India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதுபோல் இன்று திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மக்கள் தங்கள் சொந்த பிரச்சினை மற்றும் பொது சார்ந்த பிரச்சினைகளை மனு மூலம் அலுவலர்களுக்கு தெரிவிக்கலாம். இந்த குறைதீர் கூட்டமானது அங்கு உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
வாட்ஸ் ஆப் மற்றும் குறுந்செய்திகளில் வரும் SBI Rewards points பெற அல்லது SBI Aadhar update செய்ய இந்த APK files பதிவிறக்கம் செய்து தகவலை பூர்த்தி செய்யுங்கள் என்று வரும் எந்த ஒரு செய்தியும் நம்ப வேண்டாம். பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இந்த APK files பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்படும் என்று அரியலூர் காவல்துறையினர் மக்களுக்கு இணையதளம் மூலம் அறிவுறுத்தியுள்ளனர்.
தா.பழூர் அருகே இடங்கண்ணி கிராமத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் தமிழக அரசின் சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கிளை செயலாளர் நாகரத்தினம் வரவேற்புரை ஆற்றினார். இதில் பாஸ்கரன், திருமேனி, சுபா.சந்திரசேகர், கலா சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர் இராமதுரைசூசைராஜ் சாமிதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் கொண்டனர்.
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், வாராந்திர சிறப்பு விசாரணை முகாம், மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராஜ் காவல் தலைமையில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்றது. இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் 19 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுகிறது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இலைகடம்பூர் ரயில்வே சுரங்கப்பாதையில் நீர் சூழ்ந்துள்ளது. பத்துக்கு மேற்பட்ட கிராம பொதுமக்கள் பாலத்தைக் கடந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. வாகனங்கள் சில நேரங்கள் பழுதாகி நின்று விடுகின்றன. பேருந்து இதனால் வருவதும் இல்லை. ரயில்வே துறையும் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் பருவமழை தொடர்பாக தகவல்கள் புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பேரிடர் அவசர கால கட்டுப்பாட்டு மையத்தினை கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் மழையின் காரணமாக ஏரிகளில் நீர் நிரம்பியுள்ளது. எனவே பொதுமக்கள் ஏரிகள் மற்றும் குளங்களின் அருகே குழந்தைகளை செல்லவோ, விளையாடவோ அனுமதிக்க கூடாது, ஏரிகள் மற்றும் குளங்களில் குளிப்பதற்காகவோ மற்றும் துணிகள் துவைப்பதற்காகவோ இறங்க வேண்டாம், மழைநீரினால் நனைந்துள்ள மின்கம்பங்களை தொடவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் குற்றம் சம்பவங்களை குறைக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் அரியலூர் மாவட்டம் முழுவதும் தினந்தோறும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (13.12.2024) ரோந்து பணி செல்லும் காவலர்களின் தொலை பேசி என்னை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
அரியலூர் அருகே பெரிய திருக்கோணம் மருதையாற்றின் நடுவில் ஒரு குழந்தை உள்ளிட்ட 7 பேர் சிக்கிக் கொண்டனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சிக்கிக்கொண்ட ஒரு குழந்தை உள்ளிட்ட ஏழு பேரை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி நிவாரண பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அமராவதி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 36 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொள்ளிட ஆற்றில் நாளை 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எனவே கொள்ளிட கரையோர ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என்றும், பொது மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.