India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தைப் பொங்கலுக்கு முதல் நாளான போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வீட்டில் வேண்டாத பொருட்களை எரிப்பது வழக்கம் ஆனால் டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் இதர காற்று மாசு ஏற்படுத்தும் கழிவுப்பொருட்களை எரிக்காமல், குப்பைகளை முறைப்படி அகற்றி, போகித் திருநாளை மாசு இல்லாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை ஒட்டி உழவும் மரபும் என்ற தலைப்பில் கலை போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி தமிழர் மரபுகளை காட்சிப்படுத்தும் கோலம், ஜல்லிக்கட்டு, பொங்கல் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் எடுத்துக்காட்டும் புகைப்பட போட்டி நடைபெறுகின்றது. தங்கள் படைப்புகளை ஜன.20ம் தேதிக்குள் சென்னை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அரியலூரில் நடைபெற்ற சாலை விபத்து பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அரியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், அந்த நிகழ்ச்சியை படம் பிடித்த ட்ரோன் கட்டுப்பாட்டை இழந்து கார்த்திகேயன் தலையில் விழுந்தது.
அரியலூர் மாவட்டத்தில் 2,48,876 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கு ஏதுவாக, பொங்கல் பரிசு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களோடு கொடுக்கப்பட்டுள்ள டோக்கன்கள் அடிப்படையில் ரேஷன் கடைகளில் நாளை (ஜன.9) முதல் வரும் 13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற வரும் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பொங்கல் தொகுப்பு வழங்குவது சம்பந்தமாக புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்கள். எண்கள். மற்றும் 1800-425-5901 ஆகிய எண்களிலும், மாவட்ட அளவிலான புகார்களை 9445796402 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில் வினாடி வினா போட்டி அரியலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் 10.01.2025 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவியர்கள் 9499055914 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் எஸ்பி-யாக பணியாற்றிய தீபக் சிவாச் அரியலூர் எஸ்பி-யாக நேற்று (ஜன.06) பொறுபேற்றார். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் எஸ்சி, எஸ்டி வழக்குகள் அதிகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் மற்றும் குடிபோதையில் வாகன இயக்கம் மற்றும் போதை பொருள் கடத்தல், கடத்தல் பொருள் விற்பனை தடுக்கப்படும் என்று கூறினார்.
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில், மாவட்ட மைய நூலகம் சார்பில் இளைஞர் இலக்கிய திருவிழா நேற்று தொடங்கியது. மாவட்ட மைய நூலக அலுவலர் வேல்முருகன் கலந்து கொண்டு, நமது அன்றாட பழக்கமாக வாசிப்பு இருக்க வேண்டும் என கூறினார். முதல் நாளான நேற்று (ஜன.6) பேச்சு, ஓவியம், விநாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் 80 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.
அரியலூர் நகரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில், தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநர் என்றும், அவரை காப்பாற்றும் அதிமுக- பாஜக கள்ள கூட்டணி என்றும், கெட் அவுட் ரவி என்று அரியலூர் மாவட்ட திமுக கட்சியினரால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அரியலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியலூர், உடையார்பாளையம் அருகே உள்ள த.சோழங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சீமான் (50) நேற்று (ஜன.06) காலை புத்தேரி ஓடை அருகே சீமான் உடலில் லேசான காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில், தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது மனைவி புகார் அளித்தன்பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
Sorry, no posts matched your criteria.