Ariyalur

News February 15, 2025

லாரி-கார் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் படுகாயம்

image

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே திருவண்ணாமலையிலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற லாரியும், தஞ்சாவூரிலிருந்து அரியலூர் நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் லாரி மற்றும் காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்தனர். இதனை அடுத்து கீழப்பழுவூர் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 14, 2025

ஏலாக்குறிச்சி: மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

image

திருமானூர் அடுத்த ஏலாக்குறிச்சியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் எதிர்வரும் 16-02-2025 அன்று அரியலூர் ஏ.கே.எம்.ஐ.ஏ.எஸ் அகாடமி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் நடைபெறுகிறது. இதில் கண்ணில் நீர் வடிதல், கண் புரை, கண்பார்வை குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர். 

News February 14, 2025

அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். சென்னை மாவட்டத்தில் மட்டும் 33 <>காலியிடங்கள்<<>> நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 14, 2025

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி

image

அரியலூர் மாவட்டத்தில் தாய், தந்தையை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட 189 குழந்தைகளுக்கு அவர்களின் படிப்பு மற்றும் மருத்துவ தேவைக்காக மாதம் ரூ.4 ஆயிரம் வீதம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மொத்த கூடுதல் தொகையாக ரூ.45.36 லட்சத்திற்கான ஆணையையும், வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் 2 குழந்தைகளுக்கு ரூ.48,000-க்கான ஆணையையும் கலெக்டர் வழங்கியுள்ளார்

News February 14, 2025

பிள்ளைத்தமிழ் பாடிய சிவன் ஆலயம்

image

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பேரூராட்சியில் அமைந்துள்ள பயறணீஸ்வரர் கோயில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் பெயர் முற்கபுரீஸ்வரர் மற்றும் பயறணீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. பயரணீஸ்வரர் என்றால் பயறு மாலை அணிந்த ஈஸ்வரர் என்று பொருளாகும். புராணப் பெயர் கொண்ட இத்தலத்தில் மீனாட்சிசுந்தரம் பிள்ளைத்தமிழ் பாடியதாக கூறப்படுகிறது.

News February 13, 2025

இயற்கை சந்தையில் பொருட்களை வாங்க ஆட்சியர் வேண்டுகோள்

image

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் உள்ளிட்டவைகளை பிப்.18 மற்றும் 25ஆம் தேதி, மார்ச் 04ஆம் தேதி ஆண்டிமடம் சந்தையிலும், பிப்ரவரி 19 மற்றும் 26ஆம் தேதி, மார்ச் 05ஆம் தேதி தத்தனூர் சந்தையிலும், பிப்ரவரி 22ஆம் தேதி உடையார்பாளையம் சந்தையிலும், பிப்ரவரி 23ஆம் தேதி அரியலூர் சந்தையிலும் நடைபெறும் இயற்கை சந்தையில் பொருட்களை வாங்கி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தகவல்.

News February 13, 2025

அரியலூர் மாவட்ட காவல் துறையின் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அறிமுகம் இல்லாத நம்பரில் இருந்து வரும் வாட்ஸ்அப் மெசேஜ் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் வாயிலாக வரும் செய்தியில் எந்தவொரு செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். புதுநம்பரில் இருந்து வரும் இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டாம். PAN, ஆதார், A/c எண், ATM கார்டு விவரங்கள் ஆகியவற்றை பகிர வேண்டாம் என தெரிவித்துள்ளது.

News February 13, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <>இங்கு<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News February 13, 2025

65 பயனாளிகளுக்கு ரூ.55.47 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

image

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் 65 பயனாளிகளுக்கு ரூ.55 லட்சத்து 47 ஆயிரத்து 203 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.

News February 12, 2025

தத்தனூரில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

அரியலூர் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் மற்றும் மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைக்கல்லூரியில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சென்னை திருச்சி மதுரை, கோவை திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து தனியார் நிறுவனங்கள் பங்கு பெறுகிறது.

error: Content is protected !!