India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டம், சலுப்பை கிராமத்தின் எல்லையில் பழங்கால யானை சுதை சிற்பம் ஒன்று உள்ளது. வெல்லம், கடுக்காய் மற்றும் சுண்ணாம்புக் கலவையால், சுட்ட செங்கற்களை கொண்டு 33 அடி நீளமும், 12 அடி அகலமும், 60 அடி உயரமும் கொண்ட அந்த யானை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை சிற்பமாக காட்சியளிக்கிறது. இந்த சுதை சிற்பத்தை தமிழக தொல்லியல் துறை புராதன சின்னமாக 2020ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அம்புரோஸ் (68) என்பவர் 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டு, இவ்வழக்கின் விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட முதியவர் அம்புரோசுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்டவை ஆன்லைன் மூலமாக செய்யப்படுகிறது. எனவே குடும்ப அட்டை குறித்த தகவல்களை மேற்கொள்ள இடைத்தரகர்களிடமோ இ சேவை மைய அலுவலர்களிடமோ கையூட்டு எதுவும் கொடுத்து ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற அரசு திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, மார்ச் மாதம் 19 மற்றும் 20 ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் 19 ஆம் தேதி ஆண்டிமடம் வட்டாச்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து மனுக்கள் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுகாதாரத்துறையின் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.18,500 முதல் ரூ.23,000 வரையிலான சம்பளத்தில், 8 முதல் பட்டபடிப்பு அளவிளான இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மார்ச் 20-ம் தேதிக்குள் இதற்கான இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
அரியலூர் மாவட்டத்தில் 201 ஊராட்சிகள் அமைந்துள்ளன. மாவட்டம் முழுவதும் 201 ஊராட்சிகளிலும் மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தன்று நடக்கவுள்ள கிராம சபை கூட்டத்தில், மழை நீரை சேகரித்தல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல் தொடர்பாக விவாதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்தும், விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே நாச்சியார்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்த கூலி தொழிலாளி சவுந்தரராஜன்(38) விளாங்குடி நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் தனது பைக்கில் சென்றபோது சாலையோரத்திலிருந்த தடுப்புச்சுவரில் எதிர்பாராத விதமாக மோதி, படுகாயம் அடைந்த சவுந்தரராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கயர்லாபாத் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்துறையில் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற பல்வேறு துறைகள் சார்ந்த கண்காட்சியில் நவதானியம் வகையான அரிசிகளை கண்காட்சியில் அமைத்திருந்தனர். அதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் பல வகையான அரிசிகள் நெல் வகைகள் என மாவட்ட ஆட்சியர் கேட்டு அறிந்தார். இதில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டல பணியிடங்களுக்கான ஆண், பெண் இருபாலர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணிக்காலியிடம் அரியலூர் மண்டலத்திற்கு நிரப்புதல் தொடர்பாக அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் ஏப்-14 ஆம் தேதிக்குள் அலுவலக வேலைநாட்களில் உரிய ஆவணங்களுடன் நேரில்சென்று பதிவினை சரிபார்க்க ஆட்சியர் அறிவிப்பு.
அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. 300-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான இந்த முகாமில், 18 முதல் 45 வயது வரையிலான 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையும் படித்த வேலைநாடுனர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க…
Sorry, no posts matched your criteria.