Ariyalur

News March 27, 2025

அரியலூர்: ராணுவத்தில் சேர வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க…

News March 27, 2025

அரியலூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் வேலை வாய்ப்பு

image

அரியலூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் MIS நடவடிக்கைகளை சிறந்த முறையில் செயல்படுத்திட ஒப்பந்த அடிப்படையில் ஒரு MIS Analyst பணியிடத்திற்கு மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் 2வது தளத்தில் செயல்படும் மாவட்ட முகமை அலுவலகத்தில் 28.03.2025-க்குள் நேடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு <>இணையத்தை<<>> தொடரலாம் என்று மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதனை உங்க நண்பர்களூக்கும் SHARE பண்ணுங்க…

News March 27, 2025

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 32 திருக்கோயில்களில் இரவு நேரங்களில் பாதுகாவலராக பணிபுரிய 62 வயதுக்கு உட்பட்ட முன்னாள் ராணுவத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உரிய ஆவணங்களுடன் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News March 26, 2025

அரியலூர்: காவலர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை

image

காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் வாரிசுகள் உயர்கல்வி பயில தமிழ்நாடு அரசின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் வாரிசுகள் 10 பேருக்கு உயர்க் கல்வி பயில்வதற்கு, தமிழக அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகையினை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் ஸ்வாச் வழங்கி கல்வியில் சிறந்து விளங்க பாராட்டினார்.

News March 26, 2025

செல்லப்பிராணிகள் கண்காட்சி அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும் புத்தக திருவிழாவின் 6ஆம் நாளான இன்று செல்லப்பிராணிகள் கண்காட்சி நடைபெற உள்ளது. நாளை கால்நடைகளின் கண்காட்சியும் நடைபெற உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள செல்லப் பிராணிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கண்காட்சியில் கலந்து கொள்வார்கள். மேலும், உரிமையாளர்களுக்கு பங்கேற்பதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 26, 2025

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் உள்ள AAY மற்றும் PHH பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் 31.03.2025-க்குள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள நியாயவிலைக்கடைகள் செயல்படும் வேலை நாட்களில் அனைத்து குடும்ப அட்டை உறுப்பினர்களின் கை விரல் ரேகையினை பதிவு செய்யுமாறு, அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News March 26, 2025

அரியலூர் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்வு

image

அரியலூர் நகராட்சி விரிவாக்கம் செய்யும் வகையில் நகராட்சியை ஒட்டி உள்ள 3 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு 2ஆம் நிலை நகராட்சியாக இருந்த அரியலூர் நகராட்சியை முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இதனால் அரியலூர் நகராட்சிக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 26, 2025

இன்று செல்லப்பிராணிகள் கண்காட்சி

image

அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும் புத்தக திருவிழாவின் 6ஆம் நாளான இன்று செல்லப்பிராணிகள் கண்காட்சி நடைபெற உள்ளது. நாளை கால்நடைகளின் கண்காட்சியும் நடைபெற உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள செல்லப் பிராணிகள் (ம) கால்நடை வளர்ப்போர் கண்காட்சியில் கலந்து கொள்வார்கள். மேலும்,   உரிமையாளர்களுக்கு பங்கேற்பதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

News March 25, 2025

இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம் 

image

அரியலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (25/03/2025) செவ்வாய்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் காவல் அதிகாரிகள் விவரம் மற்றும் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

News March 25, 2025

அரியலூர் ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்

image

அரியலூர் ஆட்சியர் கூட்டரங்கில் காசநோய் ஒழிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காசநோய் இல்லாத ஊராட்சி என கண்டறியப்பட்டுள்ள 18 கிராம ஊராட்சிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும், மாவட்டத்தில் காசநோய் ஒழிப்பு பணியில் சிறப்பாக சேவைபுரிந்த 38 தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேனிங் மையங்களைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

error: Content is protected !!