Ariyalur

News April 23, 2025

அரியலூர் அங்கன்வாடி பணியாளராக கடைசி வாய்ப்பு

image

ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையத்தில் 18 அங்கன்வாடி பணியாளர்கள், 4 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 24 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது. இதற்கு, <>அதிகாரபூர்வர் இணையத்தில்<<>> விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்.23) கடைசி நாள் இதை SHARE பண்ணுங்க…

News April 22, 2025

அரியலூர்- வரும் ஏப்.25 சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம்

image

ஆண்டிமடம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 25ம் தேதி சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர். மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News April 22, 2025

அரியலூர்: வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தொடர்பு எண்கள்

image

அரியலூர் மாவட்டத்தின் வட்டார ஊராட்சியின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தொடர்பு எண்கள் ▶திருமானூர் வட்டார ஊராட்சி: 7402607749, ▶அரியலூர் வட்டார ஊராட்சி: 7402607746, ▶செந்துறை வட்டார ஊராட்சி: 7402607753, ▶தா.பழூர் வட்டார ஊராட்சி: 7402607764, ▶ஜெயங்கொண்டம் வட்டார ஊராட்சி: 7402607757, ▶ஆண்டிமடம் வட்டார ஊராட்சி: 7402607761. இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க…

News April 22, 2025

அரியலூர்: பெயர் பலகை தமிழில் வைக்க வலியுறுத்தல்

image

அரியலூர் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் வணிகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் பொறுப்பு ஆணையர் அசோக்குமார் பேசும்போது, “அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் சட்டத்தில் வரையறை செய்துள்ளவாறு தமிழில் பெயர்ப் பலகை வைக்கவேண்டும். தமிழ் பெயர் பலகையானது மற்ற மொழிகளைவிட முதன்மையாகவும் பெரிய அளவிலும் பொதுமக்களுக்குப் புரியும் வண்ணம் அமைக்கப்பட வேண்டும்” என கூறினார்.

News April 21, 2025

இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் – 21) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

News April 21, 2025

அரியலூர்: குளிப்பது தெரியாத கிணறு- தெரியுமா?

image

ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு இருக்கும்,சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும்,அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம்,ஆனால் மேலே இருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது,கங்கை கொண்ட சோழபுரம் சென்றால் இந்த இடத்தை MISS பண்ணாதீங்க,SHARE IT.

News April 21, 2025

அரியலூர்: ரூ.1,12,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பதவியின் கீழ் மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது,10th, 12th, டிப்ளமோ,பட்டப்படிப்பு படித்த 18 – 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும் cpcb.nic.in/jobs.php என்ற இணையத்தில் விண்ணப்பிக்கவும்.SHARE IT

News April 21, 2025

அரசு பேருந்து நடத்துநர், ஓட்டுநர் வேலை வாய்ப்பு

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. அதன்படி, கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள்<> இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கு இன்றே (ஏப்.21) கடைசி நாள். எனவே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…

News April 21, 2025

விக்கிரமங்கலம் அருகே கார் மோதி மூதாட்டி பலி

image

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உல்லியக்குடியைச் சேர்ந்தவர் சரோஜா(80). இவர் தனது வீட்டின் வாசலில் இருந்தபோது, அந்த வழியாக சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மூதாட்டி சரோஜா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த வெண்மான் கொண்டான் வடக்கு தெருவை சேர்ந்த சரத்குமார் (25) என்பவரை கைது செய்தனர்.

News April 20, 2025

அரியலூரில் பயிற்சி முகாம்; கலெக்டர் அறிவிப்பு

image

அரியலூரில் 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் 21 நாட்கள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வரும் ஏப்.25 முதல் மே.25 வரை நடைபெறுகிறது. இதில், அரியலூர் மாவட்டத்தை சார்ந்த 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் மாணவர் அல்லாதவர் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பொ. இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!