news

News April 7, 2025

நொந்து போனது யார்? – CM ஸ்டாலினுக்கு EPS பதிலடி

image

ஸ்டாலின் அரசில்தான் மக்கள் நொந்து நூலாகியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். அடுத்தாண்டு தேர்தல் வருவதை கருத்தில் கொண்டுதான் சட்டப்பேரவையில் மீனவர்களுக்கான அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தது திமுக அரசுதான் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக தொண்டர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகியுள்ளதாக பேரவையில் CM ஸ்டாலின் பேசி இருந்தார்.

News April 7, 2025

அதிமுக Ex M.P. சி.பெருமாள் உடல் நல்லடக்கம்!

image

அதிமுக மூத்த தலைவரும், Ex எம்.பியுமான சி.பெருமாள் (68) உடல் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஆம்பள்ளி கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உடல் நலக்குறைவால் நேற்று மறைந்த அவரது உடலுக்கு அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் நேரில் அஞ்சல் செலுத்தினர்.

News April 7, 2025

முதல் இந்தியர்… மணல் ஓவியக் கலைஞருக்கு கௌரவம்!

image

முக்கிய தலைவர்களின் பிறந்தநாளிலோ, விழாக் காலங்களிலோ ஒடிசா கடற்கரையில் தனது மணல் சிற்பம் மூலம் கவனத்தை ஈர்ப்பவர் சுதர்சன் பட்நாயக். இங்கிலாந்தில் நடைபெற்ற மணல் கலை விழாவில் பங்கேற்ற அவர், பிரெட் டாரிங்டன் மணல் மாஸ்டர் விருதை வென்றுள்ளார். இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் சுதர்சன் பட்நாயக்தான். ஒடிசாவைச் சேர்ந்த அவருக்கு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

News April 7, 2025

பாஜகவின் கூட்டணி கட்சி ED : ரகுபதி விமர்சனம்

image

அமைச்சர் கே.என்.நேரு வீடு உள்ளிட்ட பல இடங்களில் காலையில் இருந்து ED சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை முத்திரை குத்தப்படாத அரசியல் கட்சி என்றும், அதை பாஜக கூட்டணி கட்சியாகவே பார்க்கிறோம் என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். மேலும், இதுபோன்ற சோதனைகளுக்கு எல்லாம் திமுக அஞ்சாது; எல்லாத்தையும் பார்க்க தயார் எனவும் சவால் விடுத்துள்ளார்.

News April 7, 2025

3 நாட்களில் PF பணத்தை எடுப்பது எப்படி?

image

இதற்கு PF கணக்குடன் பேங்க், ஆதார், PAN ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும் ✦EPFO போர்ட்டலில், லாக்-இன் செய்து, ‘Online Services’ல் ‘Claim’ஐ கிளிக் செய்யவும் ✦வங்கி அக்கவுண்டை ‘Verify’ செய்து, என்ன வகை Withdrawl செய்ய வேண்டுமோ, அதை தேர்வு செய்யுங்கள் (PF Advance, Final Settlement) ✦Withdrawl-க்கான ஃபார்மை நிரப்பிய பின், வங்கி எண் போன்ற தகவல்களை சரிபார்த்து கொடுத்தால் போதும். SHARE IT.

News April 7, 2025

வக்ஃப் சட்டத்தை அமல்படுத்தும் கேரளா!

image

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்யும்போது கேரளா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. தற்போது மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, சட்டமாகியுள்ளது. இந்நிலையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக அந்தச் சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியத்தை ஏற்படுத்த கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதலில் எழுந்த கடும் எதிர்ப்பு, இப்போது எப்படி காணாமல் போனது? கமெண்ட் செய்யுங்கள்!

News April 7, 2025

டாஸ்மாக் முறைகேடு நிரூபணமாகி விட்டது: இபிஎஸ்

image

சட்டப்பேரவைக்கு வெளியே பேட்டியளித்த இபிஎஸ், டாஸ்மாக்கில் ₹1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக ED தெரிவித்ததை சுட்டிக்காட்டினார். இந்த வழக்கை வேறு மாநில ஐகோர்ட்டில் விசாரிக்க வேண்டும் என டாஸ்மாக் கோரிக்கை வைத்தது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், தமிழக அரசு தவறு செய்தது நிரூபணம் ஆகிவிட்டதாக குற்றஞ்சாட்டினார். மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்கள் மக்கள் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இபிஎஸ் கூறினார்.

News April 7, 2025

பரஸ்பர வரி விதிக்குமா? இந்தியாவின் முடிவு என்ன?

image

அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் சீனா பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை கையில் எடுத்திருக்கிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகளும் அமெரிக்க பொருட்களுக்கு வரிகளை உயர்த்த தயாராகி வருகின்றன. ஆனால், இந்தியா இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த விரும்புகிறது. முதல் நாடாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து ஆசிய நாடுகளை ஓரங்கட்ட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

News April 7, 2025

இபிஎஸ் குற்றச்சாட்டு… அமைச்சர் ரகுபதி மறுப்பு!

image

டாஸ்மாக் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தான் குறிப்பிட்டோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற முயற்சிப்பதாக இபிஎஸ் குற்றம்சாட்டிய நிலையில், அமைச்சர் ரகுபதி இவ்வாறு விளக்கமளித்துள்ளார். மேலும் டாஸ்மாக் விவகாரத்தில் எந்த ஊழலும் நடக்கவில்லை என்றும், அதை நிரூபிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

News April 7, 2025

சீமானுக்கு கெடு விதித்த கோர்ட்!

image

நாதக தலைவர் சீமான் மாலை 5 மணிக்குள் நேரில் ஆஜராக திருச்சி குற்றவியல் கோர்ட் கெடு விதித்துள்ளது. தன்னையும், தனது குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் சீமான் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இன்று காலை வழக்கு விசாரணையின்போது சீமான் ஆஜராகவில்லை. இதனால் மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!