Ariyalur

News March 24, 2025

அரியலூர்: 220 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு

image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூரில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மாவட்ட அலுவலர் அன்பரசி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் 220 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தினர்.

News March 24, 2025

மாநிலத்தின் பெரிய ஏரியைகொண்ட அரியலூர்

image

கரைவெட்டி பறவைகள் சரணாலயம் அடிப்படையில் ஒரு பாசன ஏரியாகும். மேலும் இச்சரணாலயம், புலம்பெயரும் நீர்ப்பறவைகளுக்கான, தமிழ்நாட்டிலுள்ள மிக முக்கியமான நன்னீர் ஏரிகளுள் ஒன்றாகவும், மாநிலத்தின் பெரிய ஏரிகளுள் ஒன்றாகவும், மாநிலத்தின் மிக அதிக அளவிலான நீர்ப்பறவைகள் வந்து கூடும் இடமாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 24, 2025

சோழர் காலத்தை பறைசாற்றும் அரியலூர்!

image

சோழர் ஆட்சியில் பழுவேட்டரையர்கள் அரியலூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர். மேலும் அரியலூர், 450க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழர் காலத்தை பறைசாற்றும் விதமாக உள்ளன. அரியலூர் மாவட்டம் ஒரு தொல்லுயிர் விலங்கியல் பூங்காவாகத் திகழ்வதுடன் புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை கமெண்ட் செய்ங்க, உங்க ஊர் பெருமையை SHARE பண்ணுங்க…

News March 24, 2025

மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி

image

அரியலூர் மாவட்டம் திருமானூரைச் சேர்ந்த கூலி தொழிலாளி சிலம்பரசன்(30) என்பவர் நேற்று காலை இயற்கை உபாதை கழிக்க கரும்பு வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை சிலம்பரசன் பார்க்காமல் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 23, 2025

அரியலூர் பெயர் காரணம் தெரியுமா?

image

அரி+இல்+ஊர்= அரியிலூர். அரி- விஷ்ணு இல்- உறைவிடம் ஊர்- பகுதி. விஷ்ணு உறைவிடம் கொண்ட பகுதி என்பதன் சுருக்கமே அரியிலூர். விஷ்ணு சாந்தி வைணவ வழிபாட்டு கோயில்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதாலும் இவ்வூருக்கு அரியலூர் என்று பெயர் ஏற்பட்டது என்றும் ஹரியலூர் என்ற பெயரே காலப்போக்கில் அரியலூர் ஆக மாறியது என்றும் கூறப்படுகிறது. தெரியாதவங்களுக்கு உங்க ஊர் பெருமையை SHARE பண்ணுங்க..

News March 23, 2025

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

image

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகநாதன்(27) என்பவர் மீது ஏற்கனவே 20 குற்ற வழக்குகள் உள்ள நிலையில், கடந்த மாதம் 14-ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தா(68) என்பவருடைய வீட்டில் 48 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை திருடி சென்றதாக சண்முகநாதன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது சண்முகநாதன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது

News March 22, 2025

இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

உடையார்பாளையம் கச்சிபெருமாள் கிராமத்தை சேர்ந்த வசந்தா வீட்டில் (48) சவரன் நகை ஒரு லட்சம் பணம் ஒரு கிலோ வெள்ளி ஆகியவை கொள்ளையடித்தது குறித்து கடந்த 18ம் தேதி உடைய பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகங்கை மாவட்டம் கீழ் குளத்தை சேர்ந்த சண்முகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி பரிந்துரையின் பேரில் ஆட்சியர் உத்தரவிட்டார்.

News March 22, 2025

அரியலூரில் மார்ச் 20 முதல் 29 வரை “புத்தகக் கண்காட்சி”

image

அரியலூரில் மார்ச் 20 முதல் 29 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும். இந்தக் கண்காட்சியை மாவட்ட நிர்வாகம், தமிழ் பண்பாட்டுப் பேரமைப்பு, பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்குநரகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்கிறது. அரியலூரில் உள்ள வாலாஜாபாத்தில் உள்ள அன்னலட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

News March 22, 2025

முன்னாள் அமைச்சர் மீது வழக்கு ரத்து – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

image

2018 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆ. ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை அவர் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி ஜி. கே. இளந்திரையன் வழக்கை விசாரணை நடத்தி, அரசியல் காரணமாக வழக்கு தொடரப்பட்டது என்று கருதி, அதை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

News March 22, 2025

அரியலூர் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை

image

அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முதல் வழக்கில், 2020 ஆம் ஆண்டு குடும்பத் தகராறில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மற்றொரு வழக்கில், கடன் விவகாரத்தில் ஏற்பட்ட கொலை சம்பவத்தில் 4 பேருக்கு தண்டனை பெற்றனர். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தீர்ப்பை வரவேற்றனர்.

error: Content is protected !!