India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மாசு இல்லாத வகையிலும், புகை இல்லாத வகையிலும் போகிப் பண்டிகையை கொண்டாட மாவட்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளார். எனவே, போகிப் பண்டிகையன்று டயர்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட நச்சுப் பொருள்களை எரிக்காமல், மாசுஇல்லாத வகையில் குப்பைகளை அகற்றி பொதுமக்களின் உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2 நாட்களாக தந்தை பெரியார் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதற்கு பல்வேறு அமைப்பினர், கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செந்துறை காவல் நிலையத்தில் பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் தலைமையில் புகார் மனு அளித்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அரியலூர் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் செந்துறை திருமானூர் மீன்சுருட்டி தா.பழூர் உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவசர உதவிக்கு போலீசாரின் கைபேசி எண் மாவட்ட காவல் அலுவலகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரி+இல்+ஊர்= அரியிலூர். அரி- விஷ்ணு இல்- உறைவிடம் ஊர்- பகுதி. விஷ்ணு உறைவிடம் கொண்ட பகுதி என்பதன் சுருக்கமே அரியிலூர். விஷ்ணு சாந்தி வைணவ வழிபாட்டு கோயில்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதாலும் இவ்வூருக்கு அரியலூர் என்று பெயர் ஏற்பட்டது என்றும் ஹரியலூர் என்ற பெயரே காலப்போக்கில் அரியலூர் ஆக மாறியது என்றும் கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.
அரியலூர் நகர் பகுதியில் பகல் நேரங்களில் கனரக வாகனங்கள் அனுமதிக்க கூடாது என்ற கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், பகல் நேரங்களில் பல்வேறு இடங்களில் கனரக வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி பொருட்களை இறக்குவதால் கடும் போக்குவரத்து ஏற்பட்டு வருகிறது. இதனை சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அரியலூர் வட்டார மையத்தில் மாற்றுத்திறன் மாணவருடைய வளர்ச்சிக்காக வட்டார அளவிலான குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மாணவர்களின் நலன் சார்ந்து விவாதிக்கப்பட்டது கூட்டத்திற்கு வட்டார கல்வி அலுவலர்கள் தலைமை ஏற்று நடத்தினர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் முன்னிலை வகித்தார் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஆண்டிமடம் பகுதிகளில் இன்று (09/01/25) பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. ஜனவரி 3ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு டோக்கன் வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று அரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, கரும்பு 1 வழங்கப்பட்டு வருகிறது. சிலம்பூர்,அழகாபுரம், பட்டினம் குறிச்சி, வரதராஜன் பேட்டை, விளந்தை, ஆண்டிமடம் ,அகரம் ஆகிய பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்மொழியின் சிறப்பை வருங்கால தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பது அனைவரின் கடமை என்றார் அரியலூர் ஆட்சியர் பொ.ரத்தினசாமி.தாய்மொழி அக்கறை கொண்ட இனம் முன்னேற்றமடையும். அந்த வகையில் தொன்மையான மற்றும் பன்னெடுங்காலமாக உள்ள தமிழ் மொழியை மேலும் எடுத்துச் செல்ல வேண்டும். அலுவலகத்தில் தூய தமிழ் மொழியை உபயோகிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட மைய நூலகம் சார்பில் இளைஞர் இலக்கிய திருவிழா 3வது நாள் நிறைவு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மைய நூலக அலுவலர் வேல்முருகன் சிறப்புரையாற்றினார். உடனடி ஹைக்கூ, நூல் அறிமுகம், புத்தக அறிமுக உரை, ஆங்கிலம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் இன்று (ஜன.08) நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் ஆட்சிமொழிச் செயலாக்கம், அரசாணைகள், அலுவலகக் குறிப்புகள் வரைவுகள், செயல்முறை ஆணைகள் குறித்த தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.