India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
துபாயில் வரும் மே மாதம் 4ஆம் தேதி பிரமாண்ட திருக்குறள் விழா நடைபெறவுள்ளது. விழாவுக்கு புதுச்சேரி CM ரெங்கசாமி தலைமை வகிக்க, மலேசிய எம்பி டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன், நடிகர் விவேக் ஓபராய், பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத், ஞான சம்பந்தன், சுமதி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இதையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதில் பங்கேற்க முன்பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ₹2 உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகிறது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நுகர்வோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனாலும், பொதுமக்களுக்கு விலையை உயர்த்தக் கூடாது என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு உம்ரா மற்றும் பிசினஸ் விசாக்கள் வழங்குவதை சவுதி தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறது. இந்த விசாவில் வருபவர்கள் அப்படியே சட்டவிரோதமாக தங்கிவிட்டு ஹஜ் யாத்திரையையும் முடித்து விட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படுவதாக சவுதி அரசு கருதுகிறது. இதை தவிர்க்கவே ஜூன் மாதம் வரை விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.
*IDBI வங்கியில் உள்ள 119 ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.
*அனுபவம் வாய்ந்த இளங்கலை, முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
*மாத சம்பளமாக பதவிக்கேற்ப ₹64,820 – ₹1,20,940 வரை வழங்கப்படும். *குரூப் டிஸ்கஷன், நேர்முகத்தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும். *வரும் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். *முழுத் தகவலுக்கு <
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் தொகுதி அதிமுக முன்னாள் MLA வி.அரங்கராஜ் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அரங்கராஜை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
மே.வங்கத்தில் ஆசிரியர் நியமனத் தேர்வில் முறைகேடு செய்தவர்களுக்கு பணி நியமனம் வழங்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், ஏராளமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் யாரும் வேலையிழக்க மாட்டார்கள் என மாநில CM மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார். தான் உயிருடன் இருக்கும் வரை அது நடக்காது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
பாஜக உடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதாக பேசப்படுகிறது. இதுகுறித்து இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன், பாஜகவின் மிரட்டலுக்கு அதிமுக பணிந்து செல்வதாக விமர்சித்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை என சாடிய அவர், ஏதோ காரணங்களால் பாஜக சொல்வதை எல்லாம் அதிமுக கேட்பதாக விமர்சித்தார்.
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனையில் சிக்கிய ஆவணங்களை எடுத்து செல்ல காரில் இருந்து அதிகாரிகள் சூட்கேஸ் எடுத்துச் சென்றுள்ளனர். இன்று காலை முதல் அமைச்சர் நேரு, அவரது மகன் மற்றும் சகோதரர் வீடுகளில் ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஸ்டாலின் அரசில்தான் மக்கள் நொந்து நூலாகியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். அடுத்தாண்டு தேர்தல் வருவதை கருத்தில் கொண்டுதான் சட்டப்பேரவையில் மீனவர்களுக்கான அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தது திமுக அரசுதான் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக தொண்டர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகியுள்ளதாக பேரவையில் CM ஸ்டாலின் பேசி இருந்தார்.
அதிமுக மூத்த தலைவரும், Ex எம்.பியுமான சி.பெருமாள் (68) உடல் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஆம்பள்ளி கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உடல் நலக்குறைவால் நேற்று மறைந்த அவரது உடலுக்கு அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் நேரில் அஞ்சல் செலுத்தினர்.
Sorry, no posts matched your criteria.