India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல ஆபாசப்பட நடிகை அன்னா போல்லி மரணம் குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 2 மாதங்களுக்கு முன், ஹோட்டல் பால்கனியில் இருந்து தவறிவிழுந்து அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், அப்போது இரண்டு ஆண்களுடன் ஒரே நேரத்தில் உடலுறவு கொள்ளும் காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும் போது, அன்னா தவறி விழுந்து இறந்ததாக தற்போது தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்கிறது.
முதல்வரை பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாற்றவும், துணை வேந்தர்களை மாநில அரசே நியமிப்பதற்கும் அதிகாரமளிக்கும் தீர்மானங்கள் ஜன. 5 1994-ல் அப்போதைய CM ஜெயலலிதாவால் TN சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதற்கு ஒப்புதல் அளிக்க அப்போதைய கவர்னர் சென்னா ரெட்டி மறுத்துவிட்டார். அதே தீர்மானங்களை 2022-ல் நிறைவேற்றிய CM ஸ்டாலின், சட்டப் போராட்டம் நடத்தி கோர்ட் மூலம் அந்த அதிகாரத்தைப் பெற்றுள்ளார்.
டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பு எச்சரிக்கையால், உலக பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. நேற்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 32 காசுகள் குறைந்து ₹85.76-ஆக இருந்தது. இந்த சரிவு இன்றும் தொடர்ந்தது. காலையில் ₹85.89-ஆக தொடங்கி பின்னர் வர்த்தக நேர முடிவில் ₹86.26-ஆக நிறைவடைந்தது. இது நேற்றைய மதிப்புடன் ஒப்பிடுகையில் 50 காசுகள் குறைவு. கடந்த 3 மாதங்களில் இது பெரிய வீழ்ச்சி.
KKR அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் LSG அணி இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்களான மார்க்ரம் & மார்ஷ் அபாரமாக விளையாடி, முறையே 47 & 81 ரன்கள் எடுத்தனர். அதன் பின் களமிறங்கிய நிக்கோலஸ் பூரனும் 36 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. சேஸ் செய்யுமா கொல்கத்தா அணி?
‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தின்கீழ் எந்த ரேஷன் கடையிலும் மக்கள் பொருள்களை வாங்கலாம் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அவர் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில், TN-ல் முதல்கட்டமாக 3,139 ரேஷன் கடைகளும், 2-ம் கட்டமாக 5,000 கடைகளும் நவீனமயம் ஆக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 3-ம் கட்டமாக 10,000 கடைகள் நவீனமயமாக்கப்பட இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2008 மே மாதம் 8 குண்டுகள் வெடித்ததில் 71 பேர் பலியான நிலையில், 180 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் அஸ்மி, ஷாபாஸ், சைஃப்-உர்-ரஹ்மான், முகமது சயீப்-க்கு சிறப்பு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இதே வழக்கில் முன்பு 4 பேருக்கும் தூக்கு விதிக்கப்பட்டது. அதன் மேல்முறையீடு மனு SC-ல் நிலுவையில் உள்ளது.
Dire Wolf என்ற ஓநாய் இனம் 13,000 ஆண்டுகளுக்கு முன் பூமியில் இருந்து முற்றிலுமாக மறைந்தது. இதுகுறித்து, Game of Thrones என்ற ஆங்கில வெப் சீரிஸில் பேசியிருப்பார்கள். அந்த ஓநாய்களின் DNAக்களைக் கொண்டு ஆய்வாளர்கள் அதற்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளனர். ரெமுஸ் & ரோமுலஸ் என்ற பெயர் கொண்ட இந்த இரண்டு ஓநாய்கள்தான் அழிந்து போன உயிரினத்தில் இருந்து பிறந்த முதல் உயிரினங்கள்.
கடந்த 4 ஆண்டுகளில் TN முழுவதும் 18,46,013 புது ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அவர் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில், மே 2021 முதல் மார்ச் 2025 வரை புது ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2017 முதல் ஆதார் மற்றும் செல்போன் எண்களின் பதிவு அடிப்படையில் மின்னணு ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதில், மார்க்ரம் 28 பந்துகளுக்கு 47 ரன்கள் எடுத்து, ஹர்ஷித் ராணா பந்தில் போல்ட் ஆனார். மற்றொரு வீரரான மார்ஷ், அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். இதுவரை, 11 ஓவர்கள் பேட்டிங் செய்திருக்கும் லக்னோ அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய பங்குச்சந்தைகள் நேற்று வரலாற்று சரிவை சந்தித்த நிலையில், இன்று சற்று மீட்சியடைந்திருக்கின்றன. டிரம்ப்பின் அதிரடி பொருளாதார அறிவிப்புகளால் நேற்று நிஃப்டி சுமார் 885 புள்ளிகள் சரிந்தது. இதனால், முதலீட்டாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில், அவர்களின் காயத்திற்கு மருந்து போடும் விதமாக, இன்று நிஃப்டி 381 புள்ளிகள் உயர்ந்து, 22,543 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கிறது.
Sorry, no posts matched your criteria.