India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொலம்பியாவின் கால்பந்து ஜாம்பவானும், பயிற்சியாளருமான ஜோர்கெ பொலானோ (47) காலமானார். நல்ல பிட்னெஸுடன் இருந்த அவர், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கொலம்பியா கால்பந்தை உலக தரத்துக்கு உயர்த்தியவர்களில் ஒருவரான இவர் 1998-ம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தார். கோபா இத்தாலியா கோப்பையையும் வென்றிருக்கிறார். இவரின் மறைவுக்கு கால்பந்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கச்சா எண்ணெய் விலை 41% குறைந்தாலும், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு பதிலாக, 2% கலால் வரியை மத்திய அரசு உயர்த்தி இருப்பதை ‘வாவ்’ என காங். தலைவர் கார்கே கிண்டல் அடித்துள்ளார். அரசாங்கம் கும்பகர்ண தூக்கத்தில் இருப்பதால், பங்குச்சந்தையில் ஒரே நாளில் ₹19 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சிலிண்டர் விலையையும் ஏற்றி காயத்தில் உப்பைத் தேய்க்க அரசு வந்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.
தினம் ₹200 என்ற அளவில், மாதம் ₹6000 முதலீடு செய்தால், ₹28 லட்சம் வரை பெறும் Jeevan Pragati திட்டத்தை LIC வழங்குகிறது. 12 – 45 வயதினர் இதில் இணையலாம். 12 முதல் 20 ஆண்டு பாலிசி காலம் கொண்ட இத்திட்டத்தில், 20 ஆண்டு முடிவில் ₹14,40,000 கிடைக்கும். இதனுடன் கூடுதல் பெனிபிட்களுடன் சேர்த்து அதிகபட்சமாக ரூ.28 லட்சம் வரை பெறலாம். சேமிப்புடன் லைப் இன்ஷூரன்ஸும் வேண்டுவோருக்கு இது சிறந்த திட்டமாகும்.
டாய்லெட் Flush-ல் 2 விதமான பட்டன்கள் கொடுக்கப்பட்டிருப்பது ஏன் என இதுவரை நீங்கள் யோசித்தது உண்டா? நீர் பயன்பாட்டை குறைக்கவே 2 பட்டன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. திரவக் கழிவுகளை அகற்ற, குறைவான நீரை வெளியேற்றும் சின்ன பட்டனும், திடக் கழிவுகளை அகற்ற அதிகளவு நீரை அனுமதிக்கும் பெரிய பட்டனும் பயன்படுத்தப்படுகின்றன. இதை நாம் சரியாக பயன்படுத்தினால், ஆண்டுக்கு 20,000 லிட்டர் நீரை சேமிக்க முடியும்.
சமையல் சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் தற்போது ரூ.803-க்கு விற்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் இனி ரூ.853 ஆக விலை உயரும். மேலும், மானியம் பெறும் PMUY பயனாளிகளுக்கும், சிலிண்டர் விலை ரூ.500-ல் இருந்து ரூ.550 ஆக விலை உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலை உயர்வை நீங்கள் வரவேற்கிறீர்களா?
மனித வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்ட செல்போன்களால் இளைஞர்களை விட இளம் பெண்களுக்கே ஆபத்து அதிகமாம். ஸ்பெயினில் நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்மார்ட் போன்களால் இளம்பெண்களின் மனநலம் பாதிக்கப்படவும், தற்கொலை எண்ணம் அதிகரிக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களை ஒப்பிடும்போது பெண்கள் சற்று கூடுதல் கவனத்துடன் செல்போனை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகின்றனர். உஷாரா இருக்க லேடீஸ்!
டிரம்ப்பின் புதிய வரி விதிப்பால் ஆப்பிள், சாம்சங் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. சீன இறக்குமதிகளுக்கு 54%, வியட்நாம் பொருள்களுக்கு 46% USA-வில் வரி விதிக்கப்படுவதால், அந்நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளை இந்தியாவிற்கு (26% வரி) மாற்ற அந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. USA- பிற நாடுகளுக்கு இடையே வர்த்தக பேச்சுவார்த்தை எவ்வாறு அமையும் என்பதை பொறுத்து இந்த மாற்றம் நிகழும்.
சந்திரன் சிம்ம ராசிக்குள் நாளை(ஏப்.8) நுழைவதால் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறதாம். *மேஷம்) புதிய தொழில் தொடங்க வாய்ப்பு, வேலையில் பதவி உயர்வு கிடைக்கக் கூடும். *சிம்மம்) தனிப்பட்ட, தொழில்முறை உறவுகளை தெளிவாக வழிநடத்த முடியும். *தனுசு) கல்வி, பயணம், ஆன்மிக தொழிலில் ஈடுபட்டால் முன்னேற்றம் ஏற்படும். * மீனம்) புத்திசாலித்தனமான நிதி முடிவுகளை எடுக்க வாய்ப்பு என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் விராட் கோலி அதிரடியாக அரை சதம் விளாசியுள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் இப்போட்டி நடக்கிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்கிறது. சால்ட் 4 ரன்னில் ஆட்டமிழந்த போதிலும், படிக்கல், கோலி ஜோடி சிறப்பாக விளையாடியது. கோலி 29 பந்துகளில் 51 ரன்கள் அடித்து அசத்தினார்.
MI அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 17 ரன்களை கடந்திருக்கும் விராட் கோலி, டி20 போட்டிகளில் 13,000 ரன்களை கடந்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் 14,562 ரன்களுடன் கிறிஸ் கெயில் இருக்கிறார். அலெக்ஸ் ஹேல்ஸ், ஷோயப் மாலிக், கீரன் பொலார்டு ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்க, விராட் கோலி ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
Sorry, no posts matched your criteria.