India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செந்துறை அருகே குவாகம் கிராமத்தின் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். கோயில் அருகே உள்ள கொளஞ்சிநாதன் தரப்பினருக்குச் சொந்தமான 23 சென்ட் இடத்தை திருவிழா நடைபெறும் போது அப்பகுதி மக்கள் பயன்படுத்துவார்கள். மற்ற நாட்களில் கொளஞ்சிநாதன் தரப்பினர் பயன்படுத்தி வருவது வழக்கம். இந்நிலையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 81 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், 18 பேரை கைது செய்துள்ளனர்.
சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், ஜெயங்கொண்டம் சட்ட மன்ற தொகுதியில் மாதபுரம், காட்டாத்தூர் போன்ற பகுதிகளில் இன்று (05.11.2014) நியாயவிலை கடை, புதிய கட்டிடங்களை திறந்து வைக்கிறார். மேலும் செந்துறை ஒன்றியத்தில் சமுதாய கட்டிடங்களையும் திறந்து வைக்க உள்ளார் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரியலூர் மாவட்ட சவகர் சிறுவர் மன்றம் சார்பாக, மாவட்ட அளவிலான குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் உள்ளிட்ட போட்டிகள் வரும் 10ஆம் தேதி காலை அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் வரும் 10ஆம் தேதி காலை 9.00 மணிக்கு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
கீழப்பழூரில் அமைந்துள்ள ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இன்று (04.11.2024) முதல் இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் தொழில் தொடங்குவதற்கு கடன் உதவிகளும் பெற்று தரப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு 7539960190 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் மற்றும் அலுவலக நேரத்தில் அலுவலகத்தில் நேரில் வந்து விவரங்களை பெற்று செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் அரசாங்கத்தால் மது விற்பனை டாஸ்மாக் நடைபெற்று வருகிறது. இதில் பண்டிகை காலங்களில் அதிகப்படியான மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் (31-10-2024) தீபாவளியன்று ரூ.5 கோடியே 44 லட்சத்து 35 ஆயிரத்து 850 ரூபாய்க்கு மது விற்பனை விற்பனை நடந்துள்ளது.
தா.பழூர்_ சுந்தரேசபுரம் சேர்ந்தவர் அன்புமணி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமாரிடம் 1 வருடத்திற்கு முன்பு 10000 ரூபாய் கடன் வாங்கி உள்ளார். இந்நிலையில் சசிகுமார், முருக பாண்டியன் செங்கமுத்து ஆகியோர் அன்புமணியிடம் பணம் கேட்டு தகராறு செய்து தாக்கியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் சசிகுமார் முருக பாண்டியன், செங்கமுத்து ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமானூர் அருகே சேனாபதி கிராமத்தைச் சேர்ந்த சமுத்திரத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்திக்கும் முன்விரோதம் காரணமாக கலியமூர்த்தி அவரது மகன்கள் சேர்ந்து சமுத்திரத்தை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சமுத்திரம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
தீபாவளியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள 49 மதுபான கடைகளில் ரூ.3,26,61,504 மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மதுபானங்களின் விற்பனை அதிகம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருமானூர் அருகே சேனாபதி கிராமத்தைச் சேர்ந்த தேவியுடன் கார்த்திக் என்பவர் பேசியது குறித்து தேவியின் அண்ணன் சமுத்திரம் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் சிலர் சமுத்திரம் வீட்டிற்கு சென்று திட்டி கத்தியால் குத்தியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக், கலியமூர்த்தி, ஸ்ரீகாந்த், வாஞ்சிநாதன், கதிரவன் ஆகியோரை கைது செய்தனர்.
மீனவர் சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணியில் சேர்வதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயுத்த பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு அரியலூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.