India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் சிமென்ட் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் மூலப் பொருளான லிங்கர் எனும் கனிமத்தை வெட்டி கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமியிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் உலகநாதன் மனு அளித்தார். அதில் அமீனாபாத், நல்லாம்பத்தை, காட்டுபிரிங்கியம், அருங்கால், கிராமங்களில் அதிக அளவு கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு அரியலூரில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுதொடர்பான வீடியோவை காரைக்குடியை சேர்ந்த பாஜக நிர்வாகி முத்துக்குமார் தனது வலைதளத்தில் பதிவிட்டு திமுக மீது குற்றம்சாட்டியுள்ளார். இதனை கண்ட அரியலூர் மாவட்ட திமுக மகளிர் அணி நிர்வாகி ராதிகா புகார் அளித்தார். புகாரின் பேரில் அவதூறு பரப்பிய முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
செந்துறை அருகே ஆர் எஸ் மாத்தூரில் திமுக ஆட்சியில் மின்சாரம் கட்டண உயர்வு, நியாய விலை கடையில் பருப்பு பாமாயில் நிறுத்த முயற்சிப்பதையும் தமிழ்நாடு போதைப்பொருள் கள்ளச்சாராய மரணங்களுக்கு திமுக அரசு ராஜினாமா செய்யக்கோரியும் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நாளை மாத்தூரில் நடைபெற உள்ளது. அதிமுக தொண்டர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வேளாண்மைத்துறையில் வேளாண்மை அடுக்குத் திட்டம் உருவாக்கபட்டுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட ஆதார் எண், போட்டோ, வங்கி கணக்கு எண், நில உரிமை ஆவணங்கள் ஆகியவை கிரைன்ஸ் என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் . இது ஒற்றை சாளர முறையில் செயல்படுவதால் விவசாயிகள் 13 துறை திட்டங்களுக்கும், ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 3381 மெ.டன் யூரியா, 976 மெ.டன் டி.ஏ.பி, 625 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 3329 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சி மத்திய மண்டல உயர் அதிகாரிகளுக்கு இடையிலான வருடாந்திர பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் இரண்டாவது இடத்தையும், கணினி சார் குற்றப்பிரிவு அரியலூர் காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அந்தோணி ஆரி அவர்கள் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
ஆண்டிமடம் அடுத்த அய்யூர் கிராமத்தில் சிலிண்டர் வெடித்து வீடு முற்றிலும் எரிந்து நாசமாயின. நேற்று மாலை எதிர் பாராதவிதமாக திடீரென சிலிண்டர் வெடித்தது. இதில் தீப்பற்றி கூரை வீடு முழுவதுமாக எரிந்ததில் 50ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
அரியலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 2ஆம் கட்ட சிறப்பு முகாம் தத்தனூரில் நேற்று நடைபெற்றது. இதில், எம்எல்ஏ கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுகொண்டார். பின்னர், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் வீடு கட்ட நிர்வாக அனுமதி ஆணையை வழங்கினார்.
அரியலூர் மாவட்டத்தில் 4ம் கட்டமாக ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் அரியலூர் ஒன்றியத்தில் சுண்டக்குடி ஊராட்சியில் மற்றும் திருமானூர் ஒன்றியத்தில் திருமானூர் ஊராட்சியில் நடைபெற்றது. சுண்டக்குடி ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சியருடன், எம்எல்ஏ சின்னப்பா கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இன்று இந்த இரண்டு ஊராட்சிகளிலும் 3065 மனுக்கள் பெறப்பட்டுள்ளது
அரியலூர் பழைய பேருந்து நிலையத்தில் பல்வேறு வழித்தடத்தில் 7 புதிய பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். அப்போது பேருந்தில் அமைச்சர் சிவசங்கர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் சிறிது தூரம் பயணம் செய்தனர். அப்பொழுது நடத்துனரிடம் பணம் கொடுத்து அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட அனைவரும் பயண சீட்டு பெற்று பயணம் செய்தார்.
Sorry, no posts matched your criteria.