India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வீட்டில் நாய் வளர்ப்பது ஒரு அழகான அனுபவமாகும். இதற்கு பொறுப்பும் நேரமும் தேவை. நாயை அன்புடன் கவனித்தால் அது வாழ்நாள் முழுவதும் நம்மை நம்பிக்கையுடன் நேசிக்கும். வீட்டில் நாய் வளர்ப்பதற்கு முன் தெரிந்திருக்க வேண்டிய 8 முக்கிய விஷயங்கள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு நாய் பிடிக்குமா? கமெண்ட் பண்ணுங்க.

இரவில் ஹாரர் படங்கள் பார்ப்பதை சிலர் வழக்கமாக வைத்திருப்பர். பயத்துடன் அந்தப் படங்களை பார்த்தாலும், அந்த வழக்கத்தை கைவிட மாட்டார்கள். இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், தூங்கச் செல்லும் முன்பு, அதாவது 10 மணிக்கு அத்தகைய படத்தைப் பார்ப்பது, மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் அதிகரிக்கச் செய்யும். இது தூக்கத்தை பாதிக்கும் எனத் தெரிய வந்துள்ளது. நீங்கள் இரவில் ஹாரர் படம் பார்ப்பவரா? கமெண்ட் பண்ணுங்க.

தாய்லாந்தில், ‘வாடகை மனைவி’ கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. பட்டாயா போன்ற சுற்றுலா தலங்களுக்கு வரும் வெளிநாட்டினர், அங்குள்ள பார்கள், நைட்கிளப்கள், ரெஸ்டாரன்ட்ஸில் உள்ளூர் பெண்களை சந்தித்து, பிடித்தால் வாடகைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். மனைவியாகவோ, கேர்ள் ஃபிரண்டாகவோ கொஞ்ச நாள் இருக்க ₹1 லட்சம் முதல் ₹1 கோடி வரை கட்டணம் வாங்குகிறார்களாம். சில நேரம் வாடகை மனைவி நிரந்தர மனைவியாக மாறுவதும் உண்டாம்.

பாஜகவின் தேர்தல் செயல்பாடுகள், பிரசாரங்களை பார்க்க டென்மார்க், ஆஸ்திரேலியா, பூடான், தென்னாப்பிரிக்கா, UK, ஜப்பான், இந்தோனேசியா நாட்டு தூதர்கள் பிஹாருக்கு இன்று முதல் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளனர். பாஜக மூத்த தலைவர்களை சந்திப்பது, முக்கிய தொகுதிகளுக்கு பயணிப்பது உள்ளிட்ட பணிகளை தூதர்கள் மேற்கொள்ள உள்ளனர். இதற்கு முன்பு குஜராத், இமாச்சல் தேர்தல்கள் நடந்த போதும் அவர்கள் பயணித்துள்ளனர்.

தங்கத்தை போன்று வெள்ளியை அடகு வைத்தும் கடன் பெறும் வசதி 2026 ஏப்ரலில் இருந்து நடைமுறைக்கு வரும் என ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதில் முக்கிய அம்சமாக, கடனை திருப்பி செலுத்திய பிறகு அடகு வைத்த பொருள்களை உடனடியாக வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தாமதம் செய்தால், ஒவ்வொரு நாளைக்கும் ₹5,000 அபராதம் செலுத்தி வாடிக்கையாளரிடம் நகையை ஒப்படைக்க வேண்டும் என வங்கிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதியின் தாயார் ஹேம்வந்தி தேவி (89) காலமானார். உடல்நலக் குறைவால் அவர் காலமானதாகவும், நேற்று அவரது இறுதிச் சடங்குகள் நிறைவடைந்ததாகவும் பங்கஜ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பாலிவுட்டில் முக்கிய நடிகராக விளங்கும் பங்கஜ் தமிழில் காலா படத்தில் போலீஸ் SI கதாபாத்திரத்தில் நடித்தவர். இவரின் மிர்ஸாபூர் சீரிஸும் தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

பாதாமில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆக்ஸிஜனேற்றிகள், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. தினமும் ஒரு கைப்பிடி பாதாம் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த பாதாம் நன்மைகளை கமெண்ட்ல சொல்லுங்க.

‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. இவர் தற்போது சத்ய சாய் பாபா பற்றி ‘அனந்தா’ என்ற பக்தி படத்தை இயக்கி வருவதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெகபதி பாபு, சுஹாசினி, ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தொகுப்பாளரும், நடிகையுமான VJ அர்ச்சனா, தனது கணவருடன் ஏற்பட்ட சண்டையால் தற்கொலை செய்து கொண்டதாக ஒருவர் யூடியூபில் வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பியுள்ளார். இதை பார்த்து கடுப்பான அர்ச்சனா, அந்த வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், டேய்! புருஷன் கூடச் சண்டை போட்டுத் தற்கொலை… நோ சான்ஸ்! அவரை நான்தான் அடிப்பேன் என்று அர்ச்சனா பதிலடி கொடுத்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து காங்., பாக்., இன்னும் மீளவில்லை என PM மோடி தெரிவித்துள்ளார். பிஹார் பிரசாரத்தில் பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நாடே கொண்டாடிய நிலையில், காங்., RJD அதை விரும்பவில்லை. இதனால் காங்கிரஸ் அரச குடும்பத்தின் தூக்கம் பறிபோய்விட்டதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், CM பதவிக்காக எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதாகவும் விமர்சித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.