Ariyalur

News April 12, 2025

அரியலூர்: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

News April 12, 2025

இறகு பந்து விளையாட்டு பயிற்சியாளர் பணிக்கு அழைப்பு

image

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு வாரியம் அரியலூர் ஸ்டார் அகாடமி பயிற்சி மையத்திற்கு இறகு பந்து விளையாட்டில் பயிற்றுனர் பணியிடத்திற்கு பயிற்சி வழங்கிட விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான விண்ணப்பங்கள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பெற்றுக் கொள்ளலாம் என்றும், 20ஆம் தேதியே இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உங்க நண்பர்களுகும் SHARE பண்ணுங்க…

News April 12, 2025

அரியலூர் அங்கன்வாடி மையத்தில் காலி பணியிடங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில் 18 அங்கன்வாடி பணியாளர்கள், 24 அங்கன்வாடி உதவியாளர்கள், 4 குறு அங்கன்வாடி பணியாளர்கள் என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் வருகிற 23ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை உடனே வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 12, 2025

அரியலூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று மாலை திடீரென்று சூறைக் காற்றுடன் விடாமல் கனமழை கொட்டித்தீா்த்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டோடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பங்கள் மீது விழுந்தன. மேலும், விளம்பர பதாகைகள் சாலையில் தூக்கி வீசப்பட்டன.

News April 11, 2025

அரியலூர் இரவு நேர ரோந்து காவலர் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் மாவட்டம் முழுவதிலும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப்ரல்-11) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

News April 11, 2025

வாழ்வில் நிம்மதி தரும் கோதண்டராம சாமி கோயில்

image

அரியலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற தலங்களில் இந்த கோதண்டராமசாமி கோயிலும் ஒன்று. இந்த ஆலயத்தில் தசாவதார பெருமாளை தரிசிக்க கூடிய பாக்கியம் கிடைக்கும். இந்த ஆலயத்தில் ஸ்ரீ ராமர், சீதா, லட்சுமணன், அனுமன் ஒரே பீடத்தில் அமர்ந்திருப்பதை தரிசிக்கலாம். இங்கு வழிபட்டால் வாழ்வில் நிம்மதி ஏற்படும். திருமணம் கை கூடாதவர்கள் வழிபட்டால் மனதிற்கு பிடித்த வரன் அமையும் என கூறப்படுகிறது.

News April 11, 2025

அரியலூர்: ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா?

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களை இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News April 11, 2025

மது போதையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது

image

ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொம்மேடு செல்லும் பாதையில், வடக்கு காலனி தெருவைச் சேர்ந்த பிரேம்குமார்(23) என்பவர் 2½ அடி நீளமுள்ள கையில் கத்தியுடன் மது போதையில் பொதுமக்களை மிரட்டும் வகையில் சுற்றித்திரிந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் பிரேம்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 10, 2025

அரியலூர்: குழந்தை வரம் அருளும் திரௌபதி அம்மன்

image

அரியலூர் மாவட்டம், அகரம் என்னும் ஊரில் திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது. இங்கு சென்று மூலவர் திரௌபதி அம்மனை வழிபட்டால். நீண்ட நாள் பிள்ளைபேறு வேண்டுவோரின் வேண்டுதல் நிறைவேறி குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News April 10, 2025

அரியலூர்: சமையல் உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 178 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டார அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தகவல் பலகையில் ஒட்டப்பட்டும். விண்ணப்பிக்க உரிய ஆவனங்களுடன் 29.04.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!