India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது பெருமாள் தீயனூ காலனி தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் அப்பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 45 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம்
உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய 80 மாணவிகளும் 100% தேர்ச்சி பெற்றனர். இதேபோன்று +2 தேர்விலும் 100% தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் அப்பள்ளி தலைமையாசிரியர் முல்லைக்கொடியை சக ஆசிரியர்கள் பாராட்டி விழா எடுத்தனர். நிகழ்வில் ஆசிரியர்கள் மணிவண்ணன், காவேரி, தமிழரசி உள்ளிட்ட பலர் லர் கலந்து கொண்டனர்.
அரியலூரில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விபரம் வருமாறு:- அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 172 பள்ளிகள் தேர்வுகள் எழுதின. இதில் 52 அரசு பள்ளிகளும்,01 ஆதிதிராவிடர் நல பள்ளிகளும், 09 உதவி பெறும் பள்ளிகளும்,14 சுயநிதி பள்ளிகள், 18 மெட்ரிக் பள்ளிகள் என 94 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
அரியலூர் மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.31 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்தது. இதை தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றியதற்காக அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமியை அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா இன்று சால்வை அணிவித்து பாராட்டினார். மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 96.2% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 95.07 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 97.46 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் 97.31 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 96.41 %பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 98.26 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
அரியலூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் உயர் கல்வியை தொடர சிறப்பாக பணியாற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த கல்வித்துறையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி கலந்து கொண்டார்.
அரியலூர் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கோடைக்காலத்தில் பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்படும் நிலையில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
ஜெயங்கொண்டம் அருகே திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் குருவாளப்பர் கோவில் பகுதி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள் இரவு நேரங்களில் எரிவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், எனவே தெரு விளக்குகள் எறிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.