India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எஸ்.ஆர்.எம். பல்கலை., நிகழ்ச்சியில் அண்ணாமலை – சீமான் ஒன்றாக கலந்துக் கொண்டது அரசியல் ரீதியாக பேசுபொருளானது. இந்நிலையில், அண்ணாமலை எனக்கு நல்ல நண்பர். நான் டிரம்ப், புதினோடு தான் நெருக்கமாக இருக்கிறேன் என்று சிரித்துக் கொண்டே பதிலடி கொடுத்தார். மேலும், அண்ணாமலை இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பார்க்கிறார். நான் தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவை பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
<<16028754>>தங்கம் விலை<<>> சரிந்த போதிலும் விற்பனையும் அதிகரிக்கவில்லை என வியாபாரிகள் கூறியுள்ளனர். மேலும், விலை குறையும் என்ற எதிர்பார்ப்பே விற்பனை சரிவுக்கு காரணம் எனவும் விளக்கம் அளித்துள்ளனர். இதனிடையே, டிரம்பின் வரி விதிப்பினால், 2021-ல் இருந்த அதே விலையை தற்போது கச்சா எண்ணெய் தொட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 20% குறைவாகும். கச்சா எண்ணெய் விலை குறையும் போது தங்கம் விலை குறையும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அடுத்த 3 நாள்களுக்கு மாநிலம் முழுவதும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. மேலும், தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்ததாகவும், இது புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் கணித்துள்ளது. அதேநேரம் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கவர்னருக்கு பதில் முதல்வரை பல்கலை., வேந்தராக்குவதற்கான மசோதா, கால்நடை பல்கலை திருத்த மசோதா, மீன்வள பல்கலை திருத்த மசோதா, அம்பேத்கர் சட்டப் பல்கலை, TN MGR மருத்துவ பல்கலைக்கு முதல்வரை வேந்தராக்கும் மசோதா, வேளாண் பல்கலை, தமிழ் பல்கலை சட்டத் திருத்த மசோதா, TN பல்கலைகள் 2ம் திருத்த மசோதா, கால்நடை 2ம் திருத்த மசோதா, மீன்வள பல்கலை 2வது திருத்த மசோதா ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
வரலாற்றில் முதல்முறையாக மசோதாக்கள் மீது முடிவெடுக்க TN கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து அளித்த தீர்ப்பு, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என CM ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும், கவர்னர் நிறுத்தி வைத்த 10 மசோதக்களுக்கும் உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், அவர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.
பிரபல நடனக் கலைஞர் ராம் சஹாய் பாண்டே(92) உடல் நலக்குறைவால் காலமானார். மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த இவர் 18 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புற நடன நிகழ்ச்சிகளை நடத்தி இந்தியாவின் பெருமையை உலகறிய செய்தவர். இவரது கலைச் சேவையைப் பாராட்டிக் கடந்த 2022-ல் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. ராம் சஹாய் மறைவுக்கு மத்தியப் பிரதேச CM உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சிமெண்ட் விலை இம்மாதம் உயர வாய்ப்புள்ளதாக நுவாமா வெல்த் (Nuvama Wealth) நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு தொடக்கத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சிமெண்ட் விலை சற்று உயர்ந்த நிலையில், கிழக்கு மாநிலங்களில் கடந்த மாதம் மூட்டைக்கு ₹5 – ₹7 வரை குறைந்தது. இந்நிலையில், செலவின அதிகரிப்பு காரணமாக மீண்டும் இம்மாதத்தில் சிமெண்ட் விலை மூட்டைக்கு ₹20 வரை உயர வாய்ப்புள்ளதாக நுவாமா கணித்துள்ளது.
மோடிக்காகத்தான் அரசியலுக்கு வந்தேன்; அவர் கிணற்றில் குதி என்று சொன்னால், கண்ணை மூடிக்கொண்டு குதிப்பேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். பதவிகள் வரும், போகும். அதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை; மாநிலத் தலைவர் பதவி இருக்காது என்பதால், தொண்டனோடு தொண்டனாக இருந்து போராட்டத்தை நடத்துவேன் என்றும் திமுகவின் ஊழலை தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
TN பல்கலைக்கழக வேந்தர் பொறுப்புகளில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி விடுவிக்கப்பட்டுள்ளதாக திமுக MP வில்சன் தெரிவித்துள்ளார். கவர்னருக்கு பதில் பல்கலை.களுக்கு TN CM–ஐ வேந்தராக்கும் மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை குறிப்பிட்டு பேசிய அவர், இனி கவர்னர் வேந்தர் இல்லை என கூறியுள்ளார். TN பல்கலை.களுக்கு இனி அரசே துணை வேந்தர்களை நியமிக்கும் எனவும் தெரிவித்தார்.
நெல்லை டவுன் பகுதியில் நள்ளிரவில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இளைஞர் ஆறுமுகம் என்பவரை வெட்டிக் கொன்று, உடலை புதைத்துவிட்டு தப்பியோடிய சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது தங்கையை காதலித்ததால், ஒரு வருடம் பிளான் செய்து ஆறுமுகத்தை கொலை செய்ததாக கைதானவர்களில் ஒருவரான விஷால் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.