India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், வாடிகனில் நாளை போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்குகள் நடக்கும் நிலையில், நாளைய தினம் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்றும், அரசு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது எனவும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை Chepauk மைதானத்தில் நடைபெற்று வரும் CSK vs SRH இடையிலான போட்டி, இரு அணிகளுக்கும் வாழ்வா, சாவா போட்டியாகும். முதலில் பேட்டிங் செய்துவரும் CSK அணி, முதல் ஓவரின் முதல் பந்திலேயே ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்தது. ஷமி வீசிய முதல் பந்திலேயே ர ரஷீத் அபிஷேக்கிடம் கேட்ச் கொடுத்து, வந்த வேகத்தில் நடையை கட்டினார். தற்போது ஒரு ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 7 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
தற்போது நடப்பது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலான சண்டை என பஹல்காம் தாக்குதல் குறித்து RSS தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார். இப்போது நடக்கும் சண்டை மதங்களுக்கு இடையிலானது அல்ல எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், நம் மக்கள் யாரும் எதிராளியின் மதத்தை கேட்டு கொன்றதில்லை எனவும், இந்துக்கள் ஒருபோதும் அதை செய்ய மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் நிலவி வரும் நிலையில், PAK-ன் நிதிநிலையை கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். அந்நாட்டின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (Nominal GDP) ₹31.9 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால், மஹாராஷ்டிராவின் GSDP ₹42.67 கோடியாகவும், தமிழ்நாட்டின் GSDP ₹31.55 லட்சம் கோடியாக உள்ளது. மஹாராஷ்டிரா எனும் ஒற்றை மாநிலமே, PAK-ன் பொருளாதாரத்தை விட ₹10 லட்சம் கோடி அதிகமாக கொண்டுள்ளது.
SRH அணிக்கு எதிராக CSK விளையாடும் இன்றைய IPL போட்டியில், மூன்று முக்கிய மாற்றங்களை செய்திருக்கிறார் கேப்டன் தோனி. விஜய் ஷங்கருக்கு பதிலாக தீபக் ஹூடாவும், ரச்சின் ரவீந்திராவுக்கு பதிலாக டெவால்ட் ப்ரெவிஸும், ஜேமி ஓவர்டனுக்கு பதிலாக சாம் கரனும் களமிறங்கவுள்ளனர். ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே போன்ற இளம் வீரர்களுடன் CSK அணி இப்போட்டியில் களம் இறங்கவுள்ளது.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. மேலும், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் CSK vs SRH அணிகள் மோதவுள்ளன. டாஸ் வென்ற SRH கேப்டன் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இப்போட்டியில் தோல்வியுறும் அணி, புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்திற்கு செல்லும் என்பதால் தோல்வியை தவிர்க்க இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.
‘கேம் சேஞ்சர்’ படத்திற்கான ஒன்-லைனை கார்த்திக் சுப்புராஜ் தான் ஷங்கருக்கு கொடுத்தார். ஆனால், அதில் நிறைய மாற்றங்கள் செய்து, கதையையே மாற்றிவிட்டதாக கார்த்திக் தெரிவித்துள்ளார். சாதாரண IAS அதிகாரியாக ஹீரோ இருந்ததை, ஷங்கர் மிகவும் பிரமாண்டமாக மாற்றிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ₹300 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம், வெறும் ₹180 கோடியை வசூலித்தது மட்டுமில்லாமல் கடுமையான விமர்சனங்களையும் பெற்றது.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இன்று அட்டாரி வாகா எல்லை வழியாக 188 பாகிஸ்தானியர்கள் வெளியேறியுள்ளனர். அதேபோல், பாகிஸ்தானில் இருந்து 286 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். முன்னதாக, நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தானியர்களைக் கண்டறிந்து வெளியேற்ற அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியிருந்தார்.
தமிழகத்தில் இன்று 4 இடங்களில் வெயிலின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக சுட்டெரித்தது. கரூர் பரமத்தி & மதுரை ஏர்போர்ட்டில் வெப்பம் 40.5 டிகிரியாக பதிவானது. திருச்சியில் 40.1 & வேலூரில் 40 டிகிரி என வெப்பம் சுட்டெரித்தது. அடுத்தபடியாக, ஈரோடு 39.6 டிகிரி, சேலம் 39.5 டிகிரி, என்று அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. சென்னையில் வெயில் 37.3 டிகிரியாக ரெகார்ட் ஆனது.
Sorry, no posts matched your criteria.