India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் அவர்களது உரிமத்தை விட்டுக் கொடுப்பது தொடர்பாக இத்துறையின் வலைதளத்தின் (www.tnpds.gov.in) மூலமாக குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்
அரியலூர் மாவட்டத்தில் நடப்பு 2024- 25 ஆம் ஆண்டில் ராபி மற்றும் சிறப்பு பருவத்தில் நெல் சம்பா பயிருக்கு நவம்பர் 30 ஆம் தேதி வரை பயிர் காப்பீடு செய்து கொள்ள அரசால் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு, சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயனடையுமாறு விவசாயிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
அரியலூர் மாவட்ட சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்கான தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன. இதனை உரிய ஆவணங்களுடன் அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் நவ.26 முதல் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் அருகே ரெட்டிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள சிமெண்ட் ஆலை முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த கயர்லாபாத் போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்தவிசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில், மாவட்ட அளவில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டத்தினை 29.11.2024 வெள்ளி கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்ட, ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் எதிர் வரும் 06.12.2024 வெள்ளி கிழமை அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தெரிவிக்கப்படுகிறது.
செந்துறை ஒன்றியம், உஞ்சினி அரசு பள்ளியில் “தேர்வை வெல்வோம்” என்ற 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டி வினா விடை தொகுப்பிணை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் இன்று வழங்கினார். இந்த நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செந்துறை ஒன்றிய செயலாளர் செல்வராஜ் மற்றும் எழில்மாறன் ஆசிரியர் பெருமக்கள், மாணவ செல்வங்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் செயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கல்வி கடன் உள்ளிட்டவைகளை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் செயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கல்வி கடன் உள்ளிட்டவைகளை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் செயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கல்வி கடன் உள்ளிட்டவைகளை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறும், மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.