India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ளது, அருந்தவ நாயகி உடனாய ஆலந்துறையார் கோயில். இங்குள்ள மூலவர் ஆலந்துறையார், அருந்தவநாயகி ஆவர். சிவபெருமானை பிரிந்து சென்ற பார்வதி தேவி இங்கு தவம் செய்து மீண்டும் சிவபெருமானுடன் சேர்ந்தார். ஆகையால் இங்கு வழிபட்டால் பிரிந்த தம்பதியரும் சேருவர் என கூறுகின்றனர். மேலும் இங்கு வழிபட்டால் மாத்ருஹத்தி தோஷம், திருமணத் தடை போன்றவையும் நீங்கும் என்கின்றனர். இதை பகிரவும்
தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை <
ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் (42). இவர் கூலி வேலைக்காக மேலமைக்கேல்பட்டி கிராமத்திற்கு சென்றபோது, அங்குள்ள ஒரு வீட்டில் திருடுவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த வீட்டில் இருந்த 95 வயது மூதாட்டி சத்தமிட்டு உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளார். இதனால் அந்த மூதாட்டியை தாக்கியுள்ளார்.அப்போது பொதுமக்களே அவரை பிடித்து கட்டி வைத்து தா.பழூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (மார்ச்-31) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அரியலூர் அடுத்த திருமழப்பாடி வைத்தியநாத சாமி கோயில் 1000 ஆண்டு பழமையானதாகும். இக்கோயிலின் தல விருட்சம் பனை மரமாகும். சிவன் முன் நிற்கும் நந்திக்கு இங்குதான் திருமணம் நடைபெற்றதாம். மேலும் காய்ச்சாலால் பாதிக்கபட்டால் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வணங்கி பூஜை செய்வர். இங்குள்ள ஜூரகருக்கு புழுங்கல் அரியில் ரசம் சாதம் படைத்து வழிபட்டால் தீரா காய்ச்சலும் குணமாகும் என நம்பப்படுகிறது. இதை பகிரவும்
அரியலூர் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார், அரியலூர் மாவட்ட காவல் தனிப்பிரிவு அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அவர், தனிப்பிரிவு அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகள் ஆவணங்களை ஆய்வு செய்தபோது அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் உடன் இருந்தார். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்திலும் ஆய்வினை மேற்கொண்டார்.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ படையில் ஆள்சேர்க்கும் அறிவிப்பை திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட, 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத இளைஞர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் joinindianarmy.nic என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்!
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வக்குமார்(35) சுத்தமல்லி பிரிவு சாலை பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற அரசு பேருந்து, அவர் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள அம்பலவர்கட்டளை கிராமத்தில் காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் உள்ளது. திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலுக்கு அடுத்ததாக நவகிரகங்கள் அமைக்கப்படாமல் சனீஸ்வர பகவானுக்கு மட்டும் தனி சன்னதி உள்ளது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் சனிப்பெயர்ச்சியன்று இங்குள்ள சனீஸ்வரரை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி, செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது. SHARE NOW!
Sorry, no posts matched your criteria.