Ariyalur

News March 1, 2025

ரூ.78,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை

image

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மாதம் ரூ.23 000 முதல் 78 000 வரையிலான சம்பளத்தில் காலியாக உள்ள 246 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 18 முதல் 26-க்குள் இருக்கும் தகுதியானவர்கள் ioci.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க…

News March 1, 2025

அரியலூர்-சாலை விபத்தில் ஒருவர்பலி

image

திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கல்லகம் – மேலப்பாவூர் இடையே ஏற்பட்ட விபத்தில் டூவிலர் மீது லாரி மோதியதில் அரியலூர் மாவட்டம் கோவிந்தபுரத்தை சேர்ந்த கனகராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து இந்த விபத்து குறித்த தகவலின் பேரில் கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News February 28, 2025

10ஆம் வகுப்பு பாஸ் போதும்.. அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு..

image

அஞ்சல்துறையில் 21,413 கிராம அஞ்சல் பணியாளர்கள் புதிதாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.10,000 – 29,380 வரையிலான மாதச் சம்பளத்தில் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, <>{https://indiapostgdsonline.gov.in}<<>> என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க..

News February 28, 2025

இலவச போட்டோகிராபி பயிற்சி

image

அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூரில் உள்ள SBI ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் மார்ச் 10 ஆம் தேதி முதல் இலவச போட்டோகிராபி, வீடியோகிராபி மற்றும் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு, விடுதியில் தங்கி படிக்கும் வசதி உள்பட அனைத்தும் இலவசமாக வழங்கபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து பயன்பெறுங்கள்.

News February 27, 2025

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேசன், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், அக்கவுன்ட்ஸ் பிரிவில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு உள்ளிட்ட மண்டலங்களில் மொத்தம் 457 ‘அப்ரென்டிஸ்’ பணி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 32 இடங்கள் உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலுக்கு <>iocl.com என்ற இனையத்தை<<>> அனுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

News February 27, 2025

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

image

பொது வினியோக திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெறும் ஏ.ஏ.ஒய் மற்றும் பி.எச்.எச். குடும்ப அட்டையின் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் நாளைக்குள் (பிப்.28) கைரேகையை பதிவு செய்ய வேண்டுமென அரசு தெரிவித்துள்ளது. அதன்படி நாளைக்குள் ரேஷன் கடைகளில் தங்களது கைரேகையை பதிவு செய்யுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.

News February 26, 2025

இரவு நேரங்களில் ரோந்து செல்லும் காவலர்களின் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்றம் சம்பவங்களை குறைக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் அரியலூர் மாவட்டம் முழுவதும் தினந்தோறும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (26.02.2025) ரோந்து பணி செல்லும் காவலர்களின் தொலை பேசி என்னை மாவட்ட காவல் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

News February 24, 2025

மாற்றுத்திறனாளிகள் புகார் அளிக்க போன் நம்பர் வெளியீடு

image

அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மத்திய, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இடைத்தரகர்கள் யாரேனும் செயல்பட்டால் அது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண்.17ல் நேரடியாகவோ அல்லது 9499933563 என்ற எண்ணிலோ புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்

News February 24, 2025

அரியலூர் விவசாயிகளுக்கான புதிய இணையதள வசதி

image

அரியலூர் மாவட்டத்தில் நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்பித்து வந்தனர். இந்நிலையில், வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்

News February 24, 2025

தபால் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்<<>>. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!