news

News April 25, 2025

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 4 தீவிரவாதிகள் பலி

image

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாலையோரம் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் பயணிகள் வாகனம் வெடித்து சிதறியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. இதில், ஜமியத் உலமா-இ-இஸ்லாம் அமைப்பின் தலைவர் உள்ளிட்ட 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முழு தகவல்களுக்கு இணைந்திருங்கள் Way2News-உடன்.

News April 25, 2025

பாகிஸ்தான் மீது போர் தேவையற்றது: திருமாவளவன்

image

பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால், அதனை உலக அளவில் அம்பலப்படுத்த வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர்களை அந்நியப்படுத்த வேண்டுமே தவிர, அவர்களுக்கு எதிரான யுத்தம் தேவையற்றது என்றும் அவர் கூறியுள்ளார். ஜாதி, மதம், இனம், மொழி ஆகிய பாகுபாடு அல்லாமல், இந்தியர் என்ற உணர்வோடு நாம் அனைவரும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

News April 25, 2025

இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி அமைத்த பிறகு, முதல்முறையாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கிய நிலையில், இந்த மிரட்டல் வந்துள்ளது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் வீடு முழுவதும் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகிறனர்.

News April 25, 2025

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 4 தீவிரவாதிகள் பலி

image

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாலையோரம் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் பயணிகள் வாகனம் வெடித்து சிதறியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. இதில், ஜமியத் உலமா-இ-இஸ்லாம் அமைப்பின் தலைவர் உள்ளிட்ட 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முழு தகவல்களுக்கு இணைந்திருங்கள் Way2News-உடன்.

News April 25, 2025

பாகிஸ்தான் மீது போர் தேவையற்றது: திருமாவளவன்

image

பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால், அதனை உலக அளவில் அம்பலப்படுத்த வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர்களை அந்நியப்படுத்த வேண்டுமே தவிர, அவர்களுக்கு எதிரான யுத்தம் தேவையற்றது என்றும் அவர் கூறியுள்ளார். ஜாதி, மதம், இனம், மொழி ஆகிய பாகுபாடு அல்லாமல், இந்தியர் என்ற உணர்வோடு நாம் அனைவரும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

News April 25, 2025

இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி அமைத்த பிறகு, முதல்முறையாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கிய நிலையில், இந்த மிரட்டல் வந்துள்ளது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் வீடு முழுவதும் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகிறனர்.

News April 25, 2025

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்

image

இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், மூத்த விஞ்ஞானியுமான கஸ்தூரி ரங்கன்(84), இன்று காலமானார். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த கஸ்தூரி ரங்கன், இஸ்ரோ தலைவராக 9 ஆண்டுகள் பதவி வகித்தார். விண்வெளித் துறையில் நாடு பெரிய சாதனைகள் புரிய இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். ராஜ்ய சபா எம்பி, திட்ட கமிஷன் உறுப்பினர், தேசிய கல்விக் கொள்கை வரைவு குழுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.

News April 25, 2025

யார் இந்த கஸ்தூரி ரங்கன்?

image

இன்று காலமான இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனின் சிறப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்: *பாஸ்கரா, இன்சாட் செயற்கைக் கோள்கள் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றினார் *காஸ்மிக் கதிர்கள் பற்றிய ஆய்வில் நிபுணர் *பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் விருதுகள் பெற்றவர் *ஜவஹர்லால் பல்கலை., வேந்தர், கர்நாடக அறிவு ஆணையத்தின் தலைவர் பதவிகள் வகித்தவர் *புதிய கல்விக்கொள்கை குழுத் தலைவராக இருந்தவர்.

News April 25, 2025

இபிஎஸ்-ஐ தேடிவந்த செங்கோட்டையன்

image

இபிஎஸ் தலைமையில் நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க செங்கோட்டையன் வருகை தந்துள்ளார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் முகமலர்ச்சியோடு வரவேற்பு கொடுத்தனர். அவரும் பதிலுக்கு சிரித்த முகத்துடன் கையெடுத்து கும்பிட்டு வணக்கம் வைத்து உள்ளே சென்றார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாள்களாக ஒதுங்கியே இருந்த அவர், மீண்டும் இபிஎஸ் உடன் இணைந்து இணக்கமாக செயல்பட முடிவு எடுத்துள்ளார்.

News April 25, 2025

100% தேர்ச்சி.. பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்

image

10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். பள்ளி கல்வித்துறை தொடர்பான அறிவிப்பில் அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளியின் தூதுவர்களாக நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

error: Content is protected !!