India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ தனிக்கட்சி தொடங்குவது குறித்தோ முடிவெடுக்கவில்லை என OPS கூறியுள்ளார். அதிமுகவை காக்கவும், பிரிந்தவர்களை ஒன்றிணைக்கவும் தான் தற்போது வரை போராடிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அதிமுகவில் மீண்டும் சேர நான் ரெடி என்ற அவர், அண்ணன் எடப்பாடி ரெடியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

TN-ல் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். தனது X-ல், சென்னையில் <<18991526>>அரசு கலைக்கல்லூரியில் பெண்<<>> ஒருவருக்கு 3 நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், TN-ல் பெண்கள் பாதுகாப்பு குறித்து பொய் பேசும் CM ஸ்டாலின், இனியாவது உண்மையை உணர்ந்து பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ரஜினி, கமல் இணையும் படத்தை நெல்சன் இயக்குவது உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. தெலுங்கில் ஜூனியர் NTR படத்தை முடித்தவுடன், இப்படத்தின் பணிகளை நெல்சன் தொடங்கவுள்ளாராம். ஜெயிலர் 2-விற்கு மாஸான புரொமோ வெளியானது போல இப்படத்திற்கும் புரொமோஷூட் திட்டமிடப்பட்டுள்ளதாம். வரும் மார்ச் மாதத்தில் ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில், அனிருத்தின் இசையில் புரொமோஷூட் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

கோவையில் சர்வதேச ஜவுளித்துறை மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய CM ஸ்டாலின், ஜவுளி நிறுவனங்கள் அதிநவீன இயந்திரங்கள் வாங்க 20% மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்காக ஆண்டுக்கு ₹30 கோடி ஒதுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் ஜவுளித் துறையில் TN-ன் பங்களிப்பு 33% உள்ளது எனவும் ஆயத்த ஆடைத் தொழிலில் மிகப்பெரிய ஏற்றுமதி மாநிலம் TN-தான் என்றும் கூறினார்.

அண்ணா பல்கலை., கொடூரம் போல, சென்னை நந்தனம் அரசுக் கலைக்கல்லூரியில் மற்றொரு மிருகத்தனமான சம்பவம் நடந்துள்ளது. கல்லூரி கேண்டீனில் பணிபுரியும் பெண்ணுக்கு, சமையல் மாஸ்டரான குணசேகர் மற்றும் சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். தனக்கு நேர்ந்த கொடூரத்தை அழுதுகொண்டே காவலாளியிடம் அப்பெண் கூறியிருக்கிறார். இதுகுறித்த புகாரின் பேரில், குணசேகரை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

கனிமொழி – ராகுல் சந்திப்பில் காங்., பல டிமாண்ட்களை அடுக்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது, 39 தொகுதிகள், து.சபாநாயகர் பதவி, 2 ராஜ்யசபா சீட், 5 வாரிய தலைவர்கள் பதவி, உள்ளாட்சி தேர்தலில் 20 சீட் வேண்டும் என காங்., கோரிக்கை வைத்துள்ளதாம். அத்துடன், ஒருவேளை தேர்தலுக்கு பிறகு திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் ‘ஆட்சியில் பங்கு’ தரவேண்டும் எனவும் காங்கிரஸ் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதுவரை கூட்டணி முடிவை அறிவிக்காத தேமுதிக, NDA கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், சென்னையில் பிப்.3-ம் தேதி கூட்டணி குறித்து அறிவிப்பேன் என்று பிரேமலதா உறுதிபடத் தெரிவித்துள்ளார். அதேநேரம், தமிழகத்தில் உள்ள கட்சிகளுடனும், மத்திய அரசுடனும் தேமுதிக நல்ல நட்புறவுடன் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கலாம்?

கார் ரேஸிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் அஜித்குமாரை, தமிழ் திரையுலகினர் பலரும் ரேஸிங் களத்தில் சந்தித்து வருகின்றனர். தற்போது துபாயில் உள்ள அஜித்தை, நடிகர் மாதவன் சந்தித்துள்ளார். ஏற்கெனவே, கடந்த ஆண்டும் துபாயில் இருந்த போது, அஜித்தை மாதவன் நேரில் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘F1’ படத்தை, இவர்களை வைத்து யாராவது ரீமேக் பண்ணுங்களேன் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சென்னை பெருநகரில், ₹6,495 கோடியில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருவதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் சென்னையில் 2015-ல் செயற்கை வெள்ளம் உருவாக்கப்பட்டதாக கூறிய அவர், தற்போது இயற்கை எவ்வளவு மழை தந்தாலும் சமாளிக்கும் ஆற்றலை சென்னைக்கு உருவாக்கி உள்ளோம் என்றார். மேலும், மக்களின் தேவையை புரிந்துகொண்டு மெட்ரோ வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தது திமுக அரசுதான் எனவும் தெரிவித்துள்ளார்.

தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சம் தொட்டு நகைப் பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 1 கிராம் வெள்ளி ₹25 உயர்ந்து ₹425-க்கும், 1 கிலோ வெள்ளி ₹25,000 உயர்ந்து ₹4.25 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தொடரும் விலை ஏற்றத்தால் வரும் நாள்களிலும் விலை அதிகரித்துக் கொண்டே செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.