 18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
அரியலூரில் அனிதாவின் இறப்பின் போது வீட்டிற்கு வந்த Actor Vijay அண்ணா என்னிடம் சொன்ன அதே வார்த்தைகள் தான் இன்றும் சொல்லியிருக்கிறார். 2017இல் நிச்சயம் அவருக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இருந்திருக்க வாய்ப்பில்லை. தங்களின் ஆறுதலுக்கு என்றும் நன்றியை உரித்தாக்குகிறோம். தங்களின் அரசியல் நுழைவுக்கு வாழ்த்துகள் என அனிதாவின் அண்ணன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.