Ariyalur

News August 19, 2025

அரியலூரில் போதைப் பொருளுக்கு எதிரான குழு அமைப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் போதைப் பொருளுக்கு எதிரான குழு பள்ளி மற்றும் கல்லூரிகளில் என மொத்தம் 181 கல்வி நிறுவனங்களில் செயல்பட்டு வருகிறது. இவை அனைத்தும் 100% அரசு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாணவர்களிடையே போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து அரியலூர் மாவட்ட காவல்துறையினர் உடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

News August 19, 2025

அரியலூர்: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

image

அரியலூர் மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த<> லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க! <<17451974>>தொடர்ச்சி<<>>

News August 19, 2025

என்ன சான்றுகளை பெறலாம்? (பாகம் – 2)

image

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News August 19, 2025

அரியலூர்: ரூ.64,000 சம்பளத்தில் வங்கியில் வேலை!

image

தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 894 Customer Service Associates (Clerk) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 28 வயதிற்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.24,050- 64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து வருகிற ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் பண்ணுங்க!

News August 19, 2025

அரியலூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

அரியலூர் மின்கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இன்று (ஆக.19) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அரியலூர் கோட்ட மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயனடையுமாறு செயற்பொறியாளர் அய்யனார் தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

அரியலூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

அரியலூர் மின்கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இன்று (ஆக.19) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அரியலூர் கோட்ட மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயனடையுமாறு செயற்பொறியாளர் அய்யனார் தெரிவித்துள்ளார்.

News August 18, 2025

அரியலூர் மாவட்ட இரவு ரோந்து காவலர் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், தினந்தோறும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், இன்று (ஆக.18) அரியலூர் பகுதியில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர் பெயர் விவரம் மற்றும் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு இவர்களை அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News August 18, 2025

அரியலூர்: திருமணத் தடையா? கவலை வேண்டாம்!

image

அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழுவூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆலந்துறையார் திருக்கோயில் திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவர் ஆலந்துறையாருக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்க நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News August 18, 2025

அரியலூர்: சொத்து வாங்கும் போது இதை கவனிங்க.!

image

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து CHECK செய்து வாங்குங்க. SHARE பண்ணுங்க..

News August 18, 2025

பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள அறிவுறுத்தல்

image

அரியலூர் மாவட்டம் காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகள் சாலையில் பொது மக்களுக்கு இடையூறு மற்றும் விபத்து ஏற்படுத்தும் வண்ணம் வாகனங்களை இயக்குவது, அதிவேகமாக ஓட்டுவது, பொது சாலையில் சாகசம் செய்வது முதலியவை போக்குவரத்து விதிமீறல் மற்றும் குற்றமாகும் எனவும், இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!