India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டிலும் ED சோதனை நடைபெற்று வருகிறது. நேருவின் மகன் மற்றும் சகோதரர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வந்த அதிகாரிகள், தற்போது தில்லை நகரில் உள்ள அமைச்சரின் வீட்டிலும் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் உள்ள அமைச்சரின் சகோதரர் வீட்டிலும் சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில், பும்ரா இல்லாத போதும், சிராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது குறித்து மறைமுகமாக பேசியுள்ள அவர், ‘ஒரு கட்டத்தில் நடந்த விஷயத்தை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை, ஆனாலும் என் விளையாட்டின் மீதே கவனம் வைத்ததாக தெரிவித்தார். நடப்பு IPL தொடரில் அவர், தொடர்ந்து 2 போட்டிகளில், GT அணிக்காக விளையாடி ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, செங்கோட்டையன் 2வது முறையாக சந்தித்தது பல யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. இதற்கிடையில், செல்வாக்கு இல்லாத செங்கோட்டையன் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் சாடியிருந்தார். இந்நிலையில், பாஜக தலைவர்களுடன் நெருக்கம் காட்டும் செங்கோட்டையன் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விமானத்தில் செல்ல, நமக்கு ‘Boarding pass’ கொடுப்பார்கள். ஆனால், இங்கு கடவுளுக்கும் ஸ்பெஷல் ‘Boarding pass’ கொடுத்து ஏற்றிவிட்டு இருக்கின்றனர். சீனாவின் 2 கடல் தெய்வங்களின் விக்கிரகங்களை தைவான் நாட்டுக்குக் கொண்டு செல்ல, Xiamen ஏர்லைன்ஸ் ஆபிசர்கள், இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். விமானத்தில், தெய்வங்கள் அழகாக அமர்ந்து பயணித்த போட்டோஸ் வெளியாகி வைரலாகி வருகிறது. யாராக இருந்தாலும், ரூல்ச மீற முடியுமா!
டெல்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து அண்மையில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் கண்டறியப்பட்டது. இதனால் நீதித் துறை மீதான நம்பகத்தன்மையை நிலைநாட்ட, சொத்து விவரங்களை பொதுவெளியில் வெளியிடுவதற்கு நீதிபதிகள் ஒப்புக் கொண்டனர். அதன் அடிப்படையில் நாட்டில் உள்ள 25 ஐகோர்ட்களில் இருக்கும் 769 நீதிபதிகளில் 95 பேர் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
குழந்தை நட்சத்திரமாக ஹாலிவுட்டில் அறிமுகமான நடிகர் ஜே நார்த்(73) பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார். இவர், பிரபலமான ‘Dennis the menace’ தொடரிலும், 1999ல் வெளிவந்த தி சிம்ப்சன்ஸ் படத்திலும் நடித்திருந்தார். தன்னுடைய அசாத்திய திறமையால் கால் நூற்றாண்டு ஹாலிவுட்டை கலக்கிய அவருக்கு, திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #RIP
மகிழ்ச்சியான வாழ்வுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் தேவை. 1948ல் உலக சுகாதார நிறுவனம் (WHO) நிறுவப்பட்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதி உலக சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள், ‘Healthy beginnings, hopeful futures’. ஆகவே, தீயப்பழக்கத்தை இன்றே கைவிடுங்கள். நண்பர்களோடு சேர்ந்து செய்யும் போது ஸ்டைலாக, ஜாலியாக இருந்தாலும், பின் விளைவுகளை தனியாகவே சந்திக்கணும்.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனுக்கு சொந்தமான TVH கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை(ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் அதிகாலை முதலே 5 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. அதேபோல், பெரம்பலூர் தொகுதி எம்.பியும், கே.என்.நேருவின் மகனுமான அருண் நேரு வீட்டிலும் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு வேலை கிடைச்சிடுச்சு.. இனி உனக்கு என்ன கஷ்டம் எனக் கேட்டால், இவருக்கு அந்த வேலையே கஷ்டமாக மாறிவிட்டது. பஸ்ஸில் டிக்கெட் கொடுக்க, இவர் எந்திரிச்சி நின்றால், பஸ்ஸின் மேற்கூரையில் தலை இடிக்கும். கழுத்தை சாய்த்தப்படியே டிக்கெட் கொடுக்கிறார். பஸ்ஸின் உயரம் 6 அடி, இவரோ 6.4. தெலங்கானாவில் சொல்ல முடியாமல் தவிக்கும் இவருக்கு வேறோரு சரியான வேலைக் கொடுக்கும்படி கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
கோடை வெயில் காரணமாக, 1 – 5 ஆம் வகுப்புகளுக்கு இறுதி பருவத் தேர்வு இன்று முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி, 1,2,3ஆம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் 12 மணி வரையும், 4,5ஆம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் 4 மணி வரையும் தமிழ் உட்பட மொழிப்பாட தேர்வுகள் நடைபெறவுள்ளன. 1-3ஆம் வகுப்புக்கு ஏப்.12ஆம் தேதியும், 4-5ஆம் வகுப்பு ஏப்.18ஆம் தேதியும் கோடை விடுமுறை தொடங்கவுள்ளது.
Sorry, no posts matched your criteria.