India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரி+இல்+ஊர்= அரியிலூர். அரி- விஷ்ணு இல்- உறைவிடம் ஊர்- பகுதி. விஷ்ணு உறைவிடம் கொண்ட பகுதி என்பதன் சுருக்கமே அரியிலூர். விஷ்ணு சாந்தி வைணவ வழிபாட்டு கோயில்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதாலும் இவ்வூருக்கு அரியலூர் என்று பெயர் ஏற்பட்டது என்றும் ஹரியலூர் என்ற பெயரே காலப்போக்கில் அரியலூர் ஆக மாறியது என்றும் கூறப்படுகிறது. தெரியாதவங்களுக்கு உங்க ஊர் பெருமையை SHARE பண்ணுங்க..
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகநாதன்(27) என்பவர் மீது ஏற்கனவே 20 குற்ற வழக்குகள் உள்ள நிலையில், கடந்த மாதம் 14-ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தா(68) என்பவருடைய வீட்டில் 48 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை திருடி சென்றதாக சண்முகநாதன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது சண்முகநாதன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது
உடையார்பாளையம் கச்சிபெருமாள் கிராமத்தை சேர்ந்த வசந்தா வீட்டில் (48) சவரன் நகை ஒரு லட்சம் பணம் ஒரு கிலோ வெள்ளி ஆகியவை கொள்ளையடித்தது குறித்து கடந்த 18ம் தேதி உடைய பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகங்கை மாவட்டம் கீழ் குளத்தை சேர்ந்த சண்முகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி பரிந்துரையின் பேரில் ஆட்சியர் உத்தரவிட்டார்.
அரியலூரில் மார்ச் 20 முதல் 29 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும். இந்தக் கண்காட்சியை மாவட்ட நிர்வாகம், தமிழ் பண்பாட்டுப் பேரமைப்பு, பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்குநரகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்கிறது. அரியலூரில் உள்ள வாலாஜாபாத்தில் உள்ள அன்னலட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
2018 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆ. ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை அவர் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி ஜி. கே. இளந்திரையன் வழக்கை விசாரணை நடத்தி, அரசியல் காரணமாக வழக்கு தொடரப்பட்டது என்று கருதி, அதை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முதல் வழக்கில், 2020 ஆம் ஆண்டு குடும்பத் தகராறில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மற்றொரு வழக்கில், கடன் விவகாரத்தில் ஏற்பட்ட கொலை சம்பவத்தில் 4 பேருக்கு தண்டனை பெற்றனர். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தீர்ப்பை வரவேற்றனர்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற சமூக மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு இலவச பயிற்சி வகுப்பை நடத்துகிறது. இதற்கு குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.4 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயிற்சியில் சேரவிருப்பம் உள்ள மாணவர்கள் <
அரியலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு மருத்துவ சேவை நிலையங்களில் பணிபுரிய மருத்துவ அலுவலர், பல்நோக்கு சுகாதார மேற்பார்வையாளர், செவிலியர் அடிப்படை பணியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு 4 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 24.3.2025 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு இங்கே <
தமிழ்நாடு ஆதித் திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, தாட்கோ வாயிலாக, புத்தாக்க பொறியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு, 21 முதல், 25 வயதுக்கு உட்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள், லிங்க் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் அருகே வாவஜாநகரம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரியலூர் மாவட்ட நிர்வாகம் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் சார்பில் எட்டாவது புத்தகத் திருவிழா இன்று தொடங்கி 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
Sorry, no posts matched your criteria.