news

News April 7, 2025

உலக மக்களின் மிகப்பெரிய நோய் இதுவே!

image

மன ஆரோக்கியம் தான், உலகம் சந்தித்து வரும் மிகப்பெரிய நோயாக மாறியிருக்கிறது. உலக மக்களில் 45% பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 31 நாடுகளில் வாழும் மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 4.4% பேர் கவலையாலும், 4% பேர் மனச்சோர்வாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பெண்களை விட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்கிறார்கள். மக்களே, மனம் திறந்து பேசுங்கள். தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ, தவிப்பும் கவலையும் குறையும்!

News April 7, 2025

உ.பி.யில் சட்டம் சீர்குலைந்து விட்டது.. SC கருத்து

image

உ.பி.யில் சட்டம் சீர்குலைந்து விட்டதாக சுப்ரீம் கோர்ட் (SC) கருத்து தெரிவித்துள்ளது. செக் மோசடி வழக்கில் கிரிமினல் வழக்குப்பதிவு செய்தது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த SC, சிவில் விவகாரங்களில் போலீசார் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்வதாகவும், இதை ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டது. இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும் உ.பி. டிஜிபிக்கு SC ஆணையிட்டது.

News April 7, 2025

கணவரை விவாகரத்து செய்கிறாரா மேரி கோம்?

image

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று தந்த EX குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், கணவர் ஆன்லரை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு குத்துச்சண்டை வீராங்கனையின் கணவரும், மேரி கோமும் காதலித்து வருவதாகவும், கோமின் பிஸினஸ் பார்ட்னராக அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2 பேரும் இருக்கும் புகைப்படம் வைரலான நிலையில், இதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என மேரி கோம் தெரிவித்துள்ளார்.

News April 7, 2025

சிறுமியிடம் சில்மிஷம்: பிரபல மத போதகர் மீது போக்சோ

image

மேடைகளில் ஆடிப்பாடி கிறிஸ்தவ மதம் குறித்து போதனை செய்யும் ஜான் ஜெபராஜ் ஞாபகம் இருக்கிறதா? இவர்தான் தற்போது போக்சோ வழக்கில் சிக்கியிருக்கிறார். சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அவர் மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அவரைத் தேட தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News April 7, 2025

இதெல்லாம் சாதாரணங்க: அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

image

பெங்களூருவில் இளம் பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், அவருக்கு தக்க தண்டனை தர வேண்டும் எனப் பலரும் ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், கர்நாடக அமைச்சரான பரமேஷ்வரா, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் இப்படியான சம்பவங்கள் நடப்பது சகஜம் தான் என சர்ச்சைக்குரிய வகையில் பேசி ஷாக் கொடுத்திருக்கிறார்.

News April 7, 2025

இங்கிலாந்து அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

image

ஜாஸ் பட்லருக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் யார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. சாம்பியன் டிராபி தொடரில் படுதோல்வி அடைந்ததை அடுத்து, கேப்டன் பதவியை அவர் துறந்தார். இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ODI, T20 போட்டிகளுக்கு கேப்டனான ஹாரி ப்ரூக் நியமிக்கப்பட்டுள்ளார். 26 வயதான ஹாரி ப்ரூக், 26 ODI, 44 T20I போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

News April 7, 2025

போதையில் விபத்து… சிக்கிய சினிமா இயக்குநர்!

image

கொல்கத்தாவில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சினிமா இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார். தாகூர்புகூர் சந்தைப் பகுதிக்குள், இயக்குநர் சித்தந்த தாஸின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தியதில், ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயம் அடைந்தனர். விபத்தின்போது அவரும், காரில் இருந்த TV பெண் நிர்வாகியும் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இருவரையும் பொதுமக்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

News April 7, 2025

அதிமுகவில் அண்ணன், தம்பி போல் இருக்கிறோம்

image

அதிமுகவில் எந்த விரிசலும் இல்லை; அண்ணன், தம்பி போல உள்ளோம் என்றும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததால், செங்கோட்டையன் மட்டும் அவையில் இருந்தார் எனவும் EX மினிஸ்டர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நிர்மலா உடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு, நான் கூடத்தான் நட்டாவை சந்தித்தேன்; தொகுதி பிரச்னை தொடர்பாக மத்திய அமைச்சர்களை MLAக்கள் சந்திப்பது ஒன்றும் புதிதல்ல என்றும் நாசூக்காக பதிலளித்தார்.

News April 7, 2025

ஒரே நாளில் ₹85,854 கோடியை இழந்த பணக்காரர்கள்

image

இன்று உலகளவில் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்ததால், இந்தியாவின் 4 பெரும் பணக்காரர்கள் ₹85,854 கோடியை இழந்துள்ளனர். அதிகபட்சமாக அம்பானி ₹30,906 கோடியை இழந்துள்ளார். இந்த பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ள அதானி ₹25,757 கோடியை இழந்துள்ளார். OP Jindal குழுமத்தின் சாவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பத்தினர் ₹18,888 கோடியையும், HCL Technologies நிறுவனர் ஷிவ் நாடார், ₹12,878 கோடியையும் இழந்துள்ளனர்.

News April 7, 2025

23 பேரால் கேங்க் ரேப்… ஒரு வாரமாக சிறுமிக்கு கொடுமை!

image

உ.பி.யில் 23 மனித மிருகங்களால் ஒரு சிறுமி வேட்டையாடப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 12-ம் வகுப்பு பயிலும் மாணவி, தனது நண்பருடன் பாருக்கு சென்றுள்ளார். அங்கு அவரது நண்பர்கள் குளிர்பானத்தில் போதை மருந்து கொடுத்து, சிறுமியை ஒரு வாரமாக ரேப் செய்துள்ளனர். 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!