India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். செப்டம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலேயே ஜனாதிபதி பங்கேற்க இருந்த நிலையில் கடை நேரத்தில் ரத்தானது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை உலுக்கிய கவின் ஆணவக் கொலையில் முக்கிய திருப்பமாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான பெண்ணின் தந்தை சரவணன், சகோதரர் சுர்ஜித் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலுக்கும் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பல அதிர்ச்சித் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
₹2.88 லட்சம் கோடி கொடுத்து கூகுள் குரோமை வாங்க Perplexity AI முன்வந்துள்ளது. ஆன்லைன் Browsing-ல் Monoply செய்ததாக எழுந்த புகாரில், குரோம் பிரவுசரை விற்க அமெரிக்க கோர்ட் உத்தரவிட்ட நிலையில், Perplexity AI இந்த ஆஃபரை அறிவித்துள்ளது. ஆனால், இந்த ஆஃபரை ஏற்காமல், கூகுள் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமானோர் குரோமை பயன்படுத்துகின்றனர்.
சுதந்திர தினத்தன்று கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு கவர்னர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் தவெகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக குடியரசு தினத்தன்று தேநீர் விருந்துக்கு பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற அடிப்படையில் தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது, விஜய் புறக்கணித்தார். இம்முறை செல்வாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விழுப்புரத்தில் தனியார் பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது, <<17390065>>11-ம் வகுப்பு மாணவன் மோகன்ராஜ்<<>> திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மாணவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மாரடைப்பிற்கான அறிகுறிகள் தெரியாது என்றும் டாக்டர்கள் குறிப்பிட்டுள்ளனர். இளவயது மாரடைப்பு மரணங்கள் அண்மைகாலமாக அதிகரிப்பது கவலை அளிக்கிறது.
*<<17393654>>தூய்மைப் பணியாளர்கள்<<>> உடனான பேச்சுவார்த்தை தோல்வி.
*கவர்னர் <<17393219>>தேநீர் விருந்தை<<>> புறக்கணித்த கட்சிகள்.
*தீவிரவாத தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் <<17348912>>வீரமரணம்<<>>.
*கவர்னரிடம் இருந்து பட்டம் பெற மறுப்பு: <<17392715>>அண்ணாமலை<<>> சாடல். *Rajini 50: <<17392370>>கமல்<<>> உள்ளிட்டோர் வாழ்த்து. *<<17391491>>ICC<<>> டாப் வரிசையில் கெத்து காட்டும் இந்திய வீரர்கள்.
சீனாவில் புலியின் சிறுநீரை விலைக்கு வாங்கிச் செல்லும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் பிங்க்பெங்சியா என்ற உயிரியல் பூங்காதான் புலியின் சிறுநீரை விற்பனை செய்கிறது. புலியின் சிறுநீரால் மூட்டு வலி, சுளுக்கு, தசை வலிகள் குணமாவதாக நம்பப்படுகிறது. ஒரு சிறுநீர் பாட்டில் இந்திய மதிப்பில் ₹600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்ட <<17384015>>கேப்டன் சுப்மன் கில்<<>>, ஜூலை மாதத்தின் சிறந்த ICC வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், 4-வது முறையாக இந்த விருதை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். கில் ஏற்கெனவே, 2023 ஜனவரி, செப்டம்பர் மற்றும் 2025 பிப்ரவரி மாதங்களிலும் சிறந்த வீரருக்கான விருதை பெற்றுள்ளார்.
SBI வங்கியில் காலியாக உள்ள 5,180 Junior Associates (கிளார்க்) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 380 காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 20 – 28. தேர்வு முறை: முதல்நிலை, முதன்மைத் தேர்வுகள், நேர்காணல். தேர்வுக் கட்டணம்: ₹750. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.26. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
M.A. பகவத் கீதை படிப்பை இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவை கற்பிக்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்திய கலாசாரத்தை அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பட்டப்படிப்பை கற்பதன் வழியாக தலைமைத்துவம், முடிவெடுக்கும் திறன், சமூக அரசியல் அம்சங்களை மாணவர்கள் அறிய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.