Ariyalur

News March 26, 2025

செல்லப்பிராணிகள் கண்காட்சி அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும் புத்தக திருவிழாவின் 6ஆம் நாளான இன்று செல்லப்பிராணிகள் கண்காட்சி நடைபெற உள்ளது. நாளை கால்நடைகளின் கண்காட்சியும் நடைபெற உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள செல்லப் பிராணிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கண்காட்சியில் கலந்து கொள்வார்கள். மேலும், உரிமையாளர்களுக்கு பங்கேற்பதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 26, 2025

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் உள்ள AAY மற்றும் PHH பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் 31.03.2025-க்குள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள நியாயவிலைக்கடைகள் செயல்படும் வேலை நாட்களில் அனைத்து குடும்ப அட்டை உறுப்பினர்களின் கை விரல் ரேகையினை பதிவு செய்யுமாறு, அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News March 26, 2025

அரியலூர் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்வு

image

அரியலூர் நகராட்சி விரிவாக்கம் செய்யும் வகையில் நகராட்சியை ஒட்டி உள்ள 3 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு 2ஆம் நிலை நகராட்சியாக இருந்த அரியலூர் நகராட்சியை முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இதனால் அரியலூர் நகராட்சிக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 26, 2025

இன்று செல்லப்பிராணிகள் கண்காட்சி

image

அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும் புத்தக திருவிழாவின் 6ஆம் நாளான இன்று செல்லப்பிராணிகள் கண்காட்சி நடைபெற உள்ளது. நாளை கால்நடைகளின் கண்காட்சியும் நடைபெற உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள செல்லப் பிராணிகள் (ம) கால்நடை வளர்ப்போர் கண்காட்சியில் கலந்து கொள்வார்கள். மேலும்,   உரிமையாளர்களுக்கு பங்கேற்பதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

News March 25, 2025

இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம் 

image

அரியலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (25/03/2025) செவ்வாய்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் காவல் அதிகாரிகள் விவரம் மற்றும் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

News March 25, 2025

அரியலூர் ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்

image

அரியலூர் ஆட்சியர் கூட்டரங்கில் காசநோய் ஒழிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காசநோய் இல்லாத ஊராட்சி என கண்டறியப்பட்டுள்ள 18 கிராம ஊராட்சிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும், மாவட்டத்தில் காசநோய் ஒழிப்பு பணியில் சிறப்பாக சேவைபுரிந்த 38 தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேனிங் மையங்களைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

News March 25, 2025

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் கோரிக்கை

image

ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய வளாகத்தில் மாவட்ட நேரடி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்,108 ஆம்புலன்ஸில் 6 ஆயிரத்திற்கும் மேல் தொழிலாளிகள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்த வேண்டும். மேலும் இந்த ஆண்டு ஊதிய உயர்வை 30 சதவீதம் வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News March 25, 2025

திருமானூர் அருகே பைக் மோதி வாலிபர் பலி

image

திருமானூர் அடுத்த அன்னிமங்கலம் அசோக் நகரைச் சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டரான கோபிநாத், நேற்று காலை தனது நண்பருடன் பைக்கில் புள்ளம்பாடி- திருமானூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பாக்கியநாதபுரம் கல்லறை தோட்டம் அருகே, சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த கோபிநாத், சம்பவ இடத்திலேயே உயிர்ழந்தார். இதுகுறித்து வெங்கனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 25, 2025

அரியலூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து ரூ.80,000 திருட்டு

image

திருமானூர் வட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி தட்டான்சாவடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உண்டியலை மர்ம ஆசாமிகள் உடைத்து அதிலிருந்து சுமார் 80,000 ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வெங்கனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

News March 25, 2025

அரியலூா் ஆட்சியரகத்தில் வேலை: ரூ.25,000 சம்பளம்

image

அரியலூா் ஆட்சியரகத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், அரியலூா் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில், மேலாண்மை தகவல் நடவடிக்கைகளை செயல்படுத்திட வெளி ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ. 25,000 ஊதியத்தில் மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளா் பணிக்கு தகுதிகள் பெற்றுள்ள நபா்கள் விண்ணப்பிக்கலாம். 30 வயதுக்குள்பட்ட நபா்கள் மாா்ச் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW

error: Content is protected !!