India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் இல்லங்களை அலுவலர்கள் முறையாக ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர் பொ. ரத்தினசாமி அறிவுறுத்தினார். ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அனைத்து குழந்தைகள் இல்லங்களிலும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். மாவட்ட அளவிலான ஆய்வுக்குழு மற்றும் பல்துறை பணிக்குழு ஆகியவை குழந்தைகள் இல்லத்தில் ஆய்வு செய்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தினார்.
அரியலூர் நெல் சாகுபடியில், திருந்திய நெல் சாகுபடி தொழில் தொழில்நுட்பத்தை மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது மற்றும் ரூ. 5 லட்சம், ரூ.3,500 மதிப்புடைய வெள்ளிப் பதக்கம் சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் பகுதியில், காரக்பூர் இந்திய தொழில்நுட்ப கழக புவியியல் பிரிவு ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கண்டெடுத்த புதைப்படிவங்களை ஆட்சியர் பொ. ரத்தினசாமியிடம் வழங்கினர். இந்த கண்டறிந்த புதைப்படிவங்களை அருங்காட்சியகத்துக்கு பார்வையிட வரும் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிந்துகொள்ள ஏதுவாக 10-க்கும் மேற்பட்ட புதைப்படிவங்களை ஆட்சியரிடம் வழங்கினர்.
சிறிய முதலீடுகளின் மூலம் அதிக வருமானத்தை ஈட்டலாம் என்று கூறும் எந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தையும் நம்ப வேண்டாம். இயல்பை விட அதிகமான வருமானத்தை தருவதாக உறுதியளிக்கும் தவறான மற்றும் ஏமாற்றும் முதலீட்டு வாய்ப்புகளை நம்பாதீர்கள். குறுஞ்செய்தி, சமூக வலைதளம், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் வரும் கவர்ச்சிகரமான விளம்பரம் ஆகியவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என்று அரியலூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரியலூர் மாவட்டம், தூத்தூர் அருகே கீழராமநல்லூர் கிராமத்தில் உள்ள அரியதங்கம் கோவில் அருகே மணல்திட்டு பகுதியில் நேற்று (டிச.23) மாலை 5.30 மணியிலிருந்து ராட்சத முதலை ஒன்று உலாவி வருவதை அப்பகுதி மக்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு மக்கள் தகவல் அளிக்கவே தீயணைப்பு வீரர்கள் முதலையை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதுபோல் இன்று 23/12/2024 மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மக்கள் தங்கள் சொந்த பிரச்சினை மற்றும் பொது சார்ந்த பிரச்சினைகளை மனு மூலம் அலுவலர்களுக்கு தெரிவிக்கலாம். இந்த குறைதீர் கூட்டமானது ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
தேசிய கால்நடைநோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் மணக்குடி கிராமத்தில் இன்று நடைப்பெற்றது. இதில் 73 விவசாயிகள் தங்களுடைய 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பின்னர் கோமாரி நோய் பற்றியும், அதனை தடுப்பதற்கான முறைகள் குறித்தும் எடுத்து கூறப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை வரை அரியலூரில் 10 மி.மீ.யும், திருமானூரில் 5.4 மி.மீ.யும், குருவாடியில் 11 மி.மீ.யும் மழை பெய்துள்ளது. அதன்படி மாவட்டத்தின் மொத்தமாக 26.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சராசரி மழையளவு 3.30 மி.மீ. பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் மழையை விட இந்தாண்டு டிசம்பர் மாதம் மழை அதிகமாக பெய்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் தொழில் நிறுவன உரிமம் பெற ஒற்றை சாளர இணையதளத்தில் தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கும் விரிவுப்படுத்துவதற்கும், பல்வகை உரிமங்கள் கோரும் விண்ணப்பங்களை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு WWW.TNSWP.COM என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே, தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில், ஏற்றுமதி பொருட்கள் ஊக்குவிப்பு குழுக்கூட்டம் மற்றும் உதயம் பதிவு குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் விளையும் பொருட்களான முந்திரி, முருங்கை, ஆய்த்த ஆடைகள், சிறுதானியங்கள் ஆகிய மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் ஏற்றுமதி செய்வது தொடர்பான விபரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.