India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரியலூர் அரசு கல்லூரி கலையரங்கில், பாலின உளவியல் குறித்த கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் சித்ரா தலைமையில் நடைபெற்றது. மேலும் கருத்தரங்கில் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமணை மனநல மருத்துவர் அஞ்சிதா கலந்து கொண்டு, மனநலத்தில் குறைபாடு ஏற்படும்போது அவர்களின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்தும் அவர்களுக்கு தேவையான மருத்துவம் ஆகியவை குறித்து, பட காட்சிகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே டிராக்டர் மோதி பெண் உயிரிழப்பு. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் லால்பேட்டை சிதம்பரம் மெயின் ரோடு பகுதியை சார்ந்த வேல்முருகன் மனைவி மாலதி (44). பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த போது டிராக்டர் மோதி உயிரிழந்துள்ளார். மேலும் மீன்சுருட்டி போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் குவாகம் ஆண்டாள் தெரு அருகில் உள்ள முந்திரி காட்டில், ஒரு மானை நாய்கள் கடித்து குதறி உள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டிவிட்டு, மானை உடனடியாக மீட்டு குவாகம் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மருத்துவர்கள் மானுக்கு சிகிச்சை அளித்துள்ளது வருகின்றனர். மேலும் ஆண்டிமடம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கலந்து கொண்டார். அப்போது சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

அரியலூர் மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு,<

கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம், அரியலூர் மாவட்டத்தில் (01.02.2026) முதல் (14.02.2026) வரை, கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் நடைபெறும் இம்முகாமில், 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம், அரியலூர் மாவட்டத்தில் (01.02.2026) முதல் (14.02.2026) வரை, கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் நடைபெறும் இம்முகாமில், 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.