India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசு வழங்கும் பிரதமர் கௌரவ உதவித்தொகை உண்மையான விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் இணையவழியில் பதிவு செய்து, தேசிய அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு 20-வது தவணை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே தேசிய அடையாள எண் பெறாத விவசாயிகள் உடனடியாக இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். SHARE IT NOW
அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தாட்கோ மூலம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டியூட்டில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள மாணவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்திற்கு புதிய அரசு தொழில் பயிற்சி நிலையம் தமிழக அரசு பட்ஜெட் தாக்களில் அறிவிப்பு தமிழக அரசின் இன்றைய பட்ஜெட் தாக்களில் 152 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்க பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதில் 1308 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் அரியலூர் மாவட்டம் தா பழூரில் 1 அரசு தொழில் பயிற்சி நிலையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், சலுப்பை கிராமத்தின் எல்லையில் பழங்கால யானை சுதை சிற்பம் ஒன்று உள்ளது. வெல்லம், கடுக்காய் மற்றும் சுண்ணாம்புக் கலவையால், சுட்ட செங்கற்களை கொண்டு 33 அடி நீளமும், 12 அடி அகலமும், 60 அடி உயரமும் கொண்ட அந்த யானை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை சிற்பமாக காட்சியளிக்கிறது. இந்த சுதை சிற்பத்தை தமிழக தொல்லியல் துறை புராதன சின்னமாக 2020ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அம்புரோஸ் (68) என்பவர் 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டு, இவ்வழக்கின் விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட முதியவர் அம்புரோசுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்டவை ஆன்லைன் மூலமாக செய்யப்படுகிறது. எனவே குடும்ப அட்டை குறித்த தகவல்களை மேற்கொள்ள இடைத்தரகர்களிடமோ இ சேவை மைய அலுவலர்களிடமோ கையூட்டு எதுவும் கொடுத்து ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற அரசு திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, மார்ச் மாதம் 19 மற்றும் 20 ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் 19 ஆம் தேதி ஆண்டிமடம் வட்டாச்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து மனுக்கள் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுகாதாரத்துறையின் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.18,500 முதல் ரூ.23,000 வரையிலான சம்பளத்தில், 8 முதல் பட்டபடிப்பு அளவிளான இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மார்ச் 20-ம் தேதிக்குள் இதற்கான இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
அரியலூர் மாவட்டத்தில் 201 ஊராட்சிகள் அமைந்துள்ளன. மாவட்டம் முழுவதும் 201 ஊராட்சிகளிலும் மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தன்று நடக்கவுள்ள கிராம சபை கூட்டத்தில், மழை நீரை சேகரித்தல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல் தொடர்பாக விவாதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்தும், விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே நாச்சியார்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்த கூலி தொழிலாளி சவுந்தரராஜன்(38) விளாங்குடி நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் தனது பைக்கில் சென்றபோது சாலையோரத்திலிருந்த தடுப்புச்சுவரில் எதிர்பாராத விதமாக மோதி, படுகாயம் அடைந்த சவுந்தரராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கயர்லாபாத் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.