news

News April 8, 2025

சொந்த நாட்டு மக்களுக்கே ஆப்பு வைத்த டிரம்ப்?

image

டிரம்பின் வரி உயர்வு அறிவிப்பு அவருக்கே பேக் ஃபயர் ஆகும் என JPMorgan Chase & Co நிறுவனத்தின் CEO ஜேமி டிமோன் எச்சரித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் இறக்குமதி, உள்ளூர் பொருள்களின் விலை உயர்ந்து, பணவீக்கம் அதிகரிக்கும் எனவும், நிறுவனங்களையும், மக்களையும் நேரடியாக பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வளர்ந்து வரும் பொருளாதார நாடான இந்தியாவுடன் நட்புறவை பேணவும் அறிவுறுத்தியுள்ளார்.

News April 8, 2025

சித்திரை திருவிழாவுக்கு ரெடியா?

image

மதுரையில் வெகு பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா மே 8-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் உச்சமான, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு மே 12-ம் தேதி நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்றைய தினம், தமிழகம் முழுவதிலும் உள்ள பக்தர்கள் வைகை ஆற்றங்கரையில் கூடி நின்று அழகரை வழிபடுவர்.

News April 8, 2025

EV வைத்திருப்பவர்களுக்கு சூப்பர் நியூஸ்!

image

EV வாகனங்களை எளிதில் சார்ஜிங் செய்ய ஏதுவாக, தமிழகம் முழுவதும் பொது சார்ஜிங் மையங்களை அமைக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் 100, மற்ற பகுதிகளில் தலா 5 முதல் 10 வரை சார்ஜிங் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் போதிய இடம் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News April 8, 2025

டிரம்ப்புடன் தான் கூட்டணி: சீமான்

image

டிரம்ப்புடன் கூட்டணி வைக்கப் போவதாக சீமான் சிரித்தவாறு தெரிவித்துள்ளார். திருச்சி கோர்ட்டில் ஆஜராக வந்த போது பேட்டியளித்த அவர், அடிப்படை அரசியல் மாற்றத்தை உருவாக்க வந்தவன் என்பதால், 2026 தேர்தலிலும் தனித்துதான் போட்டியிட உள்ளதாகவும், தமிழகத்தில் அதிக வழக்குகளை சந்தித்த ஒரே கட்சி தாங்கள் தான் எனவும் கூறியுள்ளார். மேலும், கோர்ட், ஜெயில் கட்டப்பட்டதே தங்களுக்காக தான் எனவும் தெரிவித்துள்ளார்.

News April 8, 2025

சிறந்த வீரர் ஆவாரா ஷ்ரேயஸ் ஐயர்?

image

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து ICC கவுரவித்து வருகிறது. அதில், மார்ச் மாதத்திற்கான பரிந்துரை பட்டியல் வெளியாகியிருக்கிறது. இதில், இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர், நியூசிலாந்து வீரர்கள் ஜேக்கப் டஃபி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். வீராங்கனைகளுக்கான பட்டியலில் அமெரிக்காவின் சேத்னா பிரசாத், ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வோல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

News April 8, 2025

இப்படியா சாவு வரணும்… நடிகைக்கு நேர்ந்த சோகம்

image

பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல ஆபாசப்பட நடிகை அன்னா போல்லி மரணம் குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 2 மாதங்களுக்கு முன், ஹோட்டல் பால்கனியில் இருந்து தவறிவிழுந்து அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், அப்போது இரண்டு ஆண்களுடன் ஒரே நேரத்தில் உடலுறவு கொள்ளும் காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும் போது, அன்னா தவறி விழுந்து இறந்ததாக தற்போது தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்கிறது.

News April 8, 2025

ஜெயலலிதா தவறவிட்டதை சாதித்து காட்டிய ஸ்டாலின்..!

image

முதல்வரை பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாற்றவும், துணை வேந்தர்களை மாநில அரசே நியமிப்பதற்கும் அதிகாரமளிக்கும் தீர்மானங்கள் ஜன. 5 1994-ல் அப்போதைய CM ஜெயலலிதாவால் TN சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதற்கு ஒப்புதல் அளிக்க அப்போதைய கவர்னர் சென்னா ரெட்டி மறுத்துவிட்டார். அதே தீர்மானங்களை 2022-ல் நிறைவேற்றிய CM ஸ்டாலின், சட்டப் போராட்டம் நடத்தி கோர்ட் மூலம் அந்த அதிகாரத்தைப் பெற்றுள்ளார்.

News April 8, 2025

பயங்கர சரிவு: ரூபாய் மதிப்பு 50 காசுகள் வீழ்ச்சி

image

டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பு எச்சரிக்கையால், உலக பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. நேற்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 32 காசுகள் குறைந்து ₹85.76-ஆக இருந்தது. இந்த சரிவு இன்றும் தொடர்ந்தது. காலையில் ₹85.89-ஆக தொடங்கி பின்னர் வர்த்தக நேர முடிவில் ₹86.26-ஆக நிறைவடைந்தது. இது நேற்றைய மதிப்புடன் ஒப்பிடுகையில் 50 காசுகள் குறைவு. கடந்த 3 மாதங்களில் இது பெரிய வீழ்ச்சி.

News April 8, 2025

KKR அணிக்கு இமாலய இலக்கு

image

KKR அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் LSG அணி இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்களான மார்க்ரம் & மார்ஷ் அபாரமாக விளையாடி, முறையே 47 & 81 ரன்கள் எடுத்தனர். அதன் பின் களமிறங்கிய நிக்கோலஸ் பூரனும் 36 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. சேஸ் செய்யுமா கொல்கத்தா அணி?

News April 8, 2025

எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: TN அரசு

image

‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தின்கீழ் எந்த ரேஷன் கடையிலும் மக்கள் பொருள்களை வாங்கலாம் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அவர் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில், TN-ல் முதல்கட்டமாக 3,139 ரேஷன் கடைகளும், 2-ம் கட்டமாக 5,000 கடைகளும் நவீனமயம் ஆக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 3-ம் கட்டமாக 10,000 கடைகள் நவீனமயமாக்கப்பட இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!