India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.8) சவரனுக்கு ₹480 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,225க்கும், சவரன் ₹65,800க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் மந்த நிலை காரணமாகத் தொடர்ந்து 5-வது நாளாக தங்கம் விலை சரிவைக் கண்டுள்ளது கவனிக்கத்தக்கது.
தமிழ்நாட்டின் நம்பர்-1 துரோகி யார் எனக் கேட்டால் அரசியல் தெரியாத 6ஆம் வகுப்பு மாணவன் கூட இபிஎஸ்-ஐ கை காட்டுவான் என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். சுயநலத்துக்காக எந்த எல்லைக்கும் செல்வார், எந்தத் துரோகத்தையும் செய்வார் என்பதற்கு நடமாடும் சாட்சிதான் ஓபிஎஸ் என சாடிய அவர், இபிஎஸ் சுயரூபம் தெரியாமல் அவரை நம்பி மோசம் போன இவர்கள் தான் அந்த தியாகிகள் என்று பதிலடியும் கொடுத்துள்ளார்.
உலக அளவில் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்துவார் என பேசப்பட்டது. ஆனால், அது வெறும் வதந்தி என தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. அதே சமயம் பேச்சுவார்த்தைக்கு முன் வரும் நாடுகளுடன் பேசுவதற்கு தயாராகவே இருக்கிறோம். இஸ்ரேல் பிரதமர் ஏற்கெனவே இது பற்றி விவாதித்தார். இந்தியாவும் பேசி வருகிறது என்றார்.
சிங்கப்பூரில் ஏற்பட்ட தீ விபத்தில் AP Dy CM பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் காயமடைந்தார். பள்ளியில் நடந்த இந்த விபத்தில் அவரது கைகள், கால்களில் காயங்களுடன் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிகாரிகள் பவன் கல்யாணை உடனடியாக சிங்கப்பூர் செல்ல அறிவுறுத்தியும், பழங்குடி மக்களுக்கு உறுதியளித்தபடி இன்று குரிடி கிராமத்திற்கு சென்றுவிட்டு பின்னர் சிங்கப்பூர் செல்வதாக அவர் பதில் அளித்துள்ளார்.
சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்தபடி அதிமுகவினர் இன்று வந்தனர். டாஸ்மாக்கில் நடந்த ஊழலை கண்டித்தும், யார் அந்த தியாகி என கேள்வி எழுப்பியும் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து அதிமுகவினர் பேரவைக்கு சென்றிருந்தனர். அப்போது பதாகைகளை ஏந்தி பேரவைக்குள் அமளியில் ஈடுபட்டதால், இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 2வது நாளாக இன்று கருப்புச் சட்டை அணிந்தபடி பேரவைக்கு வருகை புரிந்துள்ளனர்.
பெண்களுக்கு மாதவிடாய் நெருங்கிவரும் நாட்களில், பப்பாளி சாப்பிட்டால் உடனே மாதவிடாய் வர வாய்ப்புள்ளது. இதற்கு சூடு மட்டுமே காரணமல்ல. பழமாகாத பப்பாளியில் இருக்கும் papain, carpaine என்ற சத்துகள், கருப்பை சுருங்கி கரு முட்டைகள் உடைய தூண்டலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். இதிலுள்ள, வைட்டமின் சி, பீட்டா- கரோட்டின் போன்றவை ஹார்மோன் உற்பத்தியை தூண்டி மாதவிடாய் சுழற்சியை சீராக வைக்க உதவுகிறது. SHARE IT.
வரிக்கு மேல் வரி விதித்து ‘பிளாக்மெயில்’ செய்வதை ஏற்க முடியாது என அமெரிக்காவுக்கு, சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க பொருட்கள் மீதான பரஸ்பர வரியை வாபஸ் பெறாவிட்டால் கூடுதலாக 50% வரியை சீனப் பொருட்களுக்கு விதிப்போம் என டிரம்ப் எச்சரித்திருந்தார். இதனால், எரிச்சலடைந்த சீனா, ‘பிளாக்மெயில்’ செய்வதற்கு பதிலாக, பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் பீன்ஸ் விலை சரிவைக் கண்டுள்ளது. நேற்று ஒரு கிலோ ₹100-க்கு விற்பனையான நிலையில், இன்று ₹60க்கு விற்பனையாகிறது. அதேவேளையில் மாநிலம் முழுவதும் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் மழை காரணமாகத் தக்காளி விலை சற்று உயர்ந்து 1 கிலோ தக்காளி ₹40க்கு விற்பனையாகிறது. மேலும், 1 கிலோ கேரட் – ₹50, உருளைக்கிழங்கு – ₹20, சின்ன வெங்காயம் – ₹70, பெரிய வெங்காயம் – ₹25க்கு விற்பனையாகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், ( ஜன.31 to ஏப்.4) தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை MPக்களின் வருகைப்பதிவு விவரம் வெளியாகியுள்ளது. மொத்தம் 26 நாட்கள் அவை நடந்துள்ள நிலையில், அதிகபட்சமாக திமுக MPக்கள் திருச்சி சிவா, கிரிராஜன், அதிமுக MP தம்பிதுரை ஆகியோர் அனைத்து நாட்களும் வருகை தந்துள்ளனர். ஆனால், மிக குறைந்தபட்சமாக, அன்புமணி வெறும் 6 நாள் மட்டுமே அவைக்கு சென்றுள்ளார்.
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு டக்கு சுமத்ரா தீவில் நள்ளிரவு 1.19 மணிக்கு பூமிக்கு அடியில் 37 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து, அலறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய மக்கள், சாலையில் தஞ்சமடைந்தனர். இதன் பாதிப்பு குறித்தும், சுனாமி எச்சரிக்கை குறித்தும் உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
Sorry, no posts matched your criteria.