India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பொதுமக்களின் மனுக்கள் மீது 45 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, ஆக. 28-ம் தேதியுடன் 45 நாள்கள் நிறைவடைவதால், மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களின் நிலை குறித்து அரசு தெரிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தகுதியானவர்களுக்கு பணம் எப்போது டெபாசிட் செய்யப்படும் என்ற விவரத்தையும் விரைவில் அரசு வெளியிடுமாம். SHARE IT.
வழக்கம்போல் கவர்னர் RN ரவி சுதந்திர தின தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்தால், வழக்கம்போல இந்நிகழ்வில் விசிக பங்கேற்காது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக காங்கிரஸ், CPI, CPI(M), மதிமுக, மமக ஆகிய கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன. இதுவரை திமுக தரப்பில் இவ்விருந்தில் கலந்துகொள்வது குறித்து ஏதும் கூறவில்லை.
2026 IPL சீசனில் தோனி விளையாடுவாரா (அ) பாதியில் ஓய்வை அறிவிப்பாரா என்ற கேள்வி கிரிக்கெட் அரங்கில் ஒலித்துக் கொண்டே உள்ளது. ஒருவேளை தோனி விளையாடவில்லை என்றால் CSK-வின் அடுத்த வி.கீ., பேட்ஸ்மேனாக யாரை தேர்ந்தெடுப்பது என்ற பட்டியலும் தயாராகி வருகிறதாம். இதில் சஞ்சு சாம்சன் (RR), உர்வில் படேல் (CSK), ரஹ்மானுல்லா குர்பாஸ் (KKR), இஷான் கிஷன் (SRH) , நாராயண் ஜெகதீசன் (KKR) ஆகியோர் உள்ளனர்.
திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிக்கு அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தனது வாழ்த்தை தெரிவித்த வைரமுத்து, ரஜினி ஒரு அபூர்வ ராகம் என தெரிவித்துள்ளார். அதேபோல் DCM உதயநிதி ஸ்டாலின், டிடிவி தினகரன், செல்வப்பெருந்தகை, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் ரஜினிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் நாட்டில் சில்லறை பணவீக்கம் 1.55% ஆக குறைந்துள்ளது. அரசின் CPI(consumer price index) அறிக்கையின்படி ஜூன் மாதத்தில் 2.1% ஆக இருந்த பணவீக்கம், ஜூலையில் 1.55% ஆக குறைந்தது. 2017 ஜூன் மாதத்திற்கு பிறகு சில்லறை பணவீக்கம் 2% கீழ் குறைவது இதுவே முதல்முறையாகும். பொதுவாக பணவீக்கம் குறைந்தால் நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதோடு வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும்.
நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜின் திருமண சர்ச்சை இன்னும் ஓயவில்லை. திருமண செய்தி வெளியான அடுத்த நாளே, தான் கர்ப்பம் என 2-வது மனைவி ஜாய் கிரிசில்டா கூறினார். ஆனால், <<17386595>>முதல் மனைவி ஷ்ருதியுடன்<<>> நேற்று நிகழ்ச்சியில் ரங்கராஜ் பங்கேற்றது பல கேள்விகளை எழுப்பியது. இதனிடையே, மெடிக்கல் செக் அப் படங்களை பதிவிட்ட கிரிசில்டா, குழந்தைக்கு ராஹா ரங்கராஜ் என பெயர் வைத்துள்ளாராம். ஒரே குழப்பம்!
நெல்லை MS பல்கலையில் கவர்னரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி, நாகர்கோவில் மாநகர திமுக துணைச் செயலாளரான ராஜனின் மனைவி ஜீன் ஜோசப் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். காலகாலமாக கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவதாகவும் அவர் X தளத்தில் சாடியுள்ளார். திமுகவைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
நிலநடுக்கம் தொடர்பான எச்சரிக்கையை உங்கள் ஃபோனில் பெற இந்த Setting-ஐ ON செய்தால் போதும்..
▶உங்கள் போன் Android 5.0 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷனில் இருக்க வேண்டும்.
▶இண்டர்நெட், லொகேஷனை ON செய்யுங்கள்
▶போனில் உள்ள ‘Settings’க்கு செல்லுங்கள்.
▶அங்கு ‘Safety & Emergency’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். ▶பிறகு ‘Earthquake Alerts’ ஆப்ஷனை தேடி அதனை ON செய்து வைத்துக்கொள்ளவும்.
2030 காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பிடம் இந்தியா தனது விண்ணப்பத்தை விரைவில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த பரிந்துரை செய்யப்பட்டதால், சமீபத்தில் காமன்வெல்த் கூட்டமைப்பு அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து குஜராத் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
பயிற்சிக்கு சென்ற மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து சென்னை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அண்ணாநகரில் கராத்தே பயிற்சி நடத்தி வந்த கெபிராஜ், மாணவி ஒருவர் அளித்த புகாரின்பேரில் 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், கெபிராஜுக்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.