India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சபாநாயகர் தன்னை மட்டும் குறிவைத்து பேசவிடாமல் தடுக்கிறார் என தவாக தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் சபாநாயகர் முன்பாக கை நீட்டி பேசியதால் அதிகபிரசங்கித்தனமாக நடந்து கொள்வதாக வேல்முருகனை CM ஸ்டாலின் விமர்சித்திருந்தார். அப்போது முதலே உரசல் ஆரம்பித்திருந்தது. இந்தச் சூழலில், அவையில் தான் பேச எழுந்தாலே சபாநாயகர் எரிச்சலடைகிறார் என விமர்சித்துள்ளார்.
தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து, தென்மேற்கு வங்கக்கடல் வழியாகத் தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் கூடிய பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 ரிசல்ட் முன்கூட்டியே வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு வரும் மே 5-ல் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கேற்றார் போல் பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் 83 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக, மே 9-ம் தேதி ரிசல்ட் வெளியாகும் எனக் கூறப்பட்டது.
மார்ச் மாதத்தில் நாட்டின் எரிபொருள் தேவை கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிரடியாக அதிகரித்துள்ளது. அதாவது, முந்தைய மாதங்களை விட 9.3% வரை தேவை அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது பெட்ரோல் தேவை 10.6% ஆகவும், டீசல் தேவை 10% ஆகவும் அதிகரித்து வருகிறது. சமையல் சிலிண்டர் விற்பனையும் 4.2% அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்களை விமர்சனம் என்ற பெயரால், அவமதிக்கும் வகையில் பேசிவிடக் கூடாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். தனிநபராக முரண்பாடு இருந்தாலும், அவர்களின் பதவி பொதுவானது என அவர் குறிப்பிட்டுள்ளார். வக்ஃப் வாரிய சட்ட மசோதாவிற்கு எதிராக பாஜகவை கண்டித்து இன்று விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில் கட்சி நிர்வாகிகளுக்கு திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.
சிலிண்டர் விலை உயர்வை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் சிலிண்டருக்கு ₹100 மானியம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்தும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இப்போதே திமுக அரசு ₹100 மானியம் கொடுத்தால், உஜ்வாலா பயனளிகளுக்கு ₹300 மானியம் உட்பட ஏழைகளுக்கு ₹468.50க்கு சிலிண்டர் கிடைக்கும் என பாஜகவினர் பதிலடி கொடுக்கின்றனர்.
உலக சுகாதார தினத்தையொட்டி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரகுல் பிரீத் சிங் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிரித்துக்கொண்டே இருங்கள்; மகிழ்ச்சியே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சிறந்த மருந்து என்றும் ரகுல் பிரீத் சிங் பதிவிட்டுள்ளார். தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் ரகுல் பிரீத் சிங். மேலே இருக்கும் புகைப்படங்களை பாத்தாச்சா?
கடந்த நிதியாண்டில் தேசிய கட்சிகளில் அதிகபட்சமாக பாஜகவுக்கு ₹2,243 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. 2022-23 நிதியாண்டில் ₹719 கோடியாக இருந்த பாஜகவின் நன்கொடை தற்போது 200% மேல் அதிகரித்துள்ளது. பாஜகவிற்கு அதிகபடியாக அக்மி சோலார் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து ₹51 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. எ.டி.ஆர். அறிக்கையின்படி காங்கிரஸுக்கு ₹281 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ₹818.50 ஆக இருந்த சிலிண்டர் விலை ₹50 உயர்ந்து ₹868.50-க்கு விற்கப்படுகிறது. கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை உயர்வு அமலாகியுள்ளது. உஜ்வாலா சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு ₹300 மானியத்தோடு, சிலிண்டர் விலை ₹568.50 ஆகவும் விற்பனையாகிறது.
முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய CSK அடுத்த 3 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இன்று சண்டிகரில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியை CSK எதிர்கொள்ள உள்ளது. இன்றைய போட்டியிலாவது CSK முழு திறனையும் காட்டுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கொல்கத்தாவில் நடைபெறும் மற்றொரு போட்டியில் KKR – LSG அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் விளையாடிய 4 போட்டிகளிலும் தலா 2ல் வெற்றி பெற்றுள்ளன.
Sorry, no posts matched your criteria.