India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மகிழைபுரத்தில் 130 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டையில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் காலணி தொழிற்சாலை அமைப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி வைத்து பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும் இந்த காலணி தொழிற்சாலை மூலம் 15 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி புத்தகம் வழங்கி வழங்கி வரவேற்றார். இதனை பெற்று கொண்ட மு.க. ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு ஜெயங்கொண்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.
அரியலூர் மாவட்டத்திற்கு முதல்வர் வருகையை ஒட்டி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். விமான மூலம் இன்று மாலை திருச்சி வழியாக அரியலூர் வருகிறார். இதன் காரணமாக ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதித்து ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காலை 10 மணி வரை அரியலூர் மாவட்டத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE NOW
தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15ம் தேதி ஜெயங்கொண்டம் மகிமை புரத்தில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் வாரணாசியில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்ட 2ம் கட்ட விரிவாக்கத்தினை துவக்கி வைத்து கொல்லாபுரத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
ஆண்டிமடம் அருகில் இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் பட்டப் பகலில் கோவின் உண்டியலை உடைத்து திருடிய கீழ மாளிகையைச் சேர்ந்த திருமுருகன் தப்பிக்க முயன்ற போது, பொதுமக்களின் முயற்சியால் சுற்றி வளைத்து பிடித்து ஜெயங்கொண்டம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்போர்களுக்கு எழுத்தறிவு தேர்வு கடந்த 10ஆம் தேதி 63 மையங்களில் நடைபெற்றது. இன்று விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி மேற்பார்வையாளர் வீ.அருமைராஜ் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் பயிற்றுநர்கள் இரவிச்சந்திரன், சத்தியபாமா, அகிலா, உத்திராபதி மதிப்பீடு பணியில் ஈடுபட்டிருதனர்.
ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்டசோழபுரத்தில் ராஜேந்திரசோழனால் கட்டப்பட்டு உலகப்புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயத்தில் வரும் 15ஆம் தேதி அன்னாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனையொட்டி அன்னாபிஷேக விழாவிற்கு முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பந்தல் அமைப்பது, பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் ரத்தினசாமி உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடையார்பாளையம், தா.பழுர், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
அரியலூர் மாவட்ட காவல்துறையில் சேர்க்கப்பட்ட நாய்க்குட்டிக்கு திருச்சி மண்டல காவல் தலைவர் கார்த்திகேயன் மோனா என்று பெயர் சூட்டினார் இதில் திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் M.மனோகர் , அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர் மோனா-வை அரியலூர் மாவட்ட காவல்துறை மோப்ப நாய் பிரிவினர் தலைமை காவலர் செல்வகுமாரிடம் பயிற்சிக்காக அளிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.