India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிதம்பரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டுகளை வழங்கினார்.
விசிக தலைவர் திருமாவளவன் அரியலூர் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது திருமாவளவனிடம் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு பெயர் சூட்டுமாறு தெரிவித்தனர். குழந்தைகளை அன்போடு வாங்கிய திருமாவளவன் குழந்தைகளுக்கு அம்பேத்வளவன் , எழில் செல்வன் என பெயரிட்டு மகிழ்ந்தார்.
அரியலூர், கயர்லாபாத் காவல் உதவி ஆய்வாளர் சாமிநாதன் தலைமையிலான, போலீஸார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கல்வி என்பவர் கள்ளத்தனமாக மது விற்றது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்து, அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கணினி மூலம் 2 ஆம் கட்ட பணி ஒதுக்கீடு செய்யும் பணி குறித்து ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தல் பொதுப்பார்வையாளர் போர் சிங் யாதவ் கலந்து கொண்டார்.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படைகள் மேற்கொள்ளும் தேர்தல் பணிகள் மற்றும் நீலத்தநல்லூர் சோதனைச்சாவடி மையத்தில் மேற்கொள்ளும் கண்காணிப்பு பணிகளையும் தேர்தல் செலவினப் பார்வையாளர் நிதின் சந்த் நெகி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அனைத்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை முறையாக ஆய்வு மேற்கொள்ளுமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
அரியலூர், ஆண்டிமடம் பகுதியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, விளந்தை கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் அரசின் மானிய விலை சிலிண்டரில் இருந்து வணிக பயன்பாட்டுக்கு பயன்படும் பெரிய சிலிண்டர்களுக்கு சமையல் எரிவாயுவை நிரப்பி அப்பகுதியிலுள்ள கடைகள், மண்டபங்களுக்கு விற்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர்.
அரியலூர் காசாங்கோட்டையில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக தா.பழுர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றிச் சென்ற பச்சமுத்து, கருணாநிதி ஆகிய இருவரை கைது செய்து இரண்டு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் தெற்கு தெருவை சேர்ந்த தேவராஜ் மகன் ரவி, சிவக்குமார் மகன் வல்லரசு. இவர்களிடையே முன்விரோத தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற ரவியை, வல்லரசு தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரவி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி ஊராட்சி கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சரவணன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்ரேட்டர் மனோகரன் ,தூய்மை காவலர் அன்புமணி ஆகியோர் குஞ்சு வெளி கிராமத்திற்கு வீட்டு வரி வசூல் செய்வதற்கு சென்றுள்ளனர்.அப்பொழுது குஞ்சு வெளி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் என்பவர் அவர்களை திட்டியாதகவும் இது குறித்து ஊராட்சி செயலர் அளித்த புகாரில் முருகானந்தம் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்களவை தேர்தல் தொடர்பாக வேட்பாளர்கள், முகவர், அரசியல் கட்சியினருடனான தேர்தல் நன்னடத்தை விதி மற்றும் செலவினங்கள் தொடர்பான விளக்கக் கூட்டம் தேர்தல் அலுவலர்ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இதில், தேர்தல் பொது பார்வையாளர் போர் சிங் யாதவ் முன்னிலை வகித்தார்.
Sorry, no posts matched your criteria.