Ariyalur

News April 16, 2024

காயமடைந்த மானை காப்பாற்றிய மக்கள்

image

திருமானூர் அருகே கரைவெட்டி கிராமத்தில் மான் ஒன்று அடிபட்டு சாலையில் வந்த மானை ஊர் பொதுமக்கள் காப்பாற்றினர். இது குறித்து வெங்கனூர் போலிசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் மானை மீட்டு திருமானூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து உடன் மானை அருகில் உள்ள வனத்தில் வனத்துறையினர் விட்டனர்.

News April 16, 2024

அரியலூர்- தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்த வேட்பாளர்கள்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் (தனி) மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவினங்கள் தொடர்பான பதிவேடுகளை தேர்தல் செலவினப் பார்வையாளர் நிதின் சந்த் நெகி முன்னிலையில் இன்று தாக்கல் செய்தனர். மூன்றாம் கட்ட ஆய்வில் 13 வேட்பாளர்களின் சார்பில் அவர்களது முகவர்கள் பங்கேற்று தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்தனர்.

News April 16, 2024

வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு

image

உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு பொருட்களை வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடத்தும் அலுவலர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News April 15, 2024

அரியலூரில் 2 சிறுத்தகள் நடமாட்டமா?

image

அரியலூர் மாவட்டம், செந்துறையில் சிறுத்தை ஒன்று உலவி வந்த நிலையில், அதை பிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தில் இரட்டை சிறுத்தை இருப்பதாக வாட்ஸ் அப்பில் உலா வரும் தவறான செய்தி தொடர்பாக, காவல்துறையில் வனத்துறை சார்பில் புகார் அளித்துள்ளது. இதில் தவறான செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

News April 15, 2024

சிறுத்தை இடம் பெயர்ந்திருக்கக்கூடும்

image

அரியலூரில் சுற்றிய சிறுத்தை கடலூர் அல்லது பெரம்பலூருக்கு இடம் பெயர்ந்திருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. நின்னியூரில் சிறுத்தை கால்தடம் பதிவாகி இருந்த நிலையில்அதை பிடிக்க 3 கூண்டுகள் வைக்கப்பட்டன. 3 இடங்களில் கூண்டு வைத்தும் சிறுத்தை சிக்காத நிலையில் வேறு பகுதிக்கு சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பெரம்பலூர், கடலூர் ஆற்றுப்படுகைகளில் வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News April 15, 2024

பெண் உள்பட 2 பேர் கைது

image

ஜெயங்கொண்டத்தைச் சோ்ந்தவா் சூா்யா(23) அப்பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு வந்த இருவர் 4 கிராம் மோதிரத்தை வாங்குவது போல் நடித்து அதனை திருடிச் சென்றனா். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் திருத்துறைப் பூண்டி, கட்டிமேடை சோ்ந்த குபேந்திரன்(42), கோட்டக்குடி கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் மனைவி தனலட்சுமி(42) ஆகியோரை கைது செய்தனர்.

News April 15, 2024

அரியலூர்: அம்பேத்கருக்கு மதிமுக வினர் மரியாதை

image

அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா தலைமையில் மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் மதிமுக மாவட்ட செயலாளர் க. ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் பெ தங்கவேல், நகர கழக செயலாளர் இராம மனோகரன் ,ஒன்றிய கழக செயலாளர் காட்டுப்பிரிங்கியம் பி. சங்கர் மற்றும் குமார் இரா.சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

News April 14, 2024

வனத்துறை சார்பில் காவல் நிலையத்தில் புகார்

image

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே உள்ள சமத்துவபுரம்‌ சாய்பாபா ஆலயத்தின் இரட்டை சிறுத்தை இருப்பதாக வாட்சப்பில் உலா வரும் செய்தி தவறானது. யாரோ வேண்டுமென்று வாட்ஸ் அப்பில் பொய் செய்திகளை பரப்பி பொது மக்களை அச்சுறுத்துவதாக வனத்துறை சார்பில் கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரியுள்ளனர்.

News April 13, 2024

அரியலூர்: வாக்கு சேகரித்தார் எடப்பாடி பழனிசாமி

image

அதிமுக சார்பில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரகாசனுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அரியலூர் மாநகரில் பொதுமக்களிடம் இரட்டைஇலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். மேலும் அவர் பேசியதாவது, அதிமுகவை யாரும் மிரட்டிப் பார்க்க முடியாது. எந்த பூச்சாண்டிக்கும்,  அதிமுக அஞ்சாது என்றும் தெரிவித்தார். உடன் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 13, 2024

பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்த அமைச்சர்

image

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு, செந்துறை நகரத்தை சேர்ந்த வாக்காளா் பெருமக்களை சந்தித்து பானை சின்னத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் இன்று (13.4.2024) வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணிக் கட்சிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள், அனைத்துக் கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!