India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் சீனா பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை கையில் எடுத்திருக்கிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகளும் அமெரிக்க பொருட்களுக்கு வரிகளை உயர்த்த தயாராகி வருகின்றன. ஆனால், இந்தியா இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த விரும்புகிறது. முதல் நாடாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து ஆசிய நாடுகளை ஓரங்கட்ட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
டாஸ்மாக் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தான் குறிப்பிட்டோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற முயற்சிப்பதாக இபிஎஸ் குற்றம்சாட்டிய நிலையில், அமைச்சர் ரகுபதி இவ்வாறு விளக்கமளித்துள்ளார். மேலும் டாஸ்மாக் விவகாரத்தில் எந்த ஊழலும் நடக்கவில்லை என்றும், அதை நிரூபிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
நாதக தலைவர் சீமான் மாலை 5 மணிக்குள் நேரில் ஆஜராக திருச்சி குற்றவியல் கோர்ட் கெடு விதித்துள்ளது. தன்னையும், தனது குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் சீமான் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இன்று காலை வழக்கு விசாரணையின்போது சீமான் ஆஜராகவில்லை. இதனால் மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை 8.30 மணிக்கு உருவானதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால், தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை வரை வடமேற்கு திசையில் நகரும் எனவும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மத்திய கடலில் வடக்கு நோக்கி நகரும் என்றும் கணித்துள்ளது.
தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு மனித சமூகத்துக்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் கொண்டு வருகின்றன. அப்படி ஒரு ஆபத்து AI வளர்ச்சியால் வரும் என்கிறார் அதனை ஆய்வு செய்து வரும் டீப்மைண்ட் நிறுவன சிஇஓ டெமிஸ் ஹாஸாபிஸ். வரும் 2030க்குள் மனிதர்களை போல AIக்கு அறிவுத்திறன் கிடைத்துவிடும் என இவர் கணித்துள்ளார். அதே நேரம், இது மனிதாபிமானத்தை முற்றிலும் அழித்துவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
வக்ஃப் வாரிய சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வக்ஃப் வாரிய சட்டத்துக்கு எதிராக தாக்கலாகும் மனுக்களை விரைந்து விசாரிக்க கோரி தலைமை நீதிபதியிடம் முறையிடவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் வரி விதிப்பு அமலான நாளில் இருந்தே உலகின் பல நாடுகளுக்கு டென்ஷன்தான். அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்திய பங்குச் சந்தை இன்று கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 19 காசுகள் சரிந்துள்ளது. தற்போது ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு, ₹85.63 ஆக இருக்கிறது. ரூபாயின் மதிப்பு உயர என்ன செய்யலாம்?
தெற்கில் கடந்த வாரம் ‘கானா’ கருப்பசாமி, வடக்கில் நேற்று பெருமாள் என மூத்த தலைவர்களின் அடுத்தடுத்த மறைவு அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் தருணத்தில் இரு முக்கிய தளபதிகளை இழந்துவிட்டோம் என இபிஎஸ், நிர்வாகிகளிடம் வேதனையுடன் கூறியுள்ளார். <<15888600>>Ex MLA கருப்பசாமி<<>>, <<16015298>>Ex MP பெருமாள்<<>> இருவரும் நல்ல களப் பணியாளர்கள் என்பதால் ஜெயலலிதாவின் நற்பெயரை பெற்றவர்கள் ஆவர்.
வாரத்தின் முதல்நாளே தலையில் துண்டுபோடும் நிலைக்கு முதலீட்டாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்திய பங்குச் சந்தையில் அனைத்துத் துறைகளின் பங்குகளும் ரெட் (சரிவு) சிக்னலாகவே உள்ளன. சென்செக்ஸ் (-2,542), நிப்ஃடி (-810) கடும் வீழ்ச்சியை சந்தித்திருப்பதால், ₹19 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வரிவிதிப்பால் ஆசியா முழுவதுமே பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன.
இந்தியாவை சுற்றிப் பார்க்க ஆசையாய் வந்த வெளிநாட்டு பெண், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தாஜ்மஹாலில் நடந்துள்ளது. செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த இளம்பெண்(28), தாஜ்மஹாலை பார்வையிடச் சென்றபோது, தொடக்கூடாத இடங்களில் தொட்டு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, சிசிடிவி காட்சி மூலம் ஆக்ராவைச் சேர்ந்த கரண் ரத்தோர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.