Ariyalur

News February 5, 2025

அரியலூர்: தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பிப்-07 ஆம் தேதியன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எல்ஐசி நிறுவனமும் கலந்து கொண்டு 200 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தகுதியின் அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். share it now…

News February 4, 2025

கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்

image

கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் 14.02.2025 வரை அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் நடைபெறுகிறது. எனவே, அனைத்து கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு.

News February 4, 2025

அரியலூர் மாவட்டத்தில் லோன் மேளா

image

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையின மக்களுக்கு டாப்செட்கோ, டாம்கோ மூலம் தொழில் கடன் வழங்கப்பட உள்ளது. இதற்காக அரியலூர் நகர கூட்டுறவு வங்கியில் பிப்-06, பிப்-12 ஆண்டிமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், 13 ஆம் தேதி ஜெயங்கொண்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் லோன் மேளா நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு.

News February 4, 2025

அரியலூர்: தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பிப்-07 ஆம் தேதியன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எல்ஐசி நிறுவனமும் கலந்து கொண்டு 200 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தகுதியின் அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News February 4, 2025

அரியலூர்: இந்து முன்னணியினர் 25 பேர் கைது

image

திருப்பரங்குன்றம் மலையை காப்போம் என்ற கோரிக்கையுடன் இன்று இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் அறப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதனால் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசுவ இந்து பரிசத் இந்து முன்னணி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

News February 4, 2025

அரியலூர் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கான அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், செந்துறை, திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் மற்றும் தா.பழூர் வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் கரும்பு பயிருக்கு வானிலை பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய கடைசி நாள்- 07-02-2025 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான தனிதனி அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் ஆகவே காப்பீடு செய்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். share it now..

News February 3, 2025

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் செந்துறை, திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் மற்றும் தா.பழூர் வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் கரும்பு பயிருக்கு வானிலை பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். காப்பீட்டுத் தொகை கட்டணம் ஒரு ஏக்கருக்கு 8097.16 எனவும், காப்பீட்டுக் கட்டணம் ஒரு ஏக்கருக்கு 404.85 எனவும், கடைசி நாள்- 07-02-2025 என அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 3, 2025

அரியலூர் காசோலை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் சமூக நலத்துறை சார்பில் “பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்போம்” என்ற திட்டத்தின் கீழ்10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி காசோலை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் கலந்து கொண்டனர்.

News February 3, 2025

விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட கலெக்டர்

image

ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தொழுநோயால் ஏற்படும் பாதிப்புகள், அதனை சரிசெய்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்த உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் வாசித்தார். அதனை அனைத்து துறை அரசு அலுவலர்களும் கூறி உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

News February 3, 2025

விழிப்புணர்வு வாகனத்தினை துவங்கி வைத்த கலெக்டர்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி இன்று (பிப்.03) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மூலம் தொழுநோய் குறித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட ஏராளமான அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!