India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு டக்கு சுமத்ரா தீவில் நள்ளிரவு 1.19 மணிக்கு பூமிக்கு அடியில் 37 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து, அலறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய மக்கள், சாலையில் தஞ்சமடைந்தனர். இதன் பாதிப்பு குறித்தும், சுனாமி எச்சரிக்கை குறித்தும் உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
டிராகன் படம் மூலம் இளைஞர்களை கிறங்க வைத்தவர் நடிகை கயாது லோஹர். சோஷியல் மீடியாவில் எப்பவும் ஆக்டிவாக இருக்கும் அவர், தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். புன்னகை பூக்கும் முகத்துடன் இருக்கும் அவரை கண்டு ரசிகர்கள் கமெண்ட்டில் ஹார்ட்டின் விட்டு வருகின்றனர். அவர் தற்போது இதயம் முரளி, சிம்புவின் புதிய படத்தில் நடித்து வருகிறார். நடிகை கயாதுவை உங்களுக்கு பிடிக்குமா?
PDS-க்கு தனித் துறை, ஊதிய உயர்வு உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளனர். பல துறைகளின் கட்டுப்பாட்டில் ரேஷன் கடைகள் இயங்குவதால் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகவும், இதனைக் களைய வேண்டும் என அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கருப்புச் சட்டை அணிந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால், ரேஷன் கடைகள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது. இது மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கின்றனர் டாக்டர்கள். ரீல்ஸ் சிறியதாக இருந்தாலும், கண் ஆரோக்கியத்தில் வாழ்நாள் முழுக்க பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அலர்ட் செய்கின்றனர். எனவே, குழந்தைகளை அதிக நேரம் மொபைலில் மூழ்கவிடாமல் தடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். பெரியவர்களும் மொபைல் பயன்பாட்டை குறைப்பது நல்லது என அட்வைஸ் செய்கின்றனர்.
சபாநாயகர் தன்னை மட்டும் குறிவைத்து பேசவிடாமல் தடுக்கிறார் என தவாக தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் சபாநாயகர் முன்பாக கை நீட்டி பேசியதால் அதிகபிரசங்கித்தனமாக நடந்து கொள்வதாக வேல்முருகனை CM ஸ்டாலின் விமர்சித்திருந்தார். அப்போது முதலே உரசல் ஆரம்பித்திருந்தது. இந்தச் சூழலில், அவையில் தான் பேச எழுந்தாலே சபாநாயகர் எரிச்சலடைகிறார் என விமர்சித்துள்ளார்.
தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து, தென்மேற்கு வங்கக்கடல் வழியாகத் தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் கூடிய பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 ரிசல்ட் முன்கூட்டியே வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு வரும் மே 5-ல் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கேற்றார் போல் பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் 83 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக, மே 9-ம் தேதி ரிசல்ட் வெளியாகும் எனக் கூறப்பட்டது.
மார்ச் மாதத்தில் நாட்டின் எரிபொருள் தேவை கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிரடியாக அதிகரித்துள்ளது. அதாவது, முந்தைய மாதங்களை விட 9.3% வரை தேவை அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது பெட்ரோல் தேவை 10.6% ஆகவும், டீசல் தேவை 10% ஆகவும் அதிகரித்து வருகிறது. சமையல் சிலிண்டர் விற்பனையும் 4.2% அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்களை விமர்சனம் என்ற பெயரால், அவமதிக்கும் வகையில் பேசிவிடக் கூடாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். தனிநபராக முரண்பாடு இருந்தாலும், அவர்களின் பதவி பொதுவானது என அவர் குறிப்பிட்டுள்ளார். வக்ஃப் வாரிய சட்ட மசோதாவிற்கு எதிராக பாஜகவை கண்டித்து இன்று விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில் கட்சி நிர்வாகிகளுக்கு திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.
சிலிண்டர் விலை உயர்வை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் சிலிண்டருக்கு ₹100 மானியம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்தும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இப்போதே திமுக அரசு ₹100 மானியம் கொடுத்தால், உஜ்வாலா பயனளிகளுக்கு ₹300 மானியம் உட்பட ஏழைகளுக்கு ₹468.50க்கு சிலிண்டர் கிடைக்கும் என பாஜகவினர் பதிலடி கொடுக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.