news

News April 7, 2025

19 வயது நபரின் நுரையீரலில் 7 ஆணிகள்!

image

மகாராஷ்டிராவில் இளைஞரின் நுரையீரலில் சிக்கியிருந்த 7 ஆணிகளை 3 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு டாக்டர்கள் அகற்றியுள்ளனர். தூங்கும்போது தவறுதலாக ஆணிகளை விழுங்கியதாக கூறி அந்த 19 வயது இளைஞர் மும்பையில் உள்ள பிம்பிரி ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியுள்ளார். இதனைக் கேட்டு முதலில் ஷாக்கான டாக்டர்கள் பின்னர் தங்களது டூட்டியை செய்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர். தூங்கும் போது கூட ஜாக்கிரதையா இருங்க மக்களே!

News April 7, 2025

இப்படி ஒரு Resignation லெட்டரை நீங்க பாத்திருக்க மாட்டீங்க!

image

வேலையை விடும் போது, அனுப்பும் மெயிலில் பெரிய கதையே எழுதுவார்கள். ‘சீனியர்கள் உதவினார்கள், இந்த ஆபீஸ் தான் பெஸ்ட்’ என பல கதைகள் இருக்கும். ஆனால், யாரும் இப்படி ஒரு Resignation letter’ஐ பார்த்திருக்கவே முடியாது. வெறும் 7 வார்த்தைகள் தான். ‘இந்த Charity வேலை எனக்கானது இல்லை.. நான் வெளியேறுகிறேன்’ என நேராக பொட்டில் அடித்தார் போல, கூறிவிட்டு ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். ஆனா, இதுவே போதும்ல!

News April 7, 2025

இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத சரிவு

image

இந்திய பங்குச்சந்தைகள் இன்று வரலாறு காணாத சரிவைக் கண்டுள்ளன. காலையில் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் சரிந்து 72,757 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேபோல், நிஃப்டியும் 900 புள்ளிகள் சரிந்துள்ளதால் 21,887 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இதனால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News April 7, 2025

300 இருக்கட்டும்… அதுல பாதிக்கூட வரல..!

image

நடப்பு IPL சீசனின் முதல் போட்டியில் SRH விளையாடியதைப் பார்த்து, அடேங்கப்பா… இவுங்க தான் 300 ரன்கள் அடிக்கப்போற ஃபர்ஸ்ட் டீம் என்றெல்லாம் கம்பு சுத்தினார்கள் ரசிகர்கள். ஆனால், இப்போ நிலைமையே வேறு. ஆம், பட்டா பாக்கியம்… படாட்டி லேகியம் என்ற போக்கில் கடைசி 2 மேட்சில் SRH 150 ரன்களுக்கே தடுமாறி விட்டது. ஃபேன்ஸ் புலம்ப ஆரம்பித்து விட்டனர். SRH மீளுமா.. நீங்க என்ன நினைக்கிறீங்க?

News April 7, 2025

ரெப்போ வட்டி குறைகிறது

image

வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25% ( நாளை மறுநாள்) குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வட்டி விகிதம் குறைந்தால், வீட்டுக்கடன், தனிநபர் கடன், வாகன கடன் வாங்கியவர்கள் பயன்பெறுவார்கள். ஆனால், ‘பிக்சட் டெபாசிட்’ போன்ற முதலீட்டிற்கு வட்டி குறையும் சிக்கலும் உள்ளது. மேலும், பணப்புழக்கம் அதிகரிக்கும், கடன் வாங்குதல் அதிகரிக்கும், நுகர்வு அதிகரிக்கும்.

News April 7, 2025

BREAKING: அமைச்சர் கே.என்.நேரு வீட்டிலும் சோதனை

image

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டிலும் ED சோதனை நடைபெற்று வருகிறது. நேருவின் மகன் மற்றும் சகோதரர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வந்த அதிகாரிகள், தற்போது தில்லை நகரில் உள்ள அமைச்சரின் வீட்டிலும் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் உள்ள அமைச்சரின் சகோதரர் வீட்டிலும் சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News April 7, 2025

‘என்னால் ஜீரணிக்க முடியவில்லை..’

image

நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில், பும்ரா இல்லாத போதும், சிராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது குறித்து மறைமுகமாக பேசியுள்ள அவர், ‘ஒரு கட்டத்தில் நடந்த விஷயத்தை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை, ஆனாலும் என் விளையாட்டின் மீதே கவனம் வைத்ததாக தெரிவித்தார். நடப்பு IPL தொடரில் அவர், தொடர்ந்து 2 போட்டிகளில், GT அணிக்காக விளையாடி ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.

News April 7, 2025

செங்கோட்டையன் மீது நடவடிக்கையா?

image

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, செங்கோட்டையன் 2வது முறையாக சந்தித்தது பல யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. இதற்கிடையில், செல்வாக்கு இல்லாத செங்கோட்டையன் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் சாடியிருந்தார். இந்நிலையில், பாஜக தலைவர்களுடன் நெருக்கம் காட்டும் செங்கோட்டையன் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News April 7, 2025

கடவுளுக்கு ஸ்பெஷல் ‘Boarding pass’

image

விமானத்தில் செல்ல, நமக்கு ‘Boarding pass’ கொடுப்பார்கள். ஆனால், இங்கு கடவுளுக்கும் ஸ்பெஷல் ‘Boarding pass’ கொடுத்து ஏற்றிவிட்டு இருக்கின்றனர். சீனாவின் 2 கடல் தெய்வங்களின் விக்கிரகங்களை தைவான் நாட்டுக்குக் கொண்டு செல்ல, Xiamen ஏர்லைன்ஸ் ஆபிசர்கள், இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். விமானத்தில், தெய்வங்கள் அழகாக அமர்ந்து பயணித்த போட்டோஸ் வெளியாகி வைரலாகி வருகிறது. யாராக இருந்தாலும், ரூல்ச மீற முடியுமா!

News April 7, 2025

சொத்து விவரங்களை வெளியிட்ட நீதிபதிகள்!

image

டெல்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து அண்மையில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் கண்டறியப்பட்டது. இதனால் நீதித் துறை மீதான நம்பகத்தன்மையை நிலைநாட்ட, சொத்து விவரங்களை பொதுவெளியில் வெளியிடுவதற்கு நீதிபதிகள் ஒப்புக் கொண்டனர். அதன் அடிப்படையில் நாட்டில் உள்ள 25 ஐகோர்ட்களில் இருக்கும் 769 நீதிபதிகளில் 95 பேர் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

error: Content is protected !!