Ariyalur

News July 20, 2024

நேரடி சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

image

அரியலூர், ஆண்டிமடத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவிகளின் நேரடி சேர்க்கைக்கு ஜூலை.31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 8 அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9499055877, 04329 -228408 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 19, 2024

இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும்

image

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

News July 19, 2024

அரியலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு

image

அரியலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ஆனி மேரி ஸ்வர்ணா சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து அரியலூர் மாவட்ட ஆட்சியராக சென்னை வணிகவரி அலுவலக இணை இயக்குனராக பணியாற்றிய, ரத்தினசாமி அரியலூர் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ரத்தினசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசு அலுவலர்கள் பலர் ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

News July 19, 2024

அரியலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

image

அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை (ஜூலை.20) 110 கிலோ கூடுதல் GC Breaker அமைக்கும் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தேளூர், உடையார்பாளையம், செந்துறை ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

News July 19, 2024

நாளை ரேஷன் கடைகள் இயங்காது

image

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை.23, ஆகஸ்ட்.4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் அரியலூர் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 19, 2024

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் தேதி மாற்றம்

image

அரியலூா் மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம், அரியலூா் வட்டத்தில் இன்று (ஜூலை.19) காலை 9 மணி முதல் முதல் நாளை காலை 9 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இம்முகாமை நிா்வாக காரணங்களுக்காக ஜூலை 24 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸவா்ணா தெரிவித்துள்ளாா்.

News July 18, 2024

அரியலூர் தொழிற்பயிற்சி நிலையங்களின் அவகாசம் நீட்டிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டின் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி சேர்க்கை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு தொழிற்பயிற்சியில் சேர விரும்புபவர் தங்களது கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும். ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடி சேர்க்கை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 18, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு 2024-ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 26-ஆம் தேதி காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் தொழில் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

News July 18, 2024

நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்

image

TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 18, 2024

மாவட்ட அளவிலான பேச்சு போட்டி

image

அரியலூர் மாவட்டத்தில் அம்பேத்கார் பிறந்தநாளையொட்டி ஜூலை.26 அன்று அரியலூர் மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்று கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!