Ariyalur

News April 6, 2024

இன்று முதல் கோடை விடுமுறை

image

அரியலூரில் 1 முதல் 3 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் ஏப்.8,10,12 இல் பள்ளிக்கு வந்து தேர்வுக்கு தயாராக வேண்டும். தேர்தல் பணி காரணமாக ஏப்.15 முதல் ஏப்.21 வரை விடுமுறையும் அதன் பின் ஏப்.22,23 இல் அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும். அதன் பின் ஏப்.24 முதல் கோடை விடுமுறை விடப்பட்டும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

News April 5, 2024

விலைவாசி உயர்வுக்கு திமுக தான் காரணம் – அதிமுக வேட்பாளர்

image

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து மீன்சுருட்டி, மடவாப்பள்ளம், லால்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய போது திமுக ஆட்சியில் பால், மின்கட்டணம், வீட்டு வரி உயர்வு உள்ளிட்டவை உயர்த்தபட்டுள்ளது. பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரிக்கும் திமுகவை வீட்டுக்கு அனுப்ப இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

image

தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தல் ஏப்.19 இல் நடைபெற உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2024

தபால் வாக்குகளை பெறுவதற்கு 40 குழுக்கள்

image

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தபால் மூலம் ஓட்டுப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்த மாற்றுத்திறனாளிகள் 1559 பேரும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 1816 பேரும் பொது தேர்தலில் தபால் வாக்கு அளிக்க விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த வாக்காளர்களின் வீடுகளுக்கு வரும் 5, 6 மற்றும் 8 ஆகிய நாட்களில் சென்று தபால் ஓட்டுகளை பெறுவதற்கு 40
குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.

News April 4, 2024

தபால் வாக்குகளை பெறுவதற்கு 40 குழுக்கள்

image

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தபால் மூலம் ஓட்டுப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்த மாற்றுத்திறனாளிகள் 1559 பேரும் 85+ வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 1816 பேரும் பொது தேர்தலில் தபால் வாக்கு அளிக்க விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த வாக்காளர்களின் வீடுகளுக்கு வரும் 5, 6 மற்றும் 8 ஆகிய நாட்களில் சென்று தபால் ஓட்டுகளை பெறுவதற்கு 40
குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.

News April 4, 2024

அரியலூர்: சிறுமி கர்ப்பம்: கைது

image

அரியலூர், ஜெயங்கொண்டம் அருகே கொக்கரணை கிராமத்தை சேர்ந்த ராஜு. இவர்,  17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி காதலித்து திருமணம் செய்து செய்துள்ளார். தற்போது சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கர்ப்பத்தை கலைத்து விட்டு தலைமறைவானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த ராஜுவை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்தனர். 

News April 4, 2024

பாலியல் தொல்லை- வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.பள்ளியில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும் எனவும், ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

அரியலூர்: திருமாவளவன் வாக்கு சேகரிப்பு

image

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் குன்னம் சட்டமன்ற தொகுதி, ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம், காரை ஊராட்சியில், புதுக்குறிச்சி, மலையப்ப நகர், சமத்துவபுரம், காரை, ஆகிய கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து நேற்று (3.4.2024) பானை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.

News April 3, 2024

அரியலூர்: சிறப்பு செலவின பார்வையாளர் நியமனம்

image

சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு சிறப்பு செலவினப் பார்வையாளராக பி.ஆர்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தொடர்பான புகார் மற்றும் தகவலுக்கு அவரது கைப்பேசி 9345298218 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்துள்ளார்.

News April 3, 2024

அரியலூர் அருகே சரமாரி தாக்குதல்

image

அரியலூர், சின்னவளையம் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வல்லரசு என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ரவி தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற போது, வல்லரசு அவரை வழிமறித்து சாவியால் மூக்கில் குத்தியுள்ளார். இதுகுறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிந்து போலீசார் நேற்று வல்லரசை கைது செய்தனர்.

error: Content is protected !!