news

News April 25, 2025

SRH-க்கு 155 ரன்கள் இலக்கு

image

SRH-க்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த CSK, 19.5 ஓவர்களில் 154 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆயுஷ் மாத்ரே (30), டெவால்ட் பிரெவிஸ் (42) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு விளையாடினர். ரஷீத், தோனி, துபே உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். SRH அணியின் பேட்டிங் லைன் அப் வலுவாக இருப்பதால், இந்த இலக்கு போதுமானதாக இல்லை. பேட்டிங்கில் சொதப்பிய CSK, பவுலிங்கில் ஜொலிக்குமான்னு பார்ப்போம்.

News April 25, 2025

டிடிவி தினகரன் மீதான வழக்கு ரத்து

image

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. அதிமுக முன்னாள் MP உதயகுமார் மீதான தேர்தல் விதிமீறல் வழக்கையும் நீதிமன்றம் ரத்து செய்தது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக MP தங்க தமிழ்ச்செல்வன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

News April 25, 2025

டான்செட் – சீட்டா தேர்வு முடிவுகள் வெளியானது

image

டான்செட் – சீட்டா ஆகிய நுழைவுத் தேர்வுகளுக்கான முடிவுகளை அண்ணா பல்கலை., வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை <>http://tancet.annauniv.edu/tancet/<<>>-ல் தெரிந்துக் கொள்ளலாம். எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு டான்செட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல் எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சீட்டா மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 25, 2025

₹5-க்கு சபரிமலையில் தரிசன டிக்கெட் புக்கிங்!

image

சபரிமலை வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவும், அவர்களின் நிவாரணத்திற்காகவும் இனி டிக்கெட் புக்கிங் செய்யும் போது, நிவாரணமாக ₹5-யும் கொடுக்கலாம். ஆனால், இது கட்டாயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2011-ல் புல்லுமேடு பகுதியில் தரிசனத்திற்கு வந்த 102 பக்தர்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததை தொடர்ந்து, கோர்ட் உத்தரவின் பேரில் பக்தர்கள் நிவாரண நிதி உருவாக்கப்பட்டது.

News April 25, 2025

படித்த இளைஞர்களுக்கு திமுக அரசு துரோகம்: இபிஎஸ்

image

அரசில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வெறும் 3935 பணியிடங்களுக்கான (Group 4 ) அறிவிப்பை மட்டும் திமுக அரசு வெளியிட்டுள்ளதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது TNPSC தேர்வை நம்பி வருடக்கணக்கில் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் என சாடிய அவர், கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்படாமல், உடனே Group4 பணியிடங்களை 10,000-ஆக உயர்த்த வேண்டும் என்றார்.

News April 25, 2025

ராகு- கேது பெயர்ச்சி: கவனமாக இருக்க வேண்டிய 6 ராசிகள்

image

ஜோதிடப்படி, கிரக பெயர்ச்சிகளால் நன்மைகளும், சில சூழல்களில் பாதிப்புகளும் ஏற்படலாம். வரும் மே 18-ல் ராகு- கேது பெயர்ச்சி நிகழவுள்ளது. இதனால் மிதுனம், கடகம், சிம்மம், விருச்சிகம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிகளுக்கு குடும்ப பிரச்னைகள், உடல்நலக்குறைவு மற்றும் சில பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதை தவிர்க்க பேச்சில் கவனம், வாக்குவாதம் தவிர்த்தல், வாகனம் ஓட்டும்போது கவனம் கடைப்பிடியுங்கள். நல்லதே நடக்கும்.

News April 25, 2025

கவின் படத்தில் அனிருத்.. அசத்தும் காம்போ

image

முன்னணி நடன இயக்குநரான சதீஷ், நடிகர் கவினை வைத்து ‘கிஸ்’ என்ற படத்தை எடுத்துள்ளார். ‘கிஸ்’ படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் முதல் சிங்கள் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். அனிருத் குரல் கவினுக்கு கைகொடுக்குமா?

News April 25, 2025

காஞ்சி சங்கர மடத்தின் அடுத்த தலைவர் இவரா?

image

புகழ்பெற்ற காஞ்சி சங்கர மடத்தின் 71-வது மடாதிபதியாக ஸ்ரீ கணேச ஷர்மா டிராவிட் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆந்திராவைச் சேர்ந்த இவருக்கு, வரும் 30-ம் தேதி தற்போதைய மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி தீக்‌ஷை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிக் வேதத்தில் புலமை பெற்றவரான ஸ்ரீ கணேச ஷர்மா, அனைத்து வேதங்களையும் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

News April 25, 2025

LoC என்றால் என்ன?

image

Line of Control என்பது J&K, லடாக்கில் இந்தியா – பாகிஸ்தான் ராணுவங்களை பிரிக்கும் பகுதியாகும். 1972 சிம்லா ஒப்பந்தத்திற்கு பிறகு LoC நடைமுறைக்கு வந்தது. 1947 போருக்கு பிறகு, 1949-ல் கொண்டுவரப்பட்ட இது Cease Fire Line (CFL) என அழைக்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தை மீறி 1965, 1971-ல் பாக். போரில் ஈடுபட்டதால், 1972-ல் சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தாகி, LoC-ஐ கொண்டு வரப்பட்டது.

News April 25, 2025

தமிழ்நாட்டில் காவல் ராஜ்ஜியம் நடக்கிறதா?… கவர்னர்

image

துணை வேந்தர்களை மாநாட்டில் பங்கேற்கவிடாமல் தடுத்த விதம் எமர்ஜென்சியை நினைவூட்டுவதாக கவர்னர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். காவல்துறையை பயன்படுத்தி VC-க்களை CM தடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஊட்டி சென்ற VC-க்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இங்கு காவல் ராஜ்ஜியமா நடக்கிறது? VC-க்களுக்கு கல்விச் சுதந்திரம் இல்லையா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!